Friday, September 20, 2024
Home Blog Page 4955

Bigg- Boss இல் நுழைந்தது ஒரு குற்றமா? வறுத்தெடுக்கும் பிரபல நடிகர்!

Big Boss மூன்றாவது சீசன் விஜய் டிவி ஒளிப்பரப்பு ஆகிகொண்டிருக்கிறது. இதில் பல பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். இதில் இயக்குனர் சேரனும் ஒருவர் என அனைவரும் அறிந்ததே. இதனால் இயக்குனர் சேரம் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வது பற்றி இயக்குனரும், நடிகருமான மனோபாலா கருத்து தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் (Big Boss) வீட்டில் ஒரு விளையாட்டின் போது சேரன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என மீரா மிதுன் கூறிய குற்றச்சாட்டு ரசிகர்களிடையே அவர் மீது அதிருப்தியை ஏற்பட்டு அவருக்கு ஆன்லைன் குறைவான வாக்குகளே கிடைத்துள்ளது. இதனால், மீரா மிதுன் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என செய்திகள் கசிந்துள்ளது

அவர் மீது மீரா மிதுன் இப்படி பாலியல் புகார் கூறியது சேரனின் ரசிகர்களுக்கு அவர் மீது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, மீராவின் குற்றச்சாட்டை பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களே ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் உண்மைக்கு மாறான விசியங்களை தெரிவிக்கிறார். எனவே, அவர் நடிக்கிறார் என big boss வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் தெரிவிக்கின்றனர் .

இந்நிலையில் இந்நிகழ்வு பற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகர் மனோபாலா ‘ சேரன் எவ்வளவு நல்ல படங்களை கொடுத்த இயக்குனர் நல்ல நடிகரும் ஆவார். பிக்பாஸ் வீட்டிற்கு அவர் ஏன் போக வேண்டும். அவர் அங்கு போனதே தவறு என்னை கூடத்தான் 3 முறையும் கூப்பிட்டார்கள். ஆனால், நான் செல்ல வில்லை’ என அவர் கூறியுள்ளார்.

இது தவிர bigg boss நமது வாழ்வியல் தன்மையை கெடுக்கும் விதமாக இருக்கிறது என அதை தடை செய்ய வேண்டும் எனவும் ஒரு சாரார் கூறுகின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

அதிமுக ஆட்சி கவிழ்ப்பு! ஸ்டாலின் வியூகம் இதுதான்! விரைவில் ஆட்சி மாற்றம் ?

0

நாங்கள் நினைத்தால் ஆட்சி கலைக்கப்படும், அதிமுக ஆட்சி இன்னும் ஒரு மாதத்தில் என்ன ஆகும் என்பது தெரியும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

வேலூர் தேர்தல் நிறுத்தப்பட்டு மீண்டு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து திறந்த வேனில் வாக்கு சேகரித்த அவர், நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பதை சுட்டிக்காட்டினார்.

மத்திய அரசு பிஜேபி தேர்தல் ஆணையத்துடன் கூட்டணி வைத்துக்கொண்டு செய்த சதிகளை முறியடித்து வென்றதைப் போல வேலூரிலும் வெல்வோம். திமுக மீது களங்கம் ஏற்படுத்த சிலர் முயற்சித்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் மிட்டாய் கொடுத்து ஏமாற்றியதாக கூறுகிறீர்கள். நீங்கள் முதல்வர் பழனிசாமி அல்வா கொடுத்து ஏமாற்றியதாக நான் கூறுகிறேன் என்றும் தெரிவித்தார். சூழ்ச்சியை, சதியை மக்கள் முறியடித்துள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.

வெற்றி பெற்ற உடனே திமுக பல சாதனைகளை செய்துள்ளது. அவற்றில் ஒன்று மும்மொழிக் கொள்கைக்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து, அதை வாபஸ் பெறவைத்தது திமுக தான் என்றும், மேலும் பேசியதாவது, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க குடியாத்தம் கே.வி.குப்பம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார்.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை வேலூர் மாவட்டம் முழுவதும் அனைத்து கிராமங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். இப்போது நினைத்தாலும் இந்த ஆட்சியை கவிழ்க்க முடியும், அந்த எண்ணம் உள்ளது. காத்துக்கொண்டிருக்கிறோம் எனவும் கூறினார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

55 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம்,மீண்டும் தற்போதுதான்! என்ன செய்யும் இந்தியா?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே எந்த விளையாட்டு போட்டிகள் நடப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 55 ஆண்டுகள் கழித்து இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தான் சென்று விளையாட இருக்கிறது. அகில இந்திய டென்னிஸ் சங்கம் ஏ.ஐ.டி.ஏ உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த டென்னிஸ் நிகழ்ச்சி செப்டம்பர் 14-15 தேதிகளில் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் விளையாட்டு வளாகத்தில் நடைபெறும். “ஆம், நாங்கள் செல்வோம்” என்று ஏஐடிஏ பொதுச் செயலாளர் ஹிரோன்மோய் சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.

இது, வெறும் டென்னிஸ் இருதரப்பு தொடர் மட்டும் இல்லை, இது உலகக் கோப்பையை விடவும் பெரிய போட்டியாக கருதுகிறோம். எனவே இதில் எந்தவொரு முன்னணியிலும் தடை இல்லை.”
ஒரு சகாப்தத்திற்கும் மேலாக பார்க்கப்படுகிறது. பாக்கிஸ்தான் நடத்திய பெரும்பாலான விளையாட்டு நிகழ்வுகள் இந்தியாவால் தவிர்க்கப்பட்டன.

கடைசியாக விளையாடிய விளையாட்டு நிகழ்வு 2007 பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்ததுதான். பிப்ரவரியில் டேவிஸ் கோப்பை டிரா வில் முடிந்தது, ஆனால் புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, அணியில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் மோசமாகத் தெரிந்தன.

ஐ.ஐ.டி.ஏ. “அணித் தேர்வு, போட்டிகளில் பங்கேற்பது அல்லது விளையாட்டு வீரர்களால் நாடுகளுக்குச் செல்வதில் விளையாட்டு அமைச்சகம் தலையிடாது,” என்று அவர் கூறினார். 55 ஆண்டுகள் கழித்து நடைபெற உள்ள இந்த போட்டி மிகவும் ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

திமுக வெற்றி செல்லாது! அதிரடி அறிக்கை ? முதல்வர் அறிவிப்பு!

0

திமுகவின் வெற்றி செல்லாது. அவர்களுடைய வெற்றி பொய்யாகும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் நிருத்தபட்டதை அடுத்து மீண்டு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதிக்கு, ஆகஸ்ட் 5-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில், அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் அந்தக் கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் உள்ளிட்ட 28 பேர் போட்டியிடுகின்றனர்.

அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி சண்முகம் போட்டி இடுகிறார். ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் முதலமைச்சர் பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாத திமுக இப்போது என்ன வாக்குறுதி தரும் என்று தெரியவில்லை.

பொய் வாக்குறுதி பொய்யான அறிக்கை என்ற மிட்டாயை மக்களிடம் கொடுத்து பொய்யான வெற்றியை திமுக பெற்றது. இந்த வெற்றி செல்லாது என்றும்,
அரசின் திட்டங்கள் என்ன என்று தெரியாமலேயே ஸ்டாலின் அறிக்கை விடுவார். அவர் எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது. ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

அதிமுக ஆட்சி தொடரும் இன்னும் 10 ஆண்டுகள் கழித்து பார்த்தால் தமிழகம் விஞ்ஞான உலகமாக இருக்கும். எத்தனை லட்சம் மக்கள் வீடில்லாமல் இருந்தாலும் அனைவருக்கும் வீடு கட்டித்தரப்படும்
தடையில்லா மின்சாரம் தரப்படுவதால் தமிழகத்திற்கு புதிய தொழிற்சாலைகள் வருகின்றன.

அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களில் பல்வேறு நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் 16,000 மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது’ எனத் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் திமுக பொய்யான அறிக்கை குடுத்து வெற்றி பெற்றதால் அவர்களது வெற்றி செல்லாது என்று கூறினார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

Strike! சென்னையில் பேருந்துகள் ஓடவில்லை? அரசு என்ன செய்யும்?

0

எதற்கு எடுத்தாலும் போராட்டம் பண்ணின நடிகர் ரஜினி சொல்வது போல் தமிழ்நாடு சுடுகாடாய் மாறிவிடும். அது போல எங்கு பார்த்தாலும் போராட்டம் இன்றைய சூழலில். தற்பொழுது சென்னையில் பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தம். ஊழியர்கள் ஓய்வு எடுக்க ஓய்வு அறை கட்ட வலியுறுத்தி வருகின்றனர்.

சென்னையில் போராட்டம் பேருந்துகள் ஓடவில்லை. ஏனென்றால் பேருந்து வேலை செய்யும் ஊழியர்கள் வேலை நேரங்களில் ஓய்வு எடுக்க ஓய்வு அறை கட்டி தர சொல்லியும் அரசு செவி சாய்காததால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை to வடபழனி செல்லும் பேருந்துகள் பணிமனையில் இருந்து இயங்கவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஓட்டுனர்கள் ஓய்வு விடுதி கட்டி தர வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இது பற்றி அரசு செவி சாய்காததால் ஓட்டுனர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேருந்து ஓட்டுநர் அவர்களுக்கு ஓய்வு விடுதி பற்றி அரசு பரிசீலிக்க வேண்டும். பேருந்து வேலை நிறுத்தத்தால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

கெடு விதித்த பாமக நிறுவனர் ராமதாஸ்! 2021- இல் இது நடந்தே ஆக வேண்டும்!

0

மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக மேற்கொள்ள வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “2021 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன.

மத்திய அரசு உறுதியளித்தவாறு மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காணும் வகையில் நடத்தப்படாது என்று வெளியாகும் செய்திகள் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன. இவை உண்மையாக இருந்தால் மத்திய அரசின் நிலை கண்டிக்கத்தக்கது.

உலகின் பல்வேறு நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியா பல வழிகளில் மாறுபட்ட நாடு ஆகும். பல்வேறு இனங்கள், மதங்கள், கலாச்சாரங்கள், சமூக அடுக்குகளைக் கொண்ட நாடான இந்தியாவில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களை முன்னேற்றுவதற்கு சமூகநீதி வழங்க சாதிவாரியான மக்கள் தொகை  மிகவும் அவசியம் ஆகும்.

1931 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் மேற்கொள்ளப்பட்ட பிறகு கடந்த 90 ஆண்டுகளாக இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப் படவில்லை. இதனால், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது உள்ளிட்ட விஷயங்களில் முழுமையான புள்ளிவிவரங்கள் கிடைக்காமல் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட்டன.

இத்தகைய பிரச்சினைக்கு முடிவு கட்டும் வகையில், 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. அவற்றை ஓரளவுக்கு மட்டும் ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, 2021 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு  பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காணும் வகையில் நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு  ஆகஸ்ட் 31 ஆம் தேதி அறிவித்தது. இந்த அறிவிப்பை பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றிருந்த நிலையில், அது செயல்படுத்தப்படாத வெற்று அறிவிப்பாகிவிடுமோ என்ற பெருங்கவலை ஏற்படுகிறது.

மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு முன்பாக அதில் என்னென்ன சிக்கல்கள் ஏற்படும் என்பதை அறிந்து கொள்வதற்காக மாதிரி கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். அத்தகைய கணக்கெடுப்பு தமிழகத்தில் மறைமலைநகர் நகராட்சி, சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, நீலகிரி மாவட்டம் குன்னூர் ஆகிய 3 பகுதிகளில் உள்ள 293 கணக்கெடுப்பு வட்டங்களில் ஆகஸ்ட்12-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அதற்காக உருவாக்கப்பட்டுள்ள மென்பொருட்களில்  பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை தனியாக கணக்கெடுப்பதற்கான வசதி எதுவும் இல்லை என்று  மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒருவேளை முதன்மை கணக்கெடுப்பின் போதாவது இந்த வசதி ஏற்படுத்தப்படுமா? என்ற விவரமும் தெளிவுபடுத்தப்படவில்லை.

வழக்கமாக மாதிரி கணக்கெடுப்பு எவ்வாறு நடத்தப்படுகிறதோ, அதே முறையில் தான் முதன்மைக் கணக்கெடுப்பும் நடத்தப்படும். அதனால், இந்த மாதிரிக் கணக்கெடுப்பின் போது பிற பிற்படுத்தப்பட்ட  வகுப்பினரின் விவரங்கள் கணக்கெடுக்கப்படவில்லை என்றால், முதன்மைக் கணக்கெடுப்பிலும் இந்த விவரங்கள் இடம் பெறாது. இது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு செய்யப்படும் துரோகமாக அமையும். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பே சாதிவாரியாக மேற்கொள்ளப்பட வேண்டுமென  பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது.

அவ்வாறு தொகுப்பு இட ஒதுக்கீடு வழங்கப்படும் போது ஒவ்வொரு சாதிக்கும் எவ்வளவு விழுக்காடு என்பதைத் தீர்மானிக்க அவர்களின் எண்ணிக்கை அவசியமாகும். அதுதவிர  உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் மக்கள் தொகையை தீர்மானிக்கவும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியம் ஆகும்.

OBC கணக்கெடுப்புடன் ஒப்பிடும் போது சாதிவாரி கணக்கெடுப்பு கடினமானது அல்ல. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை கணக்கெடுப்போர் நேரடியாக அடையாளம் காண முடியாது. மாறாக, ஓபிசி பிரிவில் உள்ள சாதிகளின் பட்டியலை மக்களிடம் படித்துக் காட்டி, அப்பட்டியலில் உள்ள சாதி தான் தங்களின் சாதி என்று மக்கள் கூறினால், அவர்கள் பெயர் ஓபிசி பிரிவில் சேர்க்கப்படும்; அத்துடன் அவர்கள் தெரிவிக்கும் சாதியையும் சேர்த்து விட்டால் அது சாதிவாரி கணக்கெடுப்பாக மாறி விடும்.

ஆகவே,  2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக மேற்கொள்வதற்கு  மத்திய அரசு முன்வர வேண்டும்; அதற்கான ஏற்பாடுகளை இப்போதிலிருந்தே தொடங்க வேண்டும்”, என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

டிசம்பர் 20 இல் “ஹீரோ” இவர்தான் ! இன்று அறிவிப்பு வெளியானது.

0

சீமராஜா, Mr local சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் முன்னதாக வெளி வந்து சரியாக போகாததால் சிவகார்த்திகேயன் பெரும் வருத்தத்தில் உள்ளார். பிறகு மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘ஹீரோ’ திரைப்படம் டிசம்பர் 20-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ராஜேஷ் இயக்கத்தில் ‘Mr.லோக்கல்’ படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘ஹீரோ’. ‘இரும்புத்திரை’  மித்ரன் இயக்கி வரும் இந்தப் படத்தில் அர்ஜுன், அபிய் தியோல், கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றி நடைபெற்று வந்தது. ஆனால் இதன் தொடர்ச்சியாக தொடங்கப்பட்ட பாண்டிராஜ் படத்திலும் கவனம் செலுத்தி வந்தார் சிவகார்த்திகேயன். 

இதனால் ஹீரோ மற்றும் பாண்டி ராஜ் படங்களில் எந்தப் படம் முதலில் வெளியாகும் என்ற குழப்பம் உண்டானது. இதனைத் தீர்க்கும் பொருட்டு டிசம்பர் 20-ம் தேதி படம் வெளியீடு என்று ‘ஹீரோ’ படக்குழு அறிவித்துள்ளது. இதோடு தங்களது படத்தின் லோகோ வடிவமைப்பையும் வெளியிட்டுள்ளனர்.  

‘ஹீரோ’ படக்குழு அறிவிப்பைத் தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில்  சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி வரும் படம் சரஸ்வதி பூஜை விடுமுறை நாளில் வெளியாகும் எனத் தெரிகிறது. இந்தப் படத்தில் பாரதிராஜா, ஆர்.கே.சுரேஷ், சூரி, ஐஸ்வர்யா ராஜேஷ் தங்கையாக நடிக்க தொடங்கி ஒரு பெரிய பட்டாளமே நடித்து வருகிறது. 

மித்ரன் இயக்கத்தில் ‘ஹீரோ’ மற்றும் இயக்குநர் பாண்டிராஜ் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் சிவகார்த்திகேயன். 

இந்த வருடம் இறுதியில் வரும் ஹீரோ படம் வெற்றியடைய வாழ்த்துகள்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

“தல” தான் இதுக்கு காரணம்? காவல் துறை எடுத்த கடும் நடவடிக்கை!

0

நாம் படிக்கும் போது எல்லாம் சண்டை என்றால் குச்சிகளை வைத்து சண்டை போடுவோம். ஆனால் இப்போதெல்லாம் அறுவா,கத்தி, துப்பாக்கி, பிளேடு போன்ற பொருளை வைத்து தான் சண்டை போடுகிறார்கள். நாடு எங்கே போகிறது. அப்படி ஒரு சம்பவமாக சென்னை அரும்பாக்கம் சாலையில் சில தினங்களுக்கு முன்னர் பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த இரு தரப்பு மாணவர்கள், ஒரே பேருந்தில் கோயம்பேடு சென்றுகொண்டிருந்தனர்.

அந்த பேருந்தில் கல்லூரி மாணவர்கள் இரு தரப்பினரிடையே யார் ரூட்டு தல என்று வாக்குவாதம் ஏற்பட்டு கைக்கலப்பாக மாறியது. ஒருகட்டத்தில் ஒரு தரப்பு மாணவர்கள் மறைத்துவைத்திருந்த அரிவாள், பட்டாகத்தி ஆகிய ஆயுதங்களை எடுத்து மற்றொரு தரப்பினரை தாக்க ஆரம்பித்தனர்.

பேருந்தில் நடந்த சண்டையில், பச்சையப்பன் கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் வசந்த் என்பவர் உட்பட 7 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் மற்ற மாணவர்கள் அலறியடித்து ஓடினர்.

அங்கு நடந்த சம்பவம் அறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோதலில் ஈடுபட்ட சில மாணவர்களை கைது செய்தனர்.
இந்த மோதலில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிகொண்டிருக்கும் வசந்தகுமார் என்னும் மாணவரை மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதனை தொடர்ந்து மாணவர்களின் இந்த மோசமான செயல்களை கண்டித்து காவல்துறை சார்பில் பல கல்லூரி நிர்வாகத்திடம் ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் ரூட் தல எனப்படும் 90 மாணவர்கள் கண்டுபிடித்து காவல்துறையினர் அழைத்து வரப்பட்டனர்.

காவல் துறையினர் இதற்கு தீர்வாக மாணவர்கள் அனைவரும் இனி எந்தவித வன்முறையிலும் ஈடுபட மாட்டோம், எங்கள் பெற்றோருக்கு நல்ல பெயரை வாங்கித் தருவோம் என ஒரே குரலாக உறுதிமொழி எடுத்தனர்.

சட்டத்தை மீறி எந்த ஒரு தவறு செய்தாலும் அவர்களை கைதுசெய்ய அம்பத்தூர் துணை ஆணையருக்கு அதிகாரம் உண்டு என கைப்பட பத்திரம் எழுதிக் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் எச்சரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

படிக்கும் போதே இப்படி அருவாள், கத்தி, கம்பு, வெட்டருவா, போன்ற பொருள் வைத்து கொண்டு திரிந்தால் இந்த இளைஞர் சமூகம் எப்படி நல்ல நிலையை அடையும். ஆசிரியர் மற்றும் பெற்றோர் அனைவரும் இது போன்ற மாணவர்களுக்கு நல்ல அறிவுரை வழங்க வேண்டும்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

இப்படி ஒரு சம்பவமா? 112 ஆண்டுகளுக்கு பிறகு! அடகொடுமையே!

0

நடப்பு உலக கோப்பை வெற்றி அணியான இங்கிலாந்து அயர்லாந்து உடனான போட்டியில் போராடி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அடுத்த போட்டியே கஷ்ட பட்டு வெற்றி பெறுவதா ? அயர்லாந்து உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தகுதி பெறாத அணி என்பது அனைவரும் அறிந்ததே.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா பங்கு பெறும் ஆஷஸ் தொடர் வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அயர்லாந்துக்கு எதிராக ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் ஆடியது இங்கிலாந்து அணி.

இங்கிலாந்து லண்டன் லார்ட்ஸில் நடந்த கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி வெறும் 85 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய அயர்லாந்து அணி 207 ரன்கள் அடித்தது.
122 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடியது இங்கிலாந்து அணி.

இரண்டாவது இன்னிங்ஸில் பர்ன்ஸுடன் தொடக்க வீரராக நைட் வாட்ச்மேன் ஜாக் லீச் இறக்கப்பட்டார். பர்ன்ஸ் 6 ரன்களில் ஆட்டமிழந்தபோதிலும், யாருமே எதிர்பார்த்திராத வகையில், 11ம் வரிசை வீரரான ஜாக் லீச் அபாரமாக ஆடி 92 ரன்களை குவித்தார்.
அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிய ராய் 72 ரன்களை குவித்தார். இவர்கள் இருவர் மட்டுமே இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக ஆடினர். இவர்கள் தவிர ரூட் மற்றும் சாம் கரன் மட்டுமே 30 ரன்களுக்கு மேல் அடித்தனர்.

இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் 303 ரன்களை குவித்தது அணி. இங்கிலாந்து அணியை வீழ்த்த 181 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய அயர்லாந்து அணிக்கு கிறிஸ் வோக்ஸும் ஸ்டூவர்ட் பிராடும் இணைந்து துவம்சம் செய்தனர். வெறும் 16 ஓவர்களில் 38 ரன்களுக்கு அயர்லாந்து அணியை ஆல் அவுட் செய்தனர். வோக்ஸ் 6 விக்கெட்டுகளையும் பிராட் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக நைட் வாட்ச்மேனாக இறங்கி 92 ரன்களை குவித்த ஜாக் லீச் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் வென்றதன் மூலம் 112 ஆண்டுகளுக்கு பிறகு தரமான சம்பவத்தை செய்துள்ளது இங்கிலாந்து அணி. முதல் இன்னிங்ஸில் குறைந்த ஸ்கோர் அடித்தும் அந்த போட்டியை வென்றதில் முதலிடத்தில் இங்கிலாந்து அணி உள்ளது. 1886/87ம் ஆண்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 45 ரன்கள் அடித்தும் அந்த போட்டியில் வென்றது.

அது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி. 1907ம் ஆண்டில் முதல் இன்னிங்ஸில் 76 ரன்கள் அடித்த இங்கிலாந்து அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அந்த போட்டியை வென்றது.
அதன்பிறகு 112 ஆண்டுகள் கழித்து, முதல் இன்னிங்ஸில் குறைந்த ஸ்கோர் அடித்தும் அந்த போட்டியில் ஒரு அணி வென்றது இந்த போட்டியில் தான். முதல் இன்னிங்ஸில் 85 ரன்கள் அடித்த இங்கிலாந்து அணி, அயர்லாந்தை 143 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்த இடைப்பட்ட 112 ஆண்டுகளில், முதல் இன்னிங்ஸில் குறைந்த ஸ்கோர் அடித்த எந்த அணியும் வென்றதில்லை. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணி என்பது குிப்பிடத்தக்கதாகும். இருந்தும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தகுதி பெறாத அணியிடம் இப்படி மோசமாக ஆடியது இங்கிலாந்து மக்களிடையே அதிர்ச்சி அளிக்கிறது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

A1 படத்தின் மக்கள் கருத்து ! லொள்ளு சபா சந்தானம்! வயிறு குலுங்க சிரிப்பு மழை!

0

சந்தானம் நடிப்பில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் A1 என்ற திரைப்படத்தின் பிரபலங்களின் ட்விட்டர் ரிவ்யூ மக்களின் கருத்து எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். முக்கியமாக லொள்ளுசபா சந்தானம் மீண்டும் வந்து விட்டதாக தெரிவித்துள்ளார்கள்.

படம் வழக்கம்போல் சந்தானத்தின் டைமிங் காமெடி சிறப்பாக வந்துள்ளது மற்றும் சர்ச்சைக்குரிய பிராமணர்களை பற்றி பேசிய வசனங்கள் என ஒரு தரப்பு கூறியுள்ளது முற்றிலும் தவறு என படக் குழு மறுத்துள்ளது. யார்மனதையும் புண்படுத்தும் எண்ணத்தில் எடுக்கப்பட்டவை அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் எனக் கூறியுள்ளனர்.

படம் மிகவும் சிரிப்பாக வந்துள்ளதாக மக்கள் கூறிவருகின்றனர். தில்லுக்கு துட்டு 2 படம் வெற்றிக்கு பிறகு இந்த ஆண்டு இரண்டாவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.