கேரளா ஸ்டைல் தேங்காய் கோழி குழம்பு – செய்வது எப்படி?

0
100
#image_title

கேரளா ஸ்டைல் தேங்காய் கோழி குழம்பு – செய்வது எப்படி?

கோழி இறைச்சியில் கேரளா ஸ்டைலில் குழம்பு செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

தேவையான பொருட்கள்:-

1)கோழி கறி – 3/4 கிலோ
2)சின்ன வெங்காயம் – 1/4 கப்
3)தாக்களி – 1(பொடியாக நறுக்கியது)
4)பச்சை மிளகாய் – 3(நறுக்கியது)
5)இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
6) தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
7)மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
8)கொத்தமல்லி பொடி – 2 தேக்கரண்டி
9)தேங்காய் துண்டு – 1 கப்
10)மிளகுத் தூள் – 1 தேக்கரண்டி
11)கருவேப்பிலை – 1 கொத்து
12)மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
13)உப்பு – தேவையான அளவு
14)கடுகு – 1/2 தேக்கரண்டி
15)மல்லி தழை – சிறிதளவு

செய்முறை…

சிக்கனை சுத்தம் செய்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி தூள் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து 1/2 மணி நேரத்திற்கு ஊற விடவும்.

பிறகு சின்ன வெங்காயம், தக்காளி, மிளகாய், மல்லி தழை ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பிறகு தேங்காய் துண்டு 1 கப் அளவு நறுக்கி வைத்துக் கொள்ளவும். அதில் பாதி கப் தேங்காய் துண்டுகளை அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்துதேங்காய் எண்ணெய் ஊற்றவும். அவை சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து பொரிய விடவும். பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து மசாலில் ஊறவைத்த சிக்கன் மற்றும் தேங்காய் துண்டுகள் சேர்த்து நன்கு கலந்து விடவும். சிக்கன் மற்றும் தேங்காய் துண்டுகள் பாதி வெந்து வந்த பின்னர் அரைத்த தேங்காய் பால் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து சிக்கன் நன்கு வெந்து வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். இந்த சிக்கன் குழம்பை சூடான சாதத்தில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.