மஹாலட்சுமி தாயாரின் அருளுடன் வீட்டில் செல்வம் நிலைத்திருக்க இதை மட்டும் செய்யுங்கள்!!

0
26
#image_title

மஹாலட்சுமி தாயாரின் அருளுடன் வீட்டில் செல்வம் நிலைத்திருக்க இதை மட்டும் செய்யுங்கள்!!

*தினமும் எழுந்த உடன் முதலில் உங்கள் உள்ளங்கைகள் அல்லது குழந்தையின் முகம் அல்லது கடவுள் படங்களை பார்க்கவும்.

*வாரத்திற்கு இருமுறையாவது வீடு மற்றும் பூஜை அறையை கழுவி சுத்தம் செய்யும் பழக்கத்தை கொண்டிருக்க வேண்டும்.

*வீட்டின் கதவு மற்றும் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகள் வீட்டிற்குள் வராது.

*பூஜை அறையில் சாமி படங்களுக்கு தினந்தோறும் பூக்களை படைக்க வேண்டும்.

*பூஜை அறையில் வாசனை திரவியங்கள் வைப்பதன் மூலம் ஒரு தெய்வீக மணம் வீசுவதோடு நம் மனநிலையும் மகிழ்ச்சியாகும்.

*தினந்தோறும் வீட்டில் காலை மாலை வேளைகளில் பூஜை அறையில் தீபம் ஏற்ற வேண்டும்.
பூஜை அறையில் ஏற்றப்படும் தீபங்களை நாமாக அணைக்கக் கூடாது. அது தானாக முழுவதும் எரிந்து அணைதல் மிகவும் நல்லது.

*கடவுளுக்கு வாழை இலைகளில் தான் உணவு மற்றும் பழங்களை வைத்து படைக்க வேண்டும்.

*தினமும் ஒரு ஐந்து நிமிடங்களாவது வீட்டு பூஜை அறையில் அமர்ந்து கடவுளை வணங்க வேண்டும்.

*பூஜை அறையில் எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.சாமி படங்களிடம் உலர்ந்த பூக்களை விட்டு வைக்க கூடாது.