பெண்களே இந்த நாப்கின் பயன்படுத்தினால் கேன்சர் கன்பார்ம்!! எச்சரிக்கும் ஆய்வு முடிவு!

Photo of author

By Divya

பெண்களே இந்த நாப்கின் பயன்படுத்தினால் கேன்சர் கன்பார்ம்!! எச்சரிக்கும் ஆய்வு முடிவு!

Divya

Ladies, if you use this napkin, it can prevent cancer!! Warning study results!

பெண்களே இந்த நாப்கின் பயன்படுத்தினால் கேன்சர் கன்பார்ம்!! எச்சரிக்கும் ஆய்வு முடிவு!

பருவம் அடைந்த பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் ஏற்படும்.அந்த நேரத்தில் பெண்கள் வழக்கமான வேலைகளை செய்ய முடியாமல் மிகவும் சோர்வாக இருப்பார்கள்.அதிகளவு உத்தரப்போக்கால் உடல் சோர்வு,வயிறு வலி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

இதனால் உடல் சார்ந்த பல உபாதைகளை சந்திக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு விடுகிறார்கள்.மாதவிடாய் காலத்தில் அதிகளவு உத்தரப்போக்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெண்கள் தங்களின் நாப்கின்களை மாற்ற வேண்டும்.

பள்ளி,கல்லூரி மற்றும் அலுவலகத்தில் வேலைபார்க்கும் பெண்களால் அடிக்கடி நாப்கின் மாற்றுவது என்பது சவாலான விஷயம் என்பதினால் நீண்ட நேரம் ஒரே நாப்கினை வைத்திருப்பார்கள்.இதனால் தொற்று கிருமிகள் உருவாகி பிறப்புறுப்பில் அரிப்பு,புண்கள் ஏற்படும்.

அதுமட்டும் இன்றி நாப்கின் தரமற்றதாக இருந்தால் அவற்றை பயன்படுத்தும் பொழுது கருப்பை சார்ந்த பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.அதிர்ச்சி தகவல் என்னவென்றால் இந்தியாவில் நாப்கின் தயாரிக்க கூடிய முன்னணி நிறுவனங்கள் அதில் அதிகளவு இரசாயனம் கலக்கின்றன என்பது ஆய்வின் மூலம் வெளியாகி இருக்கிறது.

இந்த இரசாயனம் கலக்கப்பட்ட நாப்கின்களால் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.பிறப்புறுப்பில் தொற்று நோய்களை ஏற்படுத்தும் இந்த ஆபத்தான நாப்கின்களை பயன்படுத்துவதை பெண்கள் தவிர்க்க வேண்டும்.இதற்கு மாற்றாக காட்டன் நாப்கின்கள்,இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட நாப்கின்களை பயன்படுத்துவது நல்லது.