அக்குளில் உள்ள கருமை மற்றும் துர்நாற்றம் நீங்க இதை ஒருமுறை மட்டும் தடவுங்கள் போதும்!!

0
160
#image_title

அக்குளில் உள்ள கருமை மற்றும் துர்நாற்றம் நீங்க இதை ஒருமுறை மட்டும் தடவுங்கள் போதும்!!

உங்களில் பலரது அக்குள் கருமை நிறத்தில் காணப்படும்.அதுமட்டும் இன்றி அந்த பகுதியில் அதிகளவு வியர்வை சுரப்பதினால் கடுமையான துர்நாற்றம் வீசும்.இதனால் பொதுவெளிகளில் நடமாட சிரமமாக இருக்கும்.இந்த அக்குள் கருமை மற்றும் துர்நாற்றத்திற்கு நிரந்தர தீர்வு காண கீழே கொடுக்கப்பட்டுள்ள கை வைத்தியத்தை தொடர்ந்து ஒரு மாதம் செய்து வரவும்.

தேவையான பொருட்கள்:-

1)சந்தனம்

2)எலுமிச்சை சாறு

3)சோடா உப்பு

4)பன்னீர்

முதலில் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி இரு அக்குள் பகுதியிலும் 5 நிமிடங்கள் வரை தேய்த்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி சந்தனம் சேர்த்துக் கொள்ளவும்.அதன் பின்னர் அதில் 1/4 தேக்கரண்டி சோடா உப்பு சேர்த்து கலந்து விடவும்.

அதன் பிறகு அதில் 3 தேக்கரண்டி பன்னீர் சேர்த்து நன்கு குழைத்துக் கொள்ளவும்.இந்த பேஸ்டை அக்குள் பகுதியில் தடவி 1/2 மணி நேரம் கழித்து குளித்து வந்தால் அக்குள் கருமை மற்றும் துர்நாற்றம் முழுமையாக நீங்கிவிடும்.

இந்த முறையை தொடர்ந்து ஒரு மாதம் செய்தால் அக்குள் கருமை மற்றும் துர்நாற்றத்தில் இருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும்.