இதை மட்டும் செய்து பாருங்கள், நீங்கள் செய்யும் தொழிலில் பணமழை கொட்டோ கொட்டுன்னு கொட்டும்!

0
212

இதை மட்டும் செய்து பாருங்கள், நீங்கள் செய்யும் தொழிலில் பணமழை கொட்டோ கொட்டுன்னு கொட்டும்!…

 

இந்த உலகத்தில் மனிதராக பிறந்த அனைவரும் அயராது பாடுபட்டால் தான் நம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் நிறைவேறும். சிலர் சுயமாக தொழில், வியாபாரங்கள் செய்து அதன் மூலம் பொருள் ஈட்டுகின்றனர்.தொழிற்துறையில் போட்டிகள் வலுப்பெற்று கொண்டிருக்கும் இக்காலத்தில் சொந்த வியாபாரத்தை செம்மைப்படுத்தி லாப நோக்கில் கொண்டு செல்வது எப்படி? என்ற கேள்வி இருக்கத்தான் செய்கிறது. தொழில், வியாபாரங்களில் நஷ்டங்களை தவிர்க்கவும், லாபங்கள் அதிகம் பெறவும் முன்னோர்களால் சில பரிகாரங்கள் அன்றைய காலங்களிலேயே கணித்திருக்கின்றார்கள்.

அதில் ஒன்று தான் வியாபார விருத்தி யந்திரம். வியாபார விருத்தி யந்திரத்தை வைத்து தினமும் பூஜை செய்து வந்தால் தொழில் மற்றும் வியாபார விருத்தி ஏற்பட்டு லாபம் உண்டாகும் என நம்பப்படுகிறது.மன அமைதியுடன் வியாபாரம் நடக்க வழிவகை செய்யும். வியாபார விருத்தி, தொழில் முன்னேற்றம் தரும்.தொழில் போட்டிகளை சமாளித்து சிறந்த லாபம் பெற செய்யும்.தொழிலில் உள்ள தடைகளை நிவர்த்தி அடைய செய்யும்.தொழிலில் வருமானம் பெருகும்.

புதிய முதலீடுகள்,விரிவாக்கம், பணியாளர்கள் கிடைக்கப் பெறுவார்கள்.தொழில் சார்ந்த கண் திருஷ்டி, பொறாமை நீங்கும்.இது வியாபாரிகள், வணிகர்கள், புதியதாக தொழில் தொடங்குபவர்கள் அனைவருக்குமான சிறந்த யந்திரம். சக்திமிக்க இந்த யந்திரங்களை தொழிற்கூடங்களில் கிழக்கு முகமாக வைத்து வணங்க வேண்டும்.வாரம் ஒரு முறை அல்லது அமாவாசை மற்றும் பௌர்ணமி போன்ற நாட்களில் சந்தனம், குங்குமம் கலந்து பொட்டு வைத்து கதம்ப மாலை சாற்றி வழிபாடு செய்து வர நன்மைகள் நடக்கும் என்பது ஐதீகம். இந்த முறையினை காலங்காலமாக நம் மனிதர்கள் செய்து வருகின்றார்கள். கடவுள் நம்பிக்கை இருந்தால் நீங்களும் இதை செய்து பாருங்கள் கண்டிப்பாக பலன் கிடைக்கும்.

 

 

author avatar
Parthipan K