Thursday, September 19, 2024
Home Blog Page 4965

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய திட்டத்தை அறிவித்தார்

0

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய திட்டத்தை அறிவித்தார்

தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க ‘யாதும் ஊரே’ என்ற இணையதளம் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட அவர், உலகெங்கும் உள்ள தமிழர்கள், தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு ஏதுவாக முதலீட்டு தூதுவர்களை உருவாக்கி, “யாதும் ஊரே” என்ற தனி சிறப்பு பிரிவு மற்றும் வலைதளம் ரூ.60 லட்சம் செலவில் உருவாக்கப்படும். மேலும் கோவையில் ஐ.டி நிறுவன தேவைக்காக 200 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கட்டட வளாகம் அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள், உற்பத்தியை பெருக்க வழங்கப்படும் மானியம் 50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு 20 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் எனவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும் அரசின் தரவுகளை பாதுகாக்க புதிய தொழில்நுட்பத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

அதே நேரம், “மக்களைத் தேடி அரசு” என்ற திட்டம் 90 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தார். நான்காவது தொழில் புரட்சிக்கான தகவல் தொழில் நுட்பங்களின் மூலம் தமிழ்நாட்டின் மின் ஆளுமையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆளுநர் உரைக்கு பதிலளிக்கும் போது தெரிவித்திருந்தை அவர் சுட்டிக் காட்டி பேசினார்.

இதையும் படிக்கலாம்: எம்.பி ஆனதும் வழக்கம் போல அராஜகத்தை ஆரம்பித்த சேலம் திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன்

இதற்கிடையில், நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறோம் என பெருமையாக சொல்லும் திமுகவினர், தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற நாடாளுமன்றத்தில் பேசி உதவ வேண்டும் என்றும் முதலமைச்சர் அவர்களை கேட்டுக்கொண்டார்.

இதையும் படிக்கலாம்: வைகோ எம்.பியானது இனிக்கிறது! அன்புமணி ராமதாஸ் எம்.பியானது கசக்கிறதா? தனியார் ஊடகத்தை வெளுத்து வாங்கிய பாமக நிர்வாகி

எம்.பி ஆனதும் வழக்கம் போல அராஜகத்தை ஆரம்பித்த சேலம் திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன்

0

எம்.பி ஆனதும் வழக்கம் போல அராஜகத்தை ஆரம்பித்த சேலம் திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன்

வனச்சரக அலுவலரை மிரட்டியதாக சேலம் மாவட்டத்தை சேர்ந்த திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் திமுக சார்பில் போட்டியிட்டு ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 926 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை வீழ்த்தி எஸ்.ஆர்.பார்த்திபன் வெற்றி பெற்றார். 

இந்நிலையில், வேடன்கரடு மலைப்பகுதிக்கு கள தணிக்கைக்கு சென்ற வனக்காவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வனச்சரக அலுவலர் திருமுருகன் தந்த புகாரின் பேரில் திமுக எம்.பி எஸ்.ஆர்.பார்த்திபன் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இதுதொடர்பாக பேசிய அவர், தன் மீது அவப்பெயர் ஏற்படுத்தவே வழக்குப்பதிவு செய்துள்ளதாக எஸ்.ஆர். பார்த்திபன் தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர்.

கடந்த காலங்களில் திமுக என்றாலே அராஜகம் மற்றும் ரவுடிகள் நிறைந்த கட்சி என்று பெயர் எடுத்து வந்த நிலையில் மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள ஆளுங்கட்சிகளின் மீதுள்ள அதிருப்தியால் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு மக்கள் வாய்ப்பளித்தனர். கிடைத்த வாய்ப்பை திமுக எம்பிக்கள் சரியாக பயன்படுத்தி கட்சிக்கு நல்ல பெயரை பெற்று தர முயற்சிக்காமல் வழக்கம் போல தங்களுடைய அராஜகத்தை காட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

இதற்கு முன் ஓசி பிரியாணி,ஓசி டீ, ஓசி பஜ்ஜி,பியூட்டி பார்லர் என திமுகவின் தொண்டர்களாலும் கீழ்மட்ட நிர்வாகிகளாலும் தான் மக்களுக்கு தொந்தரவுகள் ஏற்பட்டு வந்தது. தற்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.பி.யாலேயே மக்களுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

வைகோ எம்.பியானது இனிக்கிறது! அன்புமணி ராமதாஸ் எம்.பியானது கசக்கிறதா? தனியார் ஊடகத்தை வெளுத்து வாங்கிய பாமக நிர்வாகி

0

வைகோ எம்.பியானது இனிக்கிறது! அன்புமணி ராமதாஸ் எம்.பியானது கசக்கிறதா? தனியார் ஊடகத்தை வெளுத்து வாங்கிய பாமக நிர்வாகி

நடந்து முடிந்த மாநிலங்களவை தேர்தலில் திமுக மற்றும் அதிமுக சார்பாக தலா 3 எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் மக்களவை தேர்தலில் அமைத்த கூட்டணி வாக்குறுதியின் படி திமுக சார்பாக வைகோவிற்கும்,அதிமுக சார்பில் அன்புமணி ராமதாசிற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் வைகோவை தேர்ந்தெடுத்த செய்தியை நேர்மறையாகவும் அன்புமணி ராமதாஸை தேர்தெடுத்ததை எதிர்மறையாகவும் தமிழக ஊடகங்கள் காட்டி வருவதாக பாமகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவர், பசுமை தாயகம் அருள் ரத்தினம் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து “சாதிவெறி விகடன் கும்பலின் ஊடக விபச்சாரம்: பாமக மீது பாய்ச்சல்! மதிமுகவுக்கு பூங்கொத்து!” என்ற தலைப்பில் முகநூல் பக்கத்தில் அவர் பதிவு செய்துள்ளதில் கூறியுள்ளதாவது.

விகடன் குழுமத்தில் பணியாற்றுவோரில், குறிப்பாக அங்கு செய்திகளை தீர்மானிப்பவர்களில் 50 விழுக்காட்டுக்கு மேல் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் ‘புதிய பிராமணர்கள்’ ஆகும்.

தமிழக ஊடகங்களை இதற்கு முன்பு கட்டுப்பாட்டில் வைத்திருந்த பழைய பிராமணர்கள் ஒட்டுமொத்தமாக தமிழர்களை எதிர்க்கும் வகையில் செய்திகளை வெளியிடுவார்கள். ஆனால், இப்போது பெரும்பான்மை தமிழ் ஊடகங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் புதிய பிராமணர்களின் ஒற்றை எதிரி வன்னியர்கள் ஆகும் (கூடவே, அவ்வப்போது இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களையும் தாக்குவார்கள்).

விகடன் குழுமத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஊடகவியல் பணியில் சேர்ந்தவர்களில் 80% ஒரே சாதியினர் என்று கூறப்படுகிறது. அந்த குழுமத்திலிருந்து வெளியாகும், ஜூனியர் விகடன், ஆனந்தவிகடன் ஆகிய இதழ்களும், விகடன் டாட் காம் எனும் இணைய பத்திரிகையும் முழுக்க முழுக்க சாதிவெறி மனநோயால் பீடிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் வெளியாகும் செய்திகள் அனைத்திலும் சாதிவெறி விஷம் நீக்கமற நிறைந்திருக்கிறது.

“பாமக மீது பாய்ச்சல்! மதிமுகவுக்கு பூங்கொத்து!”

நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் அதிமுக ஆதரவுடன் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும் (பாமக), திமுக ஆதரவுடன் வைகோ அவர்களும் (மதிமுக) வெற்றி பெற்றுள்ளார்கள். இதில் வைகோவின் வெற்றி இனிப்பான செய்தியாகவும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் வெற்றி மிகவும் கசப்பான செய்தியாகவும் விகடன் கும்பலின் மனதை தாக்குகிறது! இது சாதிவெறி மனநோய் அல்லாமல் வேறு என்ன?

“வைகோவின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்குமா?” என்றும் “`ஒரு மணிநேரம் நடந்த விவாதம்’ – ராஜ்யசபா எம்.பி ஆகிறார் வைகோ!” என்றும் விகடன் கும்பல் வைகோவுக்காக எழுதிய கட்டுரைகளில், வைகோ வானளாவ புகழப்பட்டுள்ளார். ஆனால், “அன்று… ஜெயலலிதா தடுத்தார்! இன்று… எடப்பாடி கொடுத்தார்!” என மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் குறித்த விகடன் கும்பல் கட்டுரையில் மட்டும் பாமகவும் மறுத்துவர் அய்யா அவர்களும் வறுத்து எடுக்கப்பட்டிருக்கிறார்கள்!

இப்படி வெறிபிடித்த நாய் போல பாமக மீது பாய்ந்து விழும் விகடன் கும்பல், மதிமுகவுக்கு மட்டும் பூங்கொத்து கொடுப்பது ஏன்?

வைகோ அவர்கள் தேர்வுக்கும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தேர்வுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. இரண்டுமே தேர்தல் கூட்டணி உடன்பாட்டில் அளிக்கப்பட்டுள்ளன. இரண்டு கட்சிகளுமே தங்களது கூட்டணி கட்சிகளை முற்காலத்தில் விமர்சனம் செய்துள்ளன. இன்னும் சொல்லப்போனால், பாமக அதிமுகவை விமர்சனம் செய்ததை விட, மதிமுக திமுகவை விமர்சனம் செய்ததுதான் அதிகம். ஆனால், பாமகவின் விமர்சனங்களை மட்டுமே விரிவாக பதிவு செய்துள்ள விகடன் கும்பல், வைகோ அவர்களின் விமர்சனங்கள் எதையும் குறிப்பிடாமலேயே கட்டுரை தீட்டியுள்ளது.

தமது சாதிவெறி அரிப்புக்காக, பாமகவை இழிவாக விமர்சிக்கும் விகடன் கும்பல் ஒரு இதழியல் குழுமமே அல்ல. அது ஊடக தர்மத்தை படுகொலை செய்யும் ஊடக விபச்சார கும்பல் என்பதே உண்மை ஆகும்.

“விகடன் கும்பல் தனது பன்முகத்தன்மையை பகிரங்கப்படுத்த வேண்டும்”

விகடன் குழுமம் ஒற்றை சாதியின் ஆதிக்கத்தில் இருப்பது ஜனநாயத்திற்கு பேராபத்து. விகடனின் சாதிவெறி தொடர் பிரச்சாரத்தால் தமிழ்நாட்டின் நல்லிணக்கமும், அமைதியும் பாதிக்கப்படும். இந்த ஆபத்தை தடுக்க – விகடன் குழுமம் தமது ஊடகத்தில் செய்திகளை உருவாக்கும் படிநிலைகளில் (ஆசிரியர் குழு, செய்தியாளர்கள் வாரியாக) தமிழ்நாட்டின் எந்த சமூகத்தினர் எத்தனை விழுக்காட்டினர் பணியாற்றுகிறார்கள் என்பதை வெளியிட வேண்டும்.

2018 மே மாதம் 3 ஆம் நாள் கானா நாட்டின் அக்ரா நகரில் கூடிய ஐநாவின் யுனெஸ்கோ ஊடகங்கள் மாநாட்டில், ‘அக்ரா பிரகடனம்’ (Accra Declaration) எனும் அறிவிப்பை வெளியிட்டார்கள். அந்த யுனெஸ்கோ பிரகடனத்தில் “ஊடகங்களில் பன்முகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, சமூகத்தில் அங்கம் வகிக்கும் எல்லா பிரிவினரும் ஊடகங்களிலும் இடம்பெற வேண்டும் (fair representation in the media of different groups in society)” என்று கூறப்பட்டுள்ளது.

Accra Declaration: UNESCO World Press Freedom Day International Conference.- “We therefore: Call on each UNESCO Member State to:… Promote media diversity, including by preventing excessive concentration of media ownership, by requiring media outlets to be transparent about their ownership, …by promoting fair representation in the media of different groups in society.”

அந்த வகையில் விகடன் குழுமத்தில் படிநிலை பணிகள் வாரியாக FC, BC, MBC, SC, ST, தமிழ் மொழி பேசுவோர், சிறுபான்மையினர் உள்ளிட்ட ஒவ்வொரு பிரிவினரும் எத்தனை விழுக்காட்டினர் வேலை செய்கிறார்கள் என்பதை, பணி படிநிலை வாரியாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

இது விகடன் குழுமம் என்கிற ஒரு நிறுவனத்தின் சிக்கல் அல்ல. இது தமிழ்நாட்டை பீடிக்கும் பேராபத்து. எனவே, “விகடன் கும்பல் தனது பன்முகத்தனமையை வெளிப்படுத்த வேண்டும்” என வலியுறுத்தும் கடமை ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டுள்ள அனைவருக்கும் உள்ளது என்றும் அந்த பதிவில் அவர் கூறியுள்ளார் .

இதையும் படிக்கலாம்: எம்.பி ஆனதும் வழக்கம் போல அராஜகத்தை ஆரம்பித்த சேலம் திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன்

தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்!

0

தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்!

தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள பொட்டிபுரம் அம்பரப்பர் மலைப்பகுதியில் சுமார் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. சுமார் 2 கிமீ தூரத்துக்குச் சுரங்கம் அமைத்து இந்த ஆய்வகம் அமைக்க இருந்தது.

ஆனால், இந்த ஆய்வு மையம் அமைவதன் மூலம் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படும் என தேனி சுற்றுவட்டாரப் பகுதியினரும் அரசியல் கட்சிகளும் சூழலியல் அமைப்புகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராடிவருகின்றன. நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பிலும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்தச் சூழலில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் விஜயகுமார், “தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு ஏதேனும் உத்தரவிட்டுள்ளதா? அவ்வாறு உத்தரவிட்டிருந்தால் அதுகுறித்த விரிவான தகவல் வேண்டும் என்று கேட்டிருந்தார். மேலும் நாட்டின் வேறு எந்தெந்த இடங்களில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமையவுள்ளது என்று கேட்டிருந்தார்.

Union Govt Will Implement Theni Neutrino Project-News4 Tamil Online Tamil News Channel Live News Today

இதற்கு மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில், “தமிழகத்தின் தேனி மாவட்டத்திலுள்ள பொட்டிபுரம் என்னும் இடத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க இந்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மலையில் 2 கிமீ நீளத்துக்குச் சுரங்கம் அமைத்து 51,000 டன் இரும்பு கலோரிமீட்டர் கருவி மூலமாக நியூட்ரினோவைக் கண்டறிவதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டம் அந்தப் பகுதியிலுள்ள சுற்றுப்புறச் சுழலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. கதிர்வீச்சுக்களை வெளிப்படுத்தாது. மேலும், எவ்வித கதிரியக்க பொருளும் இதில் பயன்படுத்தப்படவில்லை. அளவீடு செய்வதற்காக காஸ்மிக் கதிர்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன” என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்த அறிக்கையை மத்திய அணுசக்தி துறை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மீண்டும் போராட்டத்தை முன்னெடுக்கத் தயாராகிவிட்டன தமிழகச் சூழலியல் அமைப்புகள்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திடீரென்று நிதின் கட்கரியைச் சந்தித்த திமுக எம்.பி.க்கள்

0

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திடீரென்று நிதின் கட்கரியைச் சந்தித்த திமுக எம்.பி.க்கள்

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்பிக்கள் கூட்டாக இணைந்து மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்து சென்னை – சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்று மனு அளித்துள்ளனர். 

சென்னை – சேலம் இடையே 8 வழிச் சாலை அமைக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது மாநில அரசு அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் உதவி செய்து வருகிறது. இந்தத் திட்டத்துக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பாக பாமகவின் அன்புமணி ராமதாசு, தன் கட்சிக்காரர் ஒருவரின் நிலம் பாதிக்கபடுவதாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் மற்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பாக வழக்கு தொடரப்பட்டது.

இவ்வாறு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், விவசாய நிலங்களை கையகப்படுத்த தடை விதித்தது. நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் வந்த தீர்ப்பால், மத்திய, மாநில அரசுகள் அமைதியான, இது மக்களுக்கும் விவசாயிகளுக்கும் ஓரளவு நிம்மதியை அளித்தாலும்,இது ஒரு இடைக்கால நிம்மதி தான் மத்திய அரசு இதை மீண்டும் ஆரம்பிக்கும் என்ற அச்சமும் மக்கள் மத்தியில் தொடர்ந்து நிலவி வந்தது.

தேர்தலுக்கு முன்பு தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான திமுகவே இந்த விவகாரத்தில் அமைதியாக இருந்த நேரத்தில் வழக்கம் போல பாமக இந்த திட்டத்தில் தீவிர எதிர்ப்பை காட்டி வந்தது. குறிப்பாக அப்போது தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அன்புமணி ராமதாஸ் எட்டு வழி சாலையால் பாதிக்கப்படும் தனது தொகுதி மக்கள் மட்டுமல்லாமல் மற்ற மாவட்ட மக்களையும் சந்தித்து அவர்களது கருத்துக்களை கேட்டறிந்து வந்தார்.

இவ்வாறு சென்னை சேலம் இடையேயான எட்டு வழிச் சாலையை தீவிரமாக எதிர்த்து வந்த பாமக மக்களவை தேர்தலில் இந்த திட்டத்தை செயல்படுத்த துடிக்கும் பாஜக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது கடும் விமர்சனதிற்குள்ளானது. இதை தொடர்ந்து கூட்டணியில் இருந்தாலும் இந்த திட்டத்தை எதிர்த்து தீவிரமாக அழுத்தம் கொடுப்போம் என்றும், எட்டு வழிச் சாலையை எதிர்த்து தொடர்ந்து பாமக போராடும் என்றும் அன்புமணி ராமதாஸ் விளக்கமளித்தார். அதைப்போலவே நீதிமன்றமும் அன்புமணி ராமதாஸ் தொடங்கிய வழக்கில் அவருக்கு ஆதரவாக எட்டு வழிச் சாலை பணிக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

மக்களவை தேர்தலுக்கு பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கு விசாரணை நடந்தபோது, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க   நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில், சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து புதியதாக வெற்றி பெற்ற திமுக எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Dmk MPs met Road Transport & Highways Minister Nitin Gadkari-News4 Tamil Online Tamil News Channel

சென்னை சேலம் எட்டு வழிச் சாலை திட்டம் நிறைவேற உள்ள தொகுதிகளைச் சேர்ந்த திமுக எம்.பி.க்கள் அனைவரும் கூட்டாக இணைந்து அமைச்சரை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பில் எஸ்.ஆர்.பார்த்திபன் (சேலம்), கவுதம சிகாமணி (கள்ளக்குறிச்சி), செந்தில்குமார் (தருமபுரி), அண்ணாதுரை (திருவண்ணாமலை) ஆகிய எம்.பி.க்கள் கூட்டாக இணைந்து திடீரென்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். மேலும் இதுதொடர்பாக அமைச்சரிடம் கோரிக்கை மனுவையும் அளித்துள்ளனர்.

பொது மக்களையும், பாதிக்கப்படும் விவசாயிகளையும் சந்தித்து சமாதானப்படுத்தி இத்திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று அதிமுக அரசு கூறிவரும் நிலையில், திமுக எம்.பி.க்கள் இத்திட்டத்தை கைவிடக் கோரி மத்திய அமைச்சரை வலியுறுத்தியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dmk MPs met Road Transport & Highways Minister Nitin Gadkari

தமிழக அரசின் குரூப் 4 தேர்விற்கு பொறியியல் பட்டதாரிகள் தகுதியில்லையா? மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

0

தமிழக அரசின் குரூப் 4 தேர்விற்கு பொறியியல் பட்டதாரிகள் தகுதியில்லையா? மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழக அரசு அலுவலகங்களில் உள்ள காலி பணியிடங்களுக்காக டிஎன்பிஎஸ்சி சார்பாக அடிப்படை அரசுப்பணிகளுக்காக நடத்தப்படும் குரூப் 4 போன்ற தேர்விற்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கல்வித் தகுதியை தமிழக அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து சக்கரைசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில், 2009ம் ஆண்டு வருவாய்துறை உதவியாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானதன் அடிப்படையில் பொறியியல் பட்டதாரியான தாம், விண்ணப்பித்ததாக குறிப்பிட்டுள்ளார். அதற்காக நடைபெற்ற எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வில் தான் வெற்றி பெற்றதாகவும், பொறியியல் பட்டம் பெற்றிருப்பதால அது அந்த பணிக்கு கூடுதல் கல்வித்தகுதி என்றும் கூறி தம்மை நிராகரித்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அவர் தாக்கல் செய்திருந்த இந்த மனு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது.  அப்போது நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் பெருமளவில் உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி, பெரும்பாலான பட்டதாரிகள் குரூப் 4 உள்ளிட்ட அடிப்படை அரசுப்பணிகளுக்கு விண்ணப்பிப்பதாக கூறினார். 

அடிப்படை பணிகளில் சேர்பவர்கள் கூடுதல் கல்வித்தகுதி உடையவர்களாக இருப்பதால், அவர்களிடம் வேலை வாங்குவதில் அதிகாரிகளும் பெரும் சிரமத்தை சந்திப்பதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.அவ்வாறு தேர்வாகும் கூடுதல் கல்வித்தகுதி உடையோர், வேலை நேரம் உட்பட எப்போதும் அடுத்த உயர்பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதிலேயே முனைப்பு காட்டுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

மேலும் இவ்வாறு கூடுதல் கல்வி தகுதியுள்ளவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் பணிகளை முறையாகச் செய்வதில்லை எனவும் விமர்சித்தார்.எனவே, இந்த மனுவை நிராகரிப்பதாக குறிப்பிட்ட அவர், குரூப்-3, குரூப்-4 போன்ற அடிப்படை அரசுப் பணிகளுக்கான நபர்களை தேர்வு செய்ய குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கல்வித்தகுதியை தமிழக அரசு 12 வாரங்களில் நிர்ணயம் செய்ய வேண்டும் என நிர்வாகத்துறை முதன்மை செயலர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

செயற்கை இதயம் பொருத்தி 18 மாதங்கள் கழித்த பிறகு செயல்பட்ட அதிசயம்

0

செயற்கை இதயம் பொருத்தி 18 மாதங்கள் கழித்த பிறகு செயல்பட்ட அதிசயம்

ஈராக் நாட்டை சேர்ந்த வியாபாரி ஹனி ஜாவத் முகம்மது (வயது 52) என்பவர் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இதயம் பலவீனமடைந்து டெல்லியில் உள்ள ஒரு இதய சிகிச்சை மையத்துக்கு வந்தார்.

ஈராக் நாட்டை சேர்ந்த வியாபாரி ஹனி ஜாவத் முகம்மது (வயது 52) என்பவர் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இதயம் பலவீனமடைந்து டெல்லியில் உள்ள ஒரு இதய சிகிச்சை மையத்துக்கு வந்தார். அவரை பரிசோதித்த டாக்டர் அஜய் கவுல், இதயம் செயலிந்து வருவதால் மாற்று இதயம் பொருத்த வேண்டும் அல்லது செயற்கை இதயம் பொருத்த வேண்டும் என்றார். மாற்று இதயம் கிடைக்க தாமதமானதால் அவருக்கு செயற்கை இதயம் பொருத்தப்பட்டது.
அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவரை தொடர்ந்து பரிசோதனை செய்ததில் செயற்கை இதயம் செயல்பட்டு வந்தது. உண்மையான இதயம் செயலிழந்து ஓய்வில் இருந்தது. ஆனால் 3 மாதம் கழித்து இந்த முறை பரிசோதனைக்கு வந்தபோது, அதிசயிக்கத்தக்க வகையில் அவரது உண்மையான இதயம் இயல்பாக செயல்பட்டது. சந்தேகம் அடைந்து மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இதில் உண்மையான இதயம் நன்றாக செயல்பட்டு, செயற்கை இதயத்தின் செயல்பாட்டை குறைத்து இருந்தது தெரிந்தது.

வழக்கமாக இதுபோன்ற சமயங்களில் உண்மையான இதயம் 10 முதல் 15 சதவீதம் தான் குணமாகும். ஆனால் இவரது இதயம் மிக நன்றாக செயல்பட்டது. இதனை உறுதி செய்த பின்னர், அவரது செயற்கை இதயத்தை அறுவை சிகிச்சை இல்லாமல் புதிய தொழில்நுட்பத்தில் அகற்றிவிட்டோம். இப்போது அவரது இதயம் எந்த உதவியும் இல்லாமல் நன்றாக செயல்படுகிறது என்று டாக்டர் கவுல் தெரிவித்தார்.

‘‘இது எனக்கு மறுபிறப்பு’’ என்று ஹனி தெரிவித்தார்.

கும்பகோணம் மாவட்டமா.? எம்.எல்.ஏ வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல்

0

கும்பகோணம் மாவட்டமா.? எம்.எல்.ஏ வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல்

சில நாட்களாக சமூக வலைதளங்களில் கும்பகோணத்தை தலைமையிட மாக கொண்டு தனி வருவாய் மாவட்டம் அறிவிக்கப்பட இருப்பதாக சில தகவல்கள் பரவிவருகின்றது. மிகப்பெரிய வரலாற்று பின்னணியும்,பாரம்பரியமும் கொண்டுள்ள கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கிட்டத்தட்ட கால் நூற்றாண்டாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இருப்பது போலவே, கும்பகோணத்தில் தலைமை குற்றவியல் நீதிமன்றம், கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றம், தொழிலாளர் நல நீதிமன்றம் போன்றவை இருக்கிறது. கடந்த 1866 முதல் கும்பகோணம் சிறப்பு நகராட்சியாக செயல்பட்டு வருகிறது.

இதைப்போலவே, கும்பகோணத்தின் மத்திய கூட்டுறவு வங்கியானது, நாகை மாவட்டம் வரை தன்னுடைய சேவையை இன்றளவும் வழங்கி வருகிறது. மேலும், தமிழகத்தில் உள்ள 8 பேருந்து கோட்டங்களில் கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டமும் செயல்படுகிறது. மேலும், கும்பகோணத்தில் தான், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் காவிரி டெல்டா மாவட்டத்துக்கான தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

மேலும், மாவட்ட தலைமையகத்துக்கு தேவையான முக்கிய அம்சங்களான பதிவாளர் அலுவலகம், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் போன்றவையும் இருக்கின்றது. இந்நிலையில், கும்பகோணம் தனி வருவாய் மாவட்டம் நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் சில தகவல்கள் பரவி வருகின்றது.

இதன்காரணமாக கும்பகோணம் மக்களின் எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. ஆனால், இதுகுறித்து, அரசிடம் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை. கூட்டத்தொடரில் இதுபற்றி பேசப்போவதுமில்லை என்கின்றார் கும்பகோணம் எம்எல்ஏ க.அன்பழகன்.

மத்திய மாநில அரசுத்துறைகளில் காலி பணியிடங்களை நிரப்பாமல் சமூகநீதிக்கு பெருந்துரோகம் இழைப்பதாக மருத்துவர் ராமதாஸ் குற்றச்சாட்டு

0

மத்திய மாநில அரசுத்துறைகளில் காலி பணியிடங்களை நிரப்பாமல் சமூகநீதிக்கு பெருந்துரோகம் இழைப்பதாக மருத்துவர் ராமதாஸ் குற்றச்சாட்டு

மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் கடந்த 2 ஆண்டுகளில் 65% காலி பணியிடங்கள் அதிகரிதுள்ளதால் உடனடியாக மத்திய
அரசு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

மத்திய அரசுத் துறைகள் மற்றும் அமைச்சகங்களில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை கடந்த இரு ஆண்டுகளில் 65% அளவுக்கு அதிகரித்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியளிக்கிறது. தொடர்வண்டித்துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் ஏற்பட்ட காலியிடங்களும் இதுவரை முழுமையாக நிரப்பப்படாதது வேலையில்லாத இளைஞர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்திய நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் செலவினங்கள் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் தான் இந்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன. மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 2016-ஆம் ஆண்டு மார்ச் நிலவரப்படி 4 லட்சத்து 12,752 ஆக இருந்தது. 2018 மார்ச் நிலவரப்படி இது 6 லட்சத்து 83,823 ஆக அதிகரித்திருக்கிறது. அதாவது மத்திய அரசு துறைகளில் காலி பணியிடங்களின் எண்ணிக்கை 2 ஆண்டுகளில் 2 லட்சத்து 71,071 (65%) அதிகரித்திருக்கிறது. மத்திய அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 38 லட்சத்து 2,779 ஆகும். இது கடந்த ஆண்டு மார்ச் நிலவரப்படி 31 லட்சத்து 18,956 ஆக குறைந்து விட்டது. மத்திய அரசுத் துறைகளில் 18 விழுக்காட்டுக்கும் கூடுதலான பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பது இந்திய வரலாற்றில் இதுவே முதல்முறை.

உலகின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் என்ற பெருமைக்குரிய தொடர்வண்டித்துறையில் மட்டும் 2 லட்சத்து 59,369 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த புள்ளி விவரங்கள் கடந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படியானது தான் என்றாலும் கூட, அதற்கு பிறகும் காலியிடங்கள் குறிப்பிடத்தக்க அளவில் நிரப்பப்படவில்லை என்பது தான் உண்மை. நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய இராணுவம், துணை இராணுவப் படைகள் ஆகியவற்றிலும் 2 லட்சத்திற்கும் அதிகமான பணிகள் காலியாக உள்ளன.

உலக அளவில் மக்கள்தொகை அதிகமுள்ள நாடுகளில் ஒன்று என்பதைப் போலவே வேலைவாய்ப்புத் திண்டாட்டம் அதிகமுள்ள நாடுகளில் ஒன்று என்ற அவப்பெயரையும் இந்தியா பெற்றிருக்கிறது. இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.1% என்ற உச்சத்தை தொட்டிருக்கிறது. அரசு, பொதுத்துறை, தனியார் துறை என அமைப்பு சார்ந்த அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து விட்ட நிலையில் அதை அதிகரிக்கவும், அதன் மூலம் இளைய தலைமுறையினரிடம் நம்பிக்கையை விதைக்கவும் வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.

ஆனால், மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலேயே கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் கூடுதலான பணியிடங்களை காலியாக வைத்திருப்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத ஒன்றாகும். மத்திய அரசுப் பணியிடங்கள் இந்த அளவுக்கு காலியாக இருக்கும் நிலையில், தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுத் துறைகளில் 20 லட்சத்திற்கும் கூடுதலான பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. வேலையில்லாத் திண்டாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஒருபுறமிருக்க, அரசுத்துறைகளில் காலியாக உள்ள இடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டியது அவசியமாகும்.

மத்திய, மாநில அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நீண்டகாலமாக நிரப்பாமல் கிடப்பில் போட்டு வைத்திருப்பதன் மூலம் சமூகநீதிக்கும் பெருந்துரோகம் இழைக்கப்படுகிறது. நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருக்கும் இடங்களில், ஏதேனும் ஒரு கட்டத்தில் சில இடங்கள் மட்டும் நிரப்பப்படும் போது அதில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை. இதன்மூலம் சமூகநீதி சாகடிக்கப்படுகிறது.

மத்தியில் இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசு, நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு முடிவு கட்டுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப் போவதாக அறிவித்து உள்ளது. அதுமட்டுமின்றி, வேலைவாய்ப்புக்காக அமைச்சரவைக் குழு ஒன்றையும் அமைத்துள்ளது. இவை வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஆகும். ஆனால், இவை மட்டுமே வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவதற்கு போதுமானவை அல்ல. வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வது மட்டுமே இளைஞர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும்.

எனவே, மத்திய அரசிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் காலியாக உள்ள இடங்கள் அனைத்தும் சிறப்பு ஆள்தேர்வு இயக்கத்தின் மூலம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும். அமைப்பு சார்ந்த தனியார்துறை வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சேலம் உருக்காலையை தனியார்மயமாக்குவதற்கு திமுக எம்பி. டி.ஆர்.பாலு எதிர்ப்பு

0

சேலம் உருக்காலையை தனியார்மயமாக்குவதற்கு திமுக எம்பி. டி.ஆர்.பாலு எதிர்ப்பு

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலையை தனியார்மயமாக்குவதற்கு சேலம் மாவட்ட விவசாயிகள் அனுமதிக்க மாட்டார்கள் என்று மக்களவையில் திமுக குழுத் தலைவரான  டி.ஆர். பாலு கூறியுள்ளார்.

மக்களவையில் நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்ற 2019-2020-ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மீதான விவாதத்தில் இது குறித்து அவர் பேசியதாவது:

சேலம் உருக்காலை பிரச்சனை தொழிலாளர்களால் ஏற்படவில்லை. அதன் நிர்வாகத்தால் ஏற்பட்டது. தற்போது, அரசு அளித்த வாக்குறுதியின்படி சூரிய சக்தி மின்நிலையம் கொண்டுவரப்படவில்லை. அப்படி கொண்டு வந்திருந்தால் செலவில் ரூ.30 கோடி குறைந்திருக்கும். ஆலை அமைக்க 4 ஆயிரம் விவசாயிகள் தங்களது நிலத்தைக் கொடுத்துள்ளனர். இதனால், அந்த ஆலையை மூன்றாவது நபருக்கோ, தனியாருக்கோ தாரைவார்க்க விவசாயிகள் அனுமதிக்கமாட்டார்கள். 

இந்திய ரயில்வே நிர்வாகம் சேலம் உருக்காலையில் இருந்து ஆண்டுக்கு 5,575 டன் ஸ்டீலை வாங்கிக் கொண்டிருந்தது. ஆனால், தற்போது இந்த ஆண்டு 121 டன் மட்டுமே வாங்கியுள்ளது. இது இந்த ஆலை குறித்த அக்கறை ஏதும் இந்த அரசுக்கு இல்லை என்பதைத்தான் காட்டுகிறது.

இதே நிலைதான் சேது சமுத்திர திட்ட விவகாரத்திலும் இருந்தது. இத்திட்டம் வாஜ்பாய் திட்டம் என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் கனவுத் திட்டத்தை 150 ஆண்டுகளுக்குப் பிறகு நனவாக்கும் வகையில் வாஜ்பாய் கொண்டு வந்தார். இத்திட்டம் குறித்து பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை. வாஜ்பாயை மறந்துவிட்டீர்களா? இது பாஜகவின் திட்டம். நான் செயல்படுத்த ஆரம்பித்தேன் அவ்வளவுதான். ஆனால், அதைப் பாழாக்கிவிட்டனர். இத்திட்டத்தை மீண்டும் எடுத்து உரிய நிதியை ஒதுக்க வேண்டும். இது அரசின் கொள்கை விவகாரமாகும்.

இதுமட்டுமில்லாமல் மேலும், கத்திப்பாரா -பூந்தமல்லி, விமான நிலையம் – வண்டலூர், திருமங்கலம் – அம்பத்தூர் ஆகிய மெட்ரோ ரயில் வழித்தடங்களை நீட்டிக்க வேண்டும். ஸ்ரீபெரும்புதூரில் பசுமை விமான நிலையம் அமைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த டி.ஆர். பாலு செயல்படுத்த நினைத்த சேது சமுத்திர திட்டத்தை பற்றியெல்லாம் பேசியிருப்பது கவனிக்கத்தக்கது. திமுக எம்.பியான இவருக்கு பாஜக தலைமையிலான அரசு முக்கியத்துவம் கொடுக்குமா என்பது கேள்வியே?