இளம் வயது வழுக்கை பிரச்சனையில் இருந்து விடுபட இந்த ஸ்ப்ரே பயன்படுத்துங்கள் போதும்!!

0
62
#image_title

இளம் வயது வழுக்கை பிரச்சனையில் இருந்து விடுபட இந்த ஸ்ப்ரே பயன்படுத்துங்கள் போதும்!!

இன்றைய காலத்தில் பெரியவர்கள் முதல் இளம் வயது ஆட்கள் வரை அனைவரும் சந்தித்து வரும் பிரச்சனை வழுக்கை.இதற்கு காரணம் வாழ்க்கை முறை மாற்றம்,உணவு முறை மாற்றம்.

முடிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காவிட்டால் பொடுகு,முடி உதிர்தல்,வழுக்கை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.முறையற்ற தூக்கம்,மன அழுத்தம்,ரசாயனம் கலந்த ஷாம்புவை தலைக்கு உபயோகிப்பது போன்றவைகளால் இளம் வயது வழுக்கை ஏற்படுகிறது.இதனால் விரைவில் வயதான தோற்றத்தை அடையும் சூழல் ஏற்பட்டு விடுகிறது.இதற்கு இயற்கை முறையில் தீர்வு காண்பது மிகவும் அவசியம் ஆகும்.

தேவையான பொருட்கள்:-

*கருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி

*வெந்தயம் – 1 தேக்கரண்டி

*இஞ்சி துருவல் – 1 இன்ச் அளவு

*செம்பருத்தி பூ பொடி – 1 தேக்கரண்டி

செய்முறை:-

உரலில் கருஞ்சீரகம் 1 தேக்கரண்டி மற்றும் வெந்தயம் 1 தேக்கரண்டி போட்டு நன்கு இடித்து கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றவும்.அவை நன்கு கொதிக்கும் சமயத்தில் இடித்து வைத்துள்ள கருஞ்சீரகம் + வெந்தயப் பொடியை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.

பிறகு செம்பருத்தி பூ பொடி அல்லது மகரந்தம் நீக்கிய செம்பருத்தி பூ 2 எடுத்து கொதிக்கும் கலவையில் சேர்க்கவும்.நன்கு கொதித்து நிறம் மாறி வந்த பின்னர் அணைக்கவும்.

இந்த கலவை நன்கு ஆறிய பிறகு ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி கொள்ளவும்.பின்னர் தலை முழுவதும் செய்து வைத்துள்ள கலவையை ஸ்பிரே செய்ய வேண்டும்.குறிப்பாக வழுக்கை காணப்படும் இடங்களில் ஸ்பிரே செய்து மசாஜ் செய்து வந்தோம் என்றால் புதிதாக முடி வளரத் தொடங்கும்.இந்த ஸ்பிரேவை தலையில் போட்ட பின்னர் தலைக்கு குளிக்க வேண்டியது கட்டாயம் இல்லை.தொடர்ந்து இதை பயன்படுத்தி வந்தோம் என்றால் இளம் வயது வழுக்கை எற்படாது.