Saturday, September 21, 2024
Home Blog Page 4947

நாடார்கள் வசமாகிறதா பாமக ?? உச்சக்கட்ட கோபத்தில் வன்னிய இளைஞர்கள்!!

0

நாடார்கள் வசமாகிறதா பாமக ?? உச்சக்கட்ட கோபத்தில் வன்னிய இளைஞர்கள்!!

பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருந்த வன்னியர் சமுதாய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக மருத்துவர் ராமதாஸ் அவர்களின் முயற்சியால் உருவான வன்னியர் சங்கம் இட ஒதுக்கீடு போராட்டத்திற்கு பின் அனைத்து சமுதாய மக்களுக்குமான பாட்டாளி மக்கள்
கட்சியாக உருவெடுத்தது. இதனையடுத்து பெரும்பாலான முறை ஒட்டு மொத்த வன்னிய சமுதாய மக்களின் ஆதரவோடு திமுக மற்றும் அதிமுக போன்ற திராவிட கட்சிகள் தமிழகத்தில் ஆட்சி அமைக்கவும் பாமக பெரும் பங்கு வகித்தது.

பாமக அனைத்து சமுதயத்திற்குமான கட்சி தான் என்பதை உறுதி செய்யும் நோக்கில் தங்களுக்கு கிடைத்த முதல் மத்திய அமைச்சர் பதவியை தலித் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு வழங்கியது. மேலும் பாமகவை சேர்ந்தவர்கள் நாடாளுமன்ற அமைச்சர் பதவியில் இருந்த போது ரயில்வே துறையில் சேலம் ரயில்வே கோட்டம் போன்ற திட்டங்கள், போலியோ தடுப்பு, 108 இலவச ஆம்புலன்ஸ்,தேசிய கிராமப்புற சுகாதார திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை இந்தியா முழுவதும் கொண்டு வந்து வெற்றியும் கண்டது.

விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் பாமக அதற்காக தனி நிதி நிலை அறிக்கையும் வருடம் தோறும் வெளியிட்டு வருகிறது.மேலும் ஆளும் அரசிற்கு ஆலோசனை வழங்கும் விதமாக வருடம் தோறும் நிழல் நிதி நிலை அறிக்கையும் வெளியிட்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் தினமும் அரசின் செயல்பாடுகள் குறித்த அறிக்கைகள் வெளியிட்டு தங்களை ஒரு சிறந்த எதிர்க்கட்சியாக நிரூபித்து வருகிறது பாமக.

இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாமக தனியாக போட்டியிட்டு தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக தன்னை நிரூபித்து காட்டியது. பின்பு தமிழக முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி போன்றவர்களின் மறைவால் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை பயன்படுத்தி கொள்ளும் வகையில் தங்களுக்கான அரசியல் வியூகத்தை மாற்றி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை சந்தித்தது. எதிர்க்கட்சிகள் இந்த கூட்டணியை கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்திருந்தும் தமிழக அளவில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் குறிப்பிட்ட வெற்றியை பெற்று அதிமுக ஆட்சியை தக்க வைத்து கொள்ள பாமக பெரிதும் உதவியுள்ளது.

இந்நிலையில் பாமகவின் ஆணி வேராக செயல்பட்ட வன்னியர் சங்கத்தின் தலைவர் மாவீரன் என்று தமிழக மக்களால் அழைக்கப்பட்ட காடுவெட்டி ஜெ.குரு அவர்களின் மறைவையடுத்து கடந்த ஒரு வருடமாகவே எதிர்க்கட்சிகள் அவரின் மறைவை வைத்து அரசியல் செய்து வருகிறார்கள். உயிருடன் இருந்த போது அவரை சாதி தலைவர் என்று விமர்சனம் செய்தவர்கள் எல்லாம் அவர் மறைந்த பிறகு அவருக்கு ஆதரவாக பேச தொடங்கியது தமிழக மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

காடுவெட்டி குரு வன்னியர் சங்க தலைவராக பொறுப்பேற்ற பின்பு தனது ஆவேசமான பேச்சு மூலம் தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெரும் குற்றங்களுக்கும், சமூக சீர்குலைவுகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். இத்தகைய செயல்பாடுகளால் அவர் மாற்று சமுதாய மக்களால் கூட பெரிதும் மதிக்கப்படும் மாமனிதர் ஆனார். அவர் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். இன்றைய காலகட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியில் பெருமளவு இளைஞர்கள் இடம்பெற்று இருப்பதற்கு இவரும் ஒரு காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இருப்பினும் இவர் மறைந்த பிறகு மாற்று கட்சியில் உள்ள வன்னியர்களே இவரது படத்தை உபயோகிக்கும் போது சொந்த கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியின் பெரும்பாலான இடங்களில் நடைபெறும் அனைத்து கூட்டங்களிலும், பத்திரிக்கைகளிலும், பாதகைகளிலும் தொடர்ந்து இவரது பெயரோ படமோ இடம் பெறாமல் கட்சியில் உள்ள பொறுப்பாளர்கள் புறக்கணித்து வருவதாக தொண்டர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் பாமகவின் மாநில பொருளாளராக விளங்கும் திலகபாமா அவர்கள் வெளியிட்டுள்ள நோட்டீஸில் மாவீரர் படம் இடம்பெறாமல் இருப்பதே இதை உறுதி செய்யும் வகையில் இருப்பதால் இந்த நிகழ்வு பாமக தொண்டர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

காடுவெட்டி குரு படத்தை புறக்கணித்த இவர்கள் மாற்றாக கட்சிக்கு சம்பந்தமே இல்லாத காமராஜர் மற்றும் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த மற்றொரு மூத்த தலைவர் படமும் இடம் பெறுமாறு செய்துள்ளது அக்கட்சியினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பேத்கார் உள்ளிட்ட பாமக ஆதரிக்கும் அனைத்து தலைவர்களையும் பின்பற்ற தயாராக இருக்கும் பாமக தொண்டர்கள் மத்தியில் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவரான திலகபாமா அவர் சமுதாயத்தை சேர்ந்த தலைவர்களை மட்டும் முன்னிறுத்தியது தான் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதே போன்று தொடர்ந்து காடுவெட்டி ஜெ குரு அவர்களை சொந்த கட்சியிலேயே வன்னியர் சங்கத் தலைவர் என்ற ஒரே காரணத்தினால் புறக்கணித்து வருவதால் பாமக இளைஞர்கள் மத்தியில் இன்று திலகபாமா பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளார்.இதனையடுத்து இவர் வெளியிட்டுள்ள பத்திரிக்கைக்கு பாமக இளைஞர்கள் தரப்பில் சமூகவலைதளங்களில் தங்களது தனிப்பட்ட எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இருப்பினும் அதனை பொருட்படுத்தாத திலகபாமா இன்று காலை வெளியிட்டுள்ள தனது முகநூல் பக்கத்தில் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார் .

கவிதையில் மாவீரரை மறைக்கப்பட்ட அதாவது ஒடிந்து விழுந்த சருகாகவும் அவருக்காக கேள்வி எழுப்பிய இளைஞர்களை புலம்பும் பாதையாகவும் இப்படியே புலம்பிக் கொண்டிருந்தால் இலக்கை அடைய முடியாது என்றும் வெளியிட்டுள்ளார் .

இதனால் கோபத்தில் இருந்த பாமக இளைஞர்கள் திலகபாமா வெளியிட்ட பதிவிற்கும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில் இன்று மதியம் இதற்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில் ஒரு கவிதையும் எழுதி விட்டு தான் எழுதிய கவிதை எல்லாம் இன்று எனக்கே துருப்பு சீட்டாய் அரசியலாக வந்து அமைந்துள்ளது என்றும், அடுத்து தனது மறு முகநூல் பதிவில் நான் எதற்கோ போட்ட பதிவு இன்று எனக்கே எதிர்ப்பாய் வந்து நின்றுள்ளது என தனது மறுப்பைத் தெரிவித்துள்ளார்.

கட்சியின் மேல்மட்ட பொறுப்பாளர்களே இவ்வாறு நடந்து கொள்வது குறித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறும் மேலும் காடுவெட்டி குரு அவர்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்றும் கட்சி தலைமையிடம் தொண்டர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். மேலும் அவரது புகைப்படம் பத்திரிக்கைகளிலும்,பாதாகைகளிலும் இது போல புறக்கணிக்கபட்டால் வன்னிய சமுதாய வாக்குகள் கிடைப்பது சந்தேகம் என்றும் விமர்சனம் செய்துள்ளனர்.

பாமகவின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இதை கவனத்தில் கொண்டு இப்படிப்பட்ட ஒரு பொறுப்பாளர் போட்ட பதிவினால் கோபத்தில் உள்ள இளைஞர்களுக்கு ஏற்றார் போல நடவடிக்கை எடுக்கும்படி தொடர்ந்து இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தும் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்தும் வருகின்றனர். எது எப்படியோ வன்னிய சமுதாயத்திலிருந்து உருவான பாமக அனைத்து சமுதயத்திற்கான கட்சி என வளர்ந்து தற்போது நாடார்கள் வசமாகி விடுமோ? என்ற பாமக தொண்டர்களின் அச்சமும் நியமானது தானே.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

வாய்ப்பை இழந்த தமிழகம்! அறிவித்தது இந்திய வானிலை !! அடுத்த வாய்ப்பு மறுநாளே எதிர்பார்ப்பு!!!

0

வாய்ப்பை இழந்த தமிழகம்! அறிவித்தது இந்திய வானிலை!! அடுத்த வாய்ப்பு
மறுநாளே எதிர்பார்ப்பு!!!

தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நாளை முதல் மழை குறைய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அம்மாநிலங்களில் முக்கிய நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில், நாளை முதல் தமிழகம், கேராளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மழை குறைய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேசமயம், வங்கக்கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்றும் காற்றழுத்த தாழ்வு உருவானால் 13ஆம் தேதி முதல் மீண்டும் மழை அதிகரிக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, வங்கக்கடலில் 40 முதல் 50 கி.மீ வரை காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

விரைவில் மதமாற்ற தடை சட்டத்திருத்த மசோதா மோடியின் கணக்குதான் என்ன!! இந்திய அரசியலமைப்புச்சட்டம் கூறுவது என்ன???

0

விரைவில் மதமாற்ற தடை சட்டத்திருத்த மசோதா மோடியின் கணக்குதான் என்ன!! இந்திய அரசியலமைப்புச்சட்டம் கூறுவது என்ன???

அடுத்த கூட்டத் தொடரிலியே மத மாற்றத்தைத் தடுக்கும் மசோதாவை மோடி அரசு கொண்டு வர வாய்ப்பு உள்ளது.

பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான அரசாங்கம் அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மதமாற்ற எதிர்ப்பு மசோதாவைக் கொண்டு வரக் கூடும் தகவல் தெரிவித்துள்ளன. இதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும், மத மாற்றத்தையும் தடுக்கக்கூடிய மசோதாவைக் கொண்டு வருவதற்கான விவாதம் நடைபெற்று வருவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆதாரங்களின் படி, இந்த மசோதா எந்த விதமான மத மாற்றத்தையும் பின்பற்றுவதை தடுக்கும். நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடரில் இந்த மசோதாவை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் முடிவடைந்த பாராளுமன்ற அமர்வில் 30 க்கும் அதிகமான மசோதாக்களை நிறைவேற்றியதால் இது மிகவும் பயனுள்ள அமர்வாக இருந்தது. மக்களவை ஒரே அமர்வில் அதிக மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு சாதனையை பதிவுசெய்து உள்ளது.

நாடாளுமன்ற விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஏறக்குறைய அனைத்து தரப்பு சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதால் இந்த அமர்வு பல வழிகளில் வரலாற்று சிறப்பு வாய்ந்தது என்று அது கூறியுள்ளது. இந்த அமர்வில் முப்பது மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன.

மத்திய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துவதற்கும் அதன் அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிப்பதையும் நோக்கமாகக் கொண்ட தேசிய புலனாய்வு அமைப்பு (திருத்த) மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் மதமாற்ற மசோதா கொண்டுவந்தாலும் ஆச்சர்யம் இல்லை

ஆனால் இந்திய அரசியலமைப்பு பகுதி 3 அடிப்படை உரிமைகள் ஆனது இதற்கு இடம் கொடுக்காது. அதனால் சட்டத்திருத்தம் செய்ய வாய்ப்பு உள்ளது

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

ஜெயம் ரவியை சீண்டிய லாரன்ஸ் – பதிலடி தருவாரா ஜெயம் ரவி..?

0

ஜெயம் ரவியை சீண்டிய லாரன்ஸ் – பதிலடி தருவாரா ஜெயம் ரவி..?

ப்ரதீப் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோமாளி’. இந்தப் படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 3-ம் தேதி இணையத்தில் வெளியிடப்பட்டது.

அதன் இறுதிக்காட்சியில் நகைச்சுவைக்காக, ரஜினி பல வருடங்களாக அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்வதைக் கிண்டல் செய்திருந்தனர்.
இதற்கு ரஜினி ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், ‘கோமாளி’ ட்ரெய்லரைப் பார்த்துவிட்டு கமல், அதன் தயாரிப்பாளருக்குத் தொலைபேசி வாயிலாக தன் அதிருப்தியைப் பதிவு செய்தார். இதனால் இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்ததைத் தொடர்ந்து, அந்தக் காட்சி படத்திலிருந்து நீக்கப்படும் என்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் இயக்குநர் ப்ரதீப் தெரிவித்தனர். ஜெயம் ரவியும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் ரஜினியின் தீவிர ஆதரவாளரான நடிகர் மற்றும் இயக்குநர் லாரன்ஸ் தனது ட்விட்டர் பதிவில், “அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு. இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ ஆனந்தச் சிரிப்பு. நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது, அங்கே சிரிப்பவர் யார் அழுபவர் யார் தெரியும் அப்போது. விடு தலைவா.. அந்த ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்” என்று தெரிவித்துள்ளார்.

‘கோமாளி’ ட்ரெய்லரில் ரஜினியைக் கிண்டல் செய்ததற்கு, மறைமுகமாகச் சாடியே இந்த ட்வீட்டை வெளியிட்டுள்ளார் எனத் தெரிகிறது. தற்போது ‘காஞ்சனா’ படத்தின் இந்தி ரீமேக்கில் கவனம் செலுத்தி வரும் லாரன்ஸ். அதை முடித்துவிட்டு, தமிழில் சூப்பர் ஹீரோ கதையொன்றை இயக்கி, நடிக்க முடிவு செய்துள்ளார்.
புலவர்களுக்குள் போட்டி இருக்கலாம்.. ஆனா…

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

திண்டிவன கை அசைவில் திறந்துவிடப்பட்ட காவிரி ஆட்டம் கண்டது தமிழக டெல்டா!!

0

திண்டிவன கை அசைவில் திறந்து விடப்பட்ட காவிரி டெல்டா மக்கள் கொண்டாட்டம்

கர்நாடகம் மற்றும் கேரளத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் விளைவாக கர்நாடகத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அடுத்த சில நாட்களில் கர்நாடக அணைகள் நிரம்பக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், காவிரியில் தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீரை திறந்து விடாமல் கர்நாடக அரசு தாமதிப்பதை நேற்று முன் தினம் புள்ளி விவரத்துடன் ராமதாஸ் கண்டித்துள்ளார்.

கர்நாடகம் – கேரளத்திலுள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை அடுத்த சில வாரங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சித்துறை தெரிவித்திருக்கிறது. அதனால், தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 40,000 கன அடி வீதம் தாராளமாக தண்ணீர் திறந்துவிட முடியும். ஆனால், கர்நாடக அணைகளின் நீர்மட்டம் கடந்த சில நாட்களாக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இன்று வரை தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படவில்லை. இதையெல்லாம் கண்காணித்து தமிழகத்திற்கு கூடுதல் நீரை திறக்கும்படி ஆணையிட வேண்டிய காவிரி மேலாண்மை ஆணையம் உறங்கிக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இதே நிலை நீடித்தால் சம்பா சாகுபடியும் பொய்த்துப் போகும். எனவே, கர்நாடக அரசையும், காவிரி மேலாண்மை ஆணையத்தையும் தமிழக அரசு தொடர்பு கொண்டு தமிழகத்திற்கு காவிரியில் கூடுதல் நீரை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதன்மூலம் தமிழகத்தில் சம்பா நெல் சாகுபடி முழுமையான பரப்பளவில் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து கர்நாடகா அணைகளில் கூடுதல் நீர் திறப்பால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று மாலையில் ஒரு லட்சம் கன அடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள முக்கிய நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மைசூர் மாவட்டத்தில் உள்ள 84 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணை முழு கொள்ளளவை அட்டியதால் அணைக்கு வரும் ஒரு லட்சத்து 25,000 கன அடி நீரும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதே போன்று மாண்டியாவில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையில் இருந்து 25,000ம கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா அணைகளில் கூடுதல் நீர் திறப்பால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று மாலையில் ஒரு லட்சம் கன அடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் காவிரி கரையோரத்தில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

தைலாபுரத்திலிருந்து கொண்டே கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை புள்ளிவிவரத்தோடு அறிக்கை விட்டு அலறவிட்டுள்ளார் ராமதாஸ் …

உரிமையை மீட்பதில் என்றும் முதல் குறல் கொடுத்து மக்களை தன்பக்கமே வைத்துக்கொள்கிறார் மூத்த அரசியல்வாதி ….

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

காங்கிரஸ் 12 எம்.பி கள் பிஜேபியில் இணைந்தார்களா? காஷ்மீர் பிரச்சனைக்கு காங்கிரசே காரணம்? போட்டு உடைத்த வைகோ?

0

வைகோ காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இலங்கை இனத்தை அழித்தவர் காங்கிரஸ். காஷ்மீர் மாநிலத்தின் அந்தஸ்து பறிக்கப்பட்டது காரணம் காங்கிரஸ் என விமர்சனம் செய்துள்ளார்.

’காங்கிரஸ் உதவிஉடன் நான் மாநிலங்கள் அவையில் தேர்வாக வில்லை. காங்கிரஸ் தயவால் நான் என்றுமே நாடாளுமன்றம் செல்லமாட்டேன்’. என வைகோ கூறியுள்ளார். இதனால் கூட்டணி கட்சிகளுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் தயவில் நான் ராஜ்யசபாவுக்குச் செல்லவில்லை. இலங்கையில் ஈழம் இனத்தை கூண்டோடு அழித்த பாவிகள் காங்கிரஸ்” என கே.எஸ்.அழகிரியின் கூற்றுக்கு ஆவேசத்துடன் பதிலளித்துள்ளார் ராஜ்யசபா எம்.பி. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

முன்னதாக வைகோவை விமர்சித்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ks அழகிரி, ”காஷ்மீர் பிரச்னையில் காங்கிரஸை குறை சொல்வதா? அரசியல் நாகரீகமற்றுப் பேசுகிறார் வைகோ” என தமிழகக் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ராஜ்யசபா எம்.பி. வைகோ-வை கடுமையாக விமர்சித்தார். காஷ்மீர் தனி மாநில அந்தஸ்து பறிக்கப்பட்ட விவகாரம் குறித்த நாடாளுமன்ற விவாதத்தின் போது வைகோ பேசிய பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு தமிழக காங்கிரஸ் கட்சியில் எழுந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரின் விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கும் வகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

வைகோ கூறுகையில், நான் திமுக ஸ்டாலின் உதவியுடன் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு ஆகியுள்ளேன். “நான் ஒன்றும் காங்கிரஸ் உதவியுடன் எம்.பி. ஆகவில்லை.
இனியும் இதற்கு மேலும் காங்கிரஸ் உதவியுடன் செல்லமாட்டேன். என கடுமையாக பேசியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

மேலும் அவர் கூறுகையில், இலங்கை எம் ஈழத் தமிழ் இனத்தைப் படுகொலை செய்த காங்கிரஸுக்கு ஒருநாளும் மன்னிப்பே கிடையாது. மன்மோகன் சிங் எனக்கு நெருங்கிய நண்பர். மன்மோகன் சிங் இடம் கூட நான் நண்பனாக இருக்கும் வரை குறையை எடுத்துச் சொல்வேன். அவரை ஒரு நண்பராகப் பாராட்டுகிறேன்.

ஆனால், அரசியல் ரீதியாக எதிர்க்கிறேன். இலங்கை எம் ஈழ மக்களை அழித்த காங்கிரஸ்க்கு மன்னிப்பே கிடையாது. நான் திமுக தலைவர் ஸ்டாலின் மூலமாக மட்டுமே ராஜ்யசபா எம்.பி ஆகப் பதவி ஏற்றேன். காங்கிரஸ் கட்சியின் உதவியுடன் அல்ல. காஷ்மீர் மாநிலத்தின் அந்தஸ்து விவகாரத்தின் முக்கியக் குற்றவாளியே காங்கிரஸ்தான்.

12 காங்கிரஸ் எம்.பி-க்களும் பாஜக-விடம் விலை போய்விட்டதா?” ஏன் அவர்கள் காஷ்மீர் தனி மாநில அந்தஸ்து பரிக்கபட்டதன் விவகாரத்தில் கேள்வி எழுப்ப வில்லை? பிஜேபி உடன் விலை போய்விட்டார்களா என்று ஆவேசமாகக் பேசியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள்.

இதனால் காங்கிரஸ் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளிடையே பெரிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் இந்த அறிக்கைக்கு தமிழக காங்கிரஸ் என்ன பதிலடி கொடுக்கும் என்று பொறுத்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

கோபத்தில் அமித்ஷா !கொந்தளிப்பில் எடப்பாடி ! !கிளுகிளுப்பில் துரைமுருகன்!!!

0

கோபத்தில் அமித்ஷா கொந்தளிப்பில் எடப்பாடி கிளுகிளுப்பில் துரைமுருகன்

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி நூலிழையில் கோட்டை விட்டதால் கோட்டையே கோபத்தில் உள்ளதாம்

திமுகவின் பணபட்டுவாடா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு , மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான வாக்குப்பதிவு கடந்த ஆகஸ்டு 5-ம் தேதி நடைபெற்றது.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியை எப்படியாவது கைப்பற்றியே ஆகவேண்டும் எனவே வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிபெற்றாக வேண்டும் என்று மத்தியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இத்தேர்தலில் தன் மகன் தோற்றால் தன்மானம் இழந்து திமுகவிலிருந்து மதிப்பிழந்து விடும் கட்டாயத்தில் சீறிப்பாய்ந்த சிகப்பு நோட்டுகளின் பின்னால் அதிமுக, திமுக என இரண்டு தரப்பினரும் படுவேகமாக வேலை பார்த்ததில் வெற்றி தங்களுக்கு தான் என்று இரண்டு தரப்பினரும் கூறி வந்தனர்.

அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது, இறுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை விட சுமார் 8 ஆயிரத்து 141 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றார்.வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போராடி தனது வெற்றியை அதிமுக நூலிழையில் தவற விட்டது.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் தோல்வியால் அமித்ஷா, பிரதமர் மோடி தரப்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது கடும் கோபத்தில் உள்ளதாகவும் அவர்களின் நேரடி தொடர்பில் உள்ளவர்களின் மூலம் முதல்வருக்கு தகவல் சொல்லப்பட்டுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தோல்வியை ஈடுகட்ட தமிழகத்தில் காலி தொகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. இந்த இடைதேர்தலிலாவது வெற்றி பெற்று காட்டவேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடியாருக்கு மோடி அமித்ஷா தரப்பிலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

இந்த நிலையில் இந்த வெற்றி குறித்து திமுக பொருளாளர் துரைமுருகனிடம் கேள்வி கேட்கப்பட்டது. உங்கள் மகனின் வெற்றியை எப்படி பார்க்கிறீர்கள். அவர் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்று இருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு சற்று நக்கலுடன் பதில் அளித்த துரைமுருகன், “ஆமாம் அவர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார். நான் அதில் நினைக்க என்ன இருக்கிறது. அவர்தான் வென்று விட்டாரே”.

அவர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்றது பற்றி பத்திரிக்கையாளர்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்.

” அதை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதே தான் நானும் நினைக்கிறேன்”, என்று கிண்டலாக குறிப்பிட்டார்.

கதிர் ஆனந்த் வெற்றிபெறுவாரா என்று திமுகவினர் பதற்றத்தில் இருந்த நேரத்தில் துரைமுருகன் இப்படி பேசியது பெரிய வைரலானது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

ஒரு படத்தோட டீசரை இப்படில்லாமா ரிலீஸ் பண்ணுவாங்க!? – ஷாக் ஆன ரசிகர்கள்!

0

ஒரு படத்தோட டீசரை இப்படில்லாமா ரிலீஸ் பண்ணுவாங்க..!? – ஷாக் ஆன ரசிகர்கள்.

பொதுவாக ஒரு பட டீசர்னா, அது வர்ற வெள்ளிக்கிழமை வருது, வர்ற அமாவாசைக்கு வருதுன்னு ஒரு பில்டப் பண்ணி ரிலீஸ் பண்றதுதானே உலக வழக்கம். ஆனா இந்தப் பட டீசரை அப்படி ரிலீஸ் பண்ணலை.

ராபர்ட் பாட்டின்ஸன், ஆரோன் டெய்லர் ஜான்சன், மைக்கேல் கெய்ன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் ’டெனட்’. இந்திய நடிகை டிம்பிள் கபாடியாவும் இதில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜூலை 17, 2020 அன்று இந்தத் திரைப்படம் வெளியாகவுள்ளது.

படத்தைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் உளவு பார்ப்பவர்களைப் பற்றிய அறிவியல் புனைவு கலந்த கதை என்று சொல்லப்படுகிறது. மேலும், கால நேரத்தை வைத்து நோலன் வழக்கமாகக் கையாளும் குழப்பும் விஷயங்களும் படத்தில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

வியாழக்கிழமை இரவு, ’ஹாப்ஸ் அண்ட் ஷா’ படத்தின் காட்சிக்காக வந்திருந்த சில ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. திடீரென, ’டெனெட்’ படத்தின் டீஸர் திரையிடப்பட்டது. இந்த டீஸர் இன்னும் இணையத்தில் வெளியாகவில்லை.

ஜான் டேவிட் வாஷிங்டன் என்கிற கதாபாத்திரம் ஒரு துப்பாக்கி குண்டு பாய்ந்த கண்ணாடியை பரிசோதிப்பது போல ஒரு காட்சி, அவர் பிராண வாயுவுக்கான மாஸ்க்கை அணிந்திருக்கும் காட்சி, ஸ்வாட் குழு ஆயுதங்களோடு ஓடும் காட்சி ஆகியவை இந்த டீஸரில் இடம்பெற்றுள்ளன.

இதன் மூலம், தனது படத்தின் திரைக்கதை மட்டுமல்லாமல், புரோமோஷன்களையும் வித்தியாசமாக செய்பவர் என்ற பெயரை சம்பாதித்திருக்கிறார் நோலன்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

வாக்கு எண்ணும் இடத்தில் திடீர் பரபரப்பு! என்ன நடக்கிறது! வேலூர் தேர்தலில்?

0

வேலூர் மக்களவைத் தேர்தல் முடிவடைந்து இன்று தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறன்றன.

திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகம் 1 லட்சத்து 5 ஆயிரத்து 301 வாக்குகள் வாக்குகள் பெற்று 11,890 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார்.

திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் 1 லட்சத்து 17 ஆயிரம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் வகித்து வந்தார். இருவருக்குமே இடையே கடும் போட்டி நிலவி கொண்டு இருக்கிறது.

காலை முதலே திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை விட, அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11,890 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார் என்பது குிப்பிடத்தக்கதாகும்.

ஆனால், திடீர் திருப்பமாக காலை 11.30 மணி நிலவரப்படி ஏ.சி.சண்முகம் 3896 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். அவர் 2 லட்சத்து 45 ஆயிரத்து 273 வாக்குகளும், கதிர் ஆனந்த் 2 லட்சத்து 41 ஆயிரத்து 377  வாக்குகளும் பெற்றிருந்தனர். அதன்பின்னர் கதிர் ஆனந்தின் கை ஓங்கியது. அதிமுக வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி முன்னிலை பெற்றார். 12 மணி நிலவரப்படி கதிர் ஆனந்த் 12158 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். 

தொடர்ந்து வாக்குகள் முன்னிலை விவரம் மாறிக்கொண்டே இருப்பதால், வேலூரில் அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதனால் வேலூர் வாக்கு எண்ணிக்கை நடக்கும் இடத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. வாக்கு எண்ணிக்கை தகவல்களை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள நியூஸ்4தமிழ் என்ற இணைதலதில் காணலாம்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

அதிமுக முன்னிலை வேலூர் தேர்தல் ! எத்தனை வாக்குகள் முன்னிலை தெரியுமா?

0

வேலூர் மக்களவைத் தேர்தல் முடிவடைந்து இன்று தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறன்றன.

திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகம் 1 லட்சத்து 5 ஆயிரத்து 301 வாக்குகள் வாக்குகள் பெற்று 11,890 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.

திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் 1 லட்சத்து 17 ஆயிரம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் வகித்து வருகிறார். இருவருக்குமே இடையே கடும் போட்டி நிலவி கொண்டு இருக்கிறது.

காலை முதலே திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை விட, அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11,890 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.

தொடர்ந்து வாக்குகள் முன்னிலை விவரம் மாறிக்கொண்டே இருப்பதால், வேலூரில் அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தகவல்களை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள நியூஸ்4தமிழ் என்ற இணைதலதில் காணலாம்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்