Tuesday, October 22, 2024
Home Blog

ஜோதிட சாஸ்திரப்படி இந்த 3 ராசி ஆண்கள் ஆளுமை திறன் மிக்கவர்களாக இருப்பார்கள்!!

0

பொதுவாக ஒவ்வொரு ராசி மற்றும் நட்சத்திரத்திற்கும் என்று தனி சிறப்புக்கள் மற்றும்’குணாதிசயங்கள் இருக்கும்.ஒருவரின் ஆளுமை மற்றும் நடத்தையை(ஒழுக்கம்) அவரின் ராசியை வைத்து அறிவது வழக்கமாக இருக்கிறது.

ராசி,ஒருவரின் வாழ்க்கையில் நடக்க கூடியதை வெளிப்படுத்துகிறது.சிலர் மிகவும் ரகசியமானவர்களாக இருப்பார்கள்.சிலர் வசீகரமாக இருப்பார்கள்.சிலர் ஆளுமைத் திறன் மிக்கவர்களாக இருப்பார்கள்.ஆனால் ஒருசில ராசிக்காரர்கள் மட்டுமே அனைத்து குணாதிசியங்களையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

ஜோதிட சாஸ்திரப்படி இந்த மூன்று ராசியில் பிறந்த ஆண்களுக்கான குணங்கள் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

1)விருச்சிக ராசி ஆண்கள்

இந்த ராசியில் பிற்ந்த ஆண்கள் பார்க்க அமைதியாக தெரிந்தாலும் உள்ளுக்குள் பல ரகசியங்கள் மற்றும் குணாதிசியங்களை கொண்டிருப்பர்.இந்த ராசிக்கார்களின் குணம் மற்றவர்களை கவரும் விதமாக இருக்கும்.இவர்களை பற்றி அறிய பொறுமை வேண்டும்.

2)மீன ராசி ஆண்கள்

இந்த ராசியில் பிறந்த ஆண்கள் கனவு உலகத்தில் வாழ்பவர்களாக இருப்பார்கள்.இவர்கள் மர்மான வசீகர தோற்றத்தை கொண்டிருப்பார்கள்.இந்த ராசிக்காரர்களுடன் உரையாடுவது சுவாரஸ்யமானதாக அமையும்.

3)மகர ராசி ஆண்கள்

இந்த ராசியில் பிறந்த ஆண்கள் ஒழுக்கத்தில் தனித்துவம் கொண்டவர்களாக இருப்பார்கள்.இவர்கள் மர்மான வசீகர தோற்றத்தையும் மன உறுதியையும் கொண்டிருப்பார்கள்.இவர்களின் தந்திர அணுகுமுறை சுவாரஸ்யமானதாக இருக்கும்.

சிகிரெட் பழக்கத்திற்கு புல் ஸ்டாப் வைக்க உதவும் சூப்பர் செயலி!! ஜஸ்ட் ஒன் மன்த் மட்டும் யூஸ் பண்ணுங்க!!

மது,புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு என்று தெரிந்தும் பலர் அதற்கு அடிமையாகி கிடக்கின்றனர்.இன்றைய இளைய தலைமுறை புகைப்பழக்கத்தால் வாழ்க்கையை வீணாக்கி வருகிறது.

சிகிரெட் புகைப்பதால் நுரையீரல் புற்றுநோய்,சுவாசப் பிரச்சனை,கல்லீரல் பாதிப்பு,வாய் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.அதேபோல் புகைப்பழக்கம் பித்தம் வாதம்,கபம்,மன உளைச்சல் போன்றவற்றை ஏற்படுத்தக் கூடும்.நுரையீரல் தொடர்பான புற்றுநோய் பெரும்பாலும் புகைப்பதால் தான் ஏற்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது.

இந்த புகைப்பழத்தை விடுவது மிகவும் சவாலான விஷயம் என்றாலும் தங்களது தன்னம்பிக்கையால் அந்த பழக்கத்தில் இருந்து எளிதில் மீண்டுவிட முடியும்.புகைப்பழத்தை கைவிட ஆயுர்வேத முறைகள் மருந்து மற்றும் மாத்திரைகள் இருப்பினும் சிலருக்கு அதில் இருந்து மீள சற்று கடுமையாக இருக்கிறது.சிலரால் என்ன முயற்சி செய்தும் புகைப்பழக்கத்தில் இருந்து மீள முடியாமல் போய்விடுகிறது.

இந்நிலையில் புகைப்பழகத்தில் இருந்து மீள புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தபட்டு இருக்கிறது.இந்த செயலின் பெயர் “quitbot” ஆகும்.இந்த செயலி மூலம் வெறும் 42 தினங்களில் புகைப்பழக்கத்தில் இருந்து மீள முடியும்.AI உதவியுடன் செயல்படும் இந்த செயலி உங்களை புகைப்பழக்கத்தில் இருந்து நிச்சயம் மீட்டுக் கொண்டு வரும்.

இந்த செயலியில் உள்ள செயற்கை நுண்ணறிவு குரல் புகைப்பழக்கத்தில் இருந்து மீளுவதற்கான அறிவுரைகள் வழங்குவதோடு தங்களை உற்சாகப்படுத்துகிறது.நீண்ட நாட்களாக புகைப்பழக்கத்தில் இருந்து மீள முடியாமல் தவிப்பவர்களுக்கு இந்த செயலி பயனுள்ளதாக இருக்கும்.தற்பொழுது இந்த செயலி ஆங்கிலத்தில் உரையாடும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.செயலியின் வரவேற்பை பொறுத்து கூடிய விரைவில் தமிழ் உரையாடல் அம்சம் வரலாம்.

இனி ஆயுள் காப்பீட்டிற்கு GST வரி கிடையாது!! விரைவில் குட் நியூஸ் சொல்லப்போகும் மத்திய அரசு!!

0

இந்தியாவில் கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து சரக்கு மற்றும் சேவை வரி(GST) வரை நடைமுறையில் உள்ளது.கடந்த 2000 ஆம் ஆண்டு GSTக்கு சட்டம் உருவாக்க குழு அமைக்கப்பட்டு 17 வருடங்கள் கழித்து கடந்த 2017 ஆம் ஆண்டு GST மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

GST ஒரு மறைமுக வாரியாகும்.இந்த புதிய வரிவிதிப்பின் மூலம் ஒவ்வொரு மாதமும் ஒன்றரை லட்சம் கோடி வருமானமாக கிடைத்து வருகிறது.கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் GST இரண்டு லட்சம் கோடி வசூல் ஆகியிருக்கிறது.

உள்நாட்டு வர்த்தகம் அதிகரிப்பால் GST வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதில் CGST,SGST,IGST என்று மூன்று வகைகள் இருக்கிறது.CGST என்றால் மத்திய அரசின் உள் மாநில விற்பனை வரியாகும்.SGST என்றால் மாநில அரசின் உள் மாநில விற்பனை வரியாகும்.IGST என்றால் மாநிலங்களுக்கிடையேயான விற்பனை வரியாகும்.GSTக்கு முன்னர் கலால் வரி,V மாநில வாட் வரி,சொகுசு வரி,Ess வரி,சுங்க கூடுதல் வரி,நுழைவு வரி போன்றவை நடைமுறையில் இருந்தன.ஆனால் தற்பொழுது இந்த GST வரி அனைத்து வரிகளையும் மாற்றியுள்ளது.

மேலும் இந்த GST வரி அனைத்து காப்பீட்டு திட்டங்களுக்கும் அடங்கும்.இதனால் ஆயுள் காப்பீடு மற்றும் மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டு தவணைக்கு GST இல் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தொடர் கோரிக்கை காரணமாக அமைச்சர்கள் குழுவின் பரிந்துரைப்படி அடுத்த மாதம் நடைபெறவிருக்கின்ற GST கவுன்சில் கூட்டத்தில் ஆயுள் காப்பீடு மற்றும் மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டு தவணைக்கு GST இல் விலக்கு அளிப்பது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என்ற தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.

பெண்களை அச்சுறுத்தும் தைராய்டு புற்றுநோய்!! இதற்கான அறிகுறிகள் எப்படி இருக்கும் தெரியுமா?

ஆண் பெண் அனைவருக்கும் தைராய்டு பாதிப்பு பொதுவானவையாகும்.ஆனால் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு தான் தைராய்டு பாதிப்பால் அதிகம் அவதியடைகின்றனர்.இந்த தைராய்டு கட்டியை ஆரம்ப நிலையில் கவனிக்க தவறினால் நாளடைவில் அவை புற்றுநோய் கட்டிகளாக மாறக்கூடும்.

தைராய்டு புற்றுநோய் என்பது தைராய்டு சுரப்பி செல்களில் உருவாகும் ஒருவகை புற்றுநோயாகும்.நமது கழுத்தின் முன்புறம் இருக்கின்ற பட்டாம்பூச்சி வடிவ சுரப்பியை தான் தைராய்டு சுரப்பி என்கின்றோம்.இது ஹார்மோன்களை உற்பத்தி செய்தல்,வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவித்தல் போன்ற செய்லகளில் ஈடுபடுகிறது.

தைராய்டு புற்றுநோய் அறிகுறிகள்:

1)கழுத்து பகுதியில் கட்டி
2)உணவு விழுங்குதலில் சிரமம்
3)தொடர் இருமல்
4)தொண்டை வலி
5)உடல் சோர்வு
6)மூச்சு விடுதலில் சிரமம்
7)தொண்டை கரகரப்பு
8)குரலில் மாற்றம்

தைராய்டு புற்றுநோய் வருவதற்கான காரணங்கள்:

1)மரபணு மாற்றம்
2)பரம்பரைத் தன்மை
3)அயோடின் குறைபாடு
4)வயது
5)உடல் பருமன்

இந்த தைராய்டு புற்றுநோய் பெண்களை அதிகம் பாதிக்கிறது.குறிப்பாக 25 முதல் 60 வயது வரை உள்ள பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. தைராய்டு சுரப்பியில் உள்ள செல்கள் கட்டுக்கடங்காமல் வளர்வதால் இந்த புற்றுநோய் ஏற்படுகிறது.இந்த புற்றுநோய் தைராய்டு சுரப்பியில் மட்டுமே வளரும்.அதே சமயம் கழுத்து பகுதியில் உள்ள நிணநீர் முனைகளுக்குள்ளும் இது பரவும்.

பெண்கள் தங்களுக்கு இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியம் கொள்ளாமல் உரிய மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.அதேபோல் தைராய்டு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் இருக்க வேண்டியது அவசியம்.

பாம்பு கடிபட்டவர்கள் இந்த தவறை மட்டும் செய்யாதீங்க!! இப்படி செய்தால் விஷம் முறிந்துவிடும்!!

0

மழைக்காலங்களில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாவே இருக்கும்.வீடுகளில் ஈரப்பதமான இடங்களில் பாம்பு,பூரான்,தேள் போன்ற விஷ ஜந்துக்கள் மறைந்திருக்க அதிக வாய்ப்பிருப்பதால் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்.

குறிப்பாக தோட்டம்,கழிவறை,கற்களுக்கு அடியில் பாம்புகள் தென்பட வாய்ப்பிருக்கிறது.இந்த பாம்பு ஒருவரை கடித்து விட்டால் எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்பதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.படங்களில் வருவதை போல் பாம்பு கடித்து விட்டால் கடிபட்ட இடத்தில் வாய் வைத்து உறுஞ்சவோ அல்லது அவ்விடத்தை கீறி விடவோ கூடாது.இந்த செயல்கள் உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும்.

பாம்புகளில் விஷம் உள்ளது மற்றும் விஷமற்றது என்று இருவகை இருக்கிறது.நம் பகுதியில் காணப்படும் பாம்புகளில் பெரும்பாலானவை விஷமற்றவை தான்.எனவே பாம்பு கடிப்பட்ட நபரை பதட்டப்படுத்தாமல் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வது மிக மிக முக்கியம்.

சிலர் கை வைத்தியம் என்ற பெயரில் பாம்பு கடித்த இடத்தில் நெருப்பு வைப்பது,இறுக்கி கட்டு போடுவது போன்ற அப்பதான செயல்களை செய்வார்கள்.இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.உங்களை பாம்பு கடித்துவிட்டது என்பதை எப்படி கண்டறிவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

கடிபட்ட இடத்தில் இரண்டு பற்களின் அடையாளம் இருந்து வலி,வீக்கம் ஏற்பட்டால் அது பாம்பு கடிக்கான அறிகுறிகள் ஆகும்.பாம்பு கடித்த நபரை நடக்கவோ ஓடவோ வைக்காமல் படுக்க வைத்தபடி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.அதற்கு முன் பாம்பு கடித்த இடத்தில் சோப் பயன்படுத்தி கழுவி ஒரு காட்டன் துணியை வைத்து இறுக்கமாக காட்டாமல் லேசாக கட்டவும்.பிறகு மருத்துவமனை கொண்டு சென்று உரிய சிகிச்சை அளித்தால் பாம்பு கடி விஷம் முறியும்.

என்றும் இசைஞானி இளையராஜா தான் !!

0

இசைஞானி  என்றழைக்கப்படுபவர் தான் இளையராஜா. இவர் இன்றளவும் சுமார் 48 ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார். ஆனால் இப்பொழுது பல இசையமைப்பாளர்கள் இருந்தாலும் அவரை வெல்ல யாராலும் முடியாது. அந்த அளவிற்கு திறமை கொண்டுள்ளார். அவருக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் தனக்கு பிடிக்கவில்லை என முகத்துக்கு நேராக சொல்லிவிடும் தைரியம் கொண்டவர் .

அதனால் அவர் பெரும்பாலும் தலைக்கனம் கொண்டவர் என கூறுவார்கள். இவரின் இசைக்கு இன்றளவும் பல ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. இளையராஜா இசையமைப்பாளராக பயணித்து வந்த பாதையில் பிரபல  இயக்குனர் ஒருவர் திரைப்படத்தில் இசையமைக்க  ஒப்பந்தம் வாங்குகிறார். அப்பொழுது அந்த கதையை கேட்டு இளையராஜாவுக்கு பிடிக்கவில்லை.

ஆனாலும் தனது தொழில் மீது கொண்ட பக்தியின் காரணமாக எந்த ஒரு மறுப்பும் சொல்லாமல் அந்த திரைப்படத்திற்கு முழு பாடலையும் அமைத்து கொடுத்தார். அந்த படம் தான்  கடந்த 1985ம் ஆண்டு தமிழ் சினிமாவில் “நடிகர் திலகமாய்” திகழ்ந்த சிவாஜி கணேசனின் நடிப்பில் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான “முதல் மரியாதை” என்கிற மெகா ஹிட் திரைப்படம்.

அப்போது பாரதிராஜா இளையராஜாவிடம் எனது கதை பிடிக்கவில்லை என்று சொன்னாய் ஆனால் பாடல்கள் அனைத்தும் நன்றாக உள்ளது என  கண்ணீர் தழுவி கட்டி அணைத்து நன்றி தெரிவித்தாராம். மேலும் பாரதிராஜாவின் பல திரைப்படத்திற்கு இளையராஜாவே  இசையமைத்து வருகிறார்.

Excel தெரிந்தால் போதும் HCL.. சென்னையில் வேலை! அக்டோபர் 23, 24ல் இண்டர்வியூ!!

சென்னையில் உள்ள HCL என்ற ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளன. இதற்கு எக்செல் (EXCEL) மட்டும் தெரிந்தால் போதும் என கூறப்படுகிறது. வேலை தேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த hcl நிறுவனம் சென்னையில் உள்ள முக்கிய ஐடி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த அறிவிப்பின் படி இந்நிறுவனத்தில் (MEGA WALK IN INTERVIEW) நடைபெற உள்ளது. ஆனால் இந்த பணிக்கு 2முதல் 4 ஆண்டு பணி அனுபவம்  கட்டாயம் வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த வேலைவைப்புக்கான அடிப்படை கல்வி தகுதி டிகிரி முடித்திருக்க வேண்டும் மற்றும் மைக்ரோசாப்ட் எக்ஸலில் (Microsoft Excel) திறமையாக பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும் என்பது கட்டயம்.

மேலும் ஆங்கிலம்  சரளமாக பேசவும், நன்றாக எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அது மட்டும் அல்லாமல் Pivot Tables, Vlookup, Intermediate in Power BI, VBA/Macro தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். இதுவே இந்த பணிக்கான அடிப்படை தகுதிகள் ஆகும் .இந்த பணிக்கு தகுதி உள்ளவர்கள் HCL என்ற ஐடி நிறுவனத்தில் ID PROOF அப்டேட் செய்து விண்ணப்பிக்கலாம்.

இந்த பணிக்கான INTERVIEW அக்டோபர் 23 மற்றும் 24-ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தகவலை பயன்படுத்தி வேலை தேடும் இளைஞர்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

ராஜமாதாவுக்கு விவாகரத்து! உண்மையை உடைக்கும் கணவர்!

0

தமிழ் சினிமாவில் 80-களில் டாப் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரம் தொடங்கி பாகுபலி படத்தில் ராஜா மாதா வரை திறமையான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவரது நடித்த கதாபாத்திரங்கள் 90ஸ் மற்றும் 2கே கிட்ஸ் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறது.

இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு ,மலையாளம் , கன்னடம் ,இந்தி போன்ற பல மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்.  இவர் தெலுங்கு திரைப்பட இயக்குநர் கிருஷ்ண வம்சியை  காதலித்து 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்,  இவ்விருவருக்கும்  ரித்விக் வம்சி என்ற மகன்  உள்ளார்.  இந்த நிலையில்   நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கும்  அவரது கணவர் வம்சி -க்கும் இடையில் விவாகரத்து  நடந்து விட்டது. என்ற, தகவல் காட்டு தீயாய் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

இது குறித்து இயக்குநர் வம்சி பேசுகையில், “நானும் என்னுடைய மனைவியும் வேலை நிமித்தமாக பிரிந்து உள்ளோம். ஆனால்  இந்த  பிரிவு நிரந்தரம் இல்லை. என்னுடைய மனைவி மிகவும் அன்பானவர், எல்லோருடனும் அன்பாக பழகுவார். என்னுடைய குடும்பத்தை மிகவும் அக்கறையுடன் கவனித்து வருபவர். வெளியில் இருப்பது போன்று ரம்யா வீட்டில் இருக்கமாட்டார். எல்லாவற்றிலும்
புத்திசாலியாக யோசித்து செயல்படுபவர்”. என்று  பேசி இருந்தார். இந்த செய்தி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கமலின் முன்னாள் மனைவிக்கு அதிமுக-வில் முக்கிய பொறுப்பு!!

0

பாஜகவில் செயல்பட்டு வந்த நடிகை கவுதமி திடீரென்று அதிமுக கட்சியில் இணைந்துள்ளார். இதுமட்டுமல்லாமல் ஏற்கனவே பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் எடப்பாடி பழனிசாமி கட்சிக்கு மாறியது மேலும் சர்சைகுள்ளகியது. இந்த நேரத்தில் எடப்பாடி பழனிசாமி கவுதமிக்கு கட்சியில் முக்கிய பதவி அளித்துள்ளார்.

அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது. அனால் மக்கள் மனதில் நடிகை கவுதமி ஏன் பாஜகவில் இருந்து விலக வேண்டும் என்ற கேள்வி ஓடிக்கொண்டிருந்தது. அதற்கான காரணம் பாஜகவில் அழகப்பன் என்பவர்  தன்னிடம்  உள்ள சொத்து மற்றும் பணம் இதுபோன்ற மோசடி செய்ததாகவும், இவர் மீது குற்றம் சாட்டியும் சரியான நடவடிக்கை எடுக்காமல் பாஜக மறுப்பு தெரிவித்து அழகப்பனுக்கு முக்கிய பொறுப்புகளை  கொடுத்ததாலும் நான் பாஜகவில் இருந்து விலகி அதிமுக கட்சிக்கு மாறினேன் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் இணைந்தவுடன் மாபெரும் தமிழ் கனவு புத்தகத்தை  எடப்பாடி பழனிசாமிக்கு கவுதமி பரிசாக வழங்கினார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக கட்சியில் இருந்து மற்ற கட்சிக தொண்டர்கள் தொடர்ந்து  விலகி செல்வது இக்கட்சிக்கு தோல்வி ஏற்படுத்தும் என  பாஜக அச்சத்தில் உள்ளது. அதேபோல மாற்றுகட்சிகளில் இருந்து தனது கட்சிக்கு இழுக்க பாஜக தந்திரமாக செயல்பட்டு வருகிறது.

சீமான்’ அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை!! திருமாவளவன் விளக்கம்!!

0

தமிழக ஆளுநர் சமீபத்தில் விழா ஒன்றில் பங்கேற்றுள்ளார் அந்த விழாவில் தமிழ் தாய் வாழ்த்து பாடிய போது வாழ்த்து பாடலில் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் ‘ என்ற வரிகள் பாடலில் புறக்கணிக்கப்பட்டது.இச்சம்பவம் தமிழக கட்சியினரிடையே விமர்சனத்துக்கு உள்ளானது  இது தொடர்பாக சிலர் தங்கள் எதிர்ப்பு பதிவை பதிவிட்டு வருகின்றனர். இதற்கு பதிலளித்த விழாவை நடத்தியவர்கள் கவனச்சிதறல் காரணமாக அந்த வரியானது தவற விடப்பட்டது என அறிக்கை வெளியிடப்பட்டது.

இதுகுறித்து நாம் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் நான் ஆட்சிக்கு வந்தால் தற்போது இருக்கும் தமிழ்த்தாய் வாழ்த்தினை முழுவதுமாக நீக்கி விடுவேன் என கூறியிருந்தார். இதனை தொடர்ந்து இதுகுறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை முற்றிலும் நீக்கி விடுவேன் என்று அவர் சொல்லவில்லை அதற்கு பதிலாக சிறப்பான பாடல் ஒன்றை வெளியிடுவேன் என்று அவர் கூறியதாக விளக்கமளித்தார்.

முன்னதாக திருமாவளவனால் முதலமைச்சர் ஆக முடியாது அவருக்கு அந்த தகுதி இல்லை எனவும் மத்திய அமைச்சர் எல் முருகன் கூறியதற்கு சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. அவருக்கு முதல்வர் ஆகும் எல்லா தகுதியும் இருப்பதாகவும், அவரை எப்படியாவது முதலமைச்சர் ஆக்குவேன் என்றும் கூறியிருந்தார்.