மறைந்த நடிகர் முரளியின் மகனுக்கு திருமணம்! வரவேற்பு நிகழ்ச்சிக்கு வரவிருக்கும் இளையதளபதி!

0
57


இளைய தளபதி விஜய் அவர்கள் தற்பொழுது மாஸ்டர் திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அப்படத்தை வெளியிடுவது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி இருக்கிறது. படத்தின் இயக்குனரான சேவியர் பிரிட்டோ அவர்கள் இளையதளபதி விஜய்யின் நெருங்கிய உறவினர் ஆவார். இவருடைய மகளின் பெயர் சினேகா பிரிட்டோ. இவரும் மறைந்த நடிகர் முரளியின் மகனான ஆகாஷ் என்பவரும் சிங்கப்பூரில் படித்துக்கொண்டிருந்த பொழுது காதல் வயப்பட்டனர்.

 மறைந்த நடிகர் முரளிக்கு ஆகாஷ் அதர்வா காவியா என்று மூன்று குழந்தைகள் உள்ளனர்.தனக்கென தனி பெண் ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ள நடிகர் அதர்வா அவர்களின் சகோதரரான ஆகாஷ் – சினேகா காதல் குறித்த செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தது.

மாஸ்டர் படத்தின் இயக்குனரான சேவியர் பிரிட்டோவின் மகளான சினேகா பிரிட்டோ அவர்கள் “சட்டம் ஒரு இருட்டறை 2” என்ற படத்தை இயக்கியுள்ளார். அதோடு நடிகர் அதர்வாவின் சகோதரரான ஆகாஷ் என்பவரும் விரைவில் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார்.

இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் இவர்களது திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு இளைய தளபதி விஜய் வரவில்லை. ஆனால் அவர் இவர்களின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருவதாக செய்திகள் வெளியாகி உறுதியும் செய்யப்பட்டுள்ளது. அதனுடன் இவர் தனது குடும்பத்துடன் கலந்து கொள்ள உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தளபதி விஜய் பற்றிய இந்த பதிவுகள் அவர் ரசிகர்களிடம் பெரிதும் வைரலாகி வருகிறது.

author avatar
Parthipan K