Thursday, September 19, 2024
Home Blog Page 4966

தமிழக அரசின் குரூப் 4 தேர்விற்கு பொறியியல் பட்டதாரிகள் தகுதியில்லையா? மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

0

தமிழக அரசின் குரூப் 4 தேர்விற்கு பொறியியல் பட்டதாரிகள் தகுதியில்லையா? மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழக அரசு அலுவலகங்களில் உள்ள காலி பணியிடங்களுக்காக டிஎன்பிஎஸ்சி சார்பாக அடிப்படை அரசுப்பணிகளுக்காக நடத்தப்படும் குரூப் 4 போன்ற தேர்விற்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கல்வித் தகுதியை தமிழக அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து சக்கரைசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில், 2009ம் ஆண்டு வருவாய்துறை உதவியாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானதன் அடிப்படையில் பொறியியல் பட்டதாரியான தாம், விண்ணப்பித்ததாக குறிப்பிட்டுள்ளார். அதற்காக நடைபெற்ற எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வில் தான் வெற்றி பெற்றதாகவும், பொறியியல் பட்டம் பெற்றிருப்பதால அது அந்த பணிக்கு கூடுதல் கல்வித்தகுதி என்றும் கூறி தம்மை நிராகரித்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அவர் தாக்கல் செய்திருந்த இந்த மனு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது.  அப்போது நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் பெருமளவில் உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி, பெரும்பாலான பட்டதாரிகள் குரூப் 4 உள்ளிட்ட அடிப்படை அரசுப்பணிகளுக்கு விண்ணப்பிப்பதாக கூறினார். 

அடிப்படை பணிகளில் சேர்பவர்கள் கூடுதல் கல்வித்தகுதி உடையவர்களாக இருப்பதால், அவர்களிடம் வேலை வாங்குவதில் அதிகாரிகளும் பெரும் சிரமத்தை சந்திப்பதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.அவ்வாறு தேர்வாகும் கூடுதல் கல்வித்தகுதி உடையோர், வேலை நேரம் உட்பட எப்போதும் அடுத்த உயர்பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதிலேயே முனைப்பு காட்டுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

மேலும் இவ்வாறு கூடுதல் கல்வி தகுதியுள்ளவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் பணிகளை முறையாகச் செய்வதில்லை எனவும் விமர்சித்தார்.எனவே, இந்த மனுவை நிராகரிப்பதாக குறிப்பிட்ட அவர், குரூப்-3, குரூப்-4 போன்ற அடிப்படை அரசுப் பணிகளுக்கான நபர்களை தேர்வு செய்ய குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கல்வித்தகுதியை தமிழக அரசு 12 வாரங்களில் நிர்ணயம் செய்ய வேண்டும் என நிர்வாகத்துறை முதன்மை செயலர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

செயற்கை இதயம் பொருத்தி 18 மாதங்கள் கழித்த பிறகு செயல்பட்ட அதிசயம்

0

செயற்கை இதயம் பொருத்தி 18 மாதங்கள் கழித்த பிறகு செயல்பட்ட அதிசயம்

ஈராக் நாட்டை சேர்ந்த வியாபாரி ஹனி ஜாவத் முகம்மது (வயது 52) என்பவர் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இதயம் பலவீனமடைந்து டெல்லியில் உள்ள ஒரு இதய சிகிச்சை மையத்துக்கு வந்தார்.

ஈராக் நாட்டை சேர்ந்த வியாபாரி ஹனி ஜாவத் முகம்மது (வயது 52) என்பவர் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இதயம் பலவீனமடைந்து டெல்லியில் உள்ள ஒரு இதய சிகிச்சை மையத்துக்கு வந்தார். அவரை பரிசோதித்த டாக்டர் அஜய் கவுல், இதயம் செயலிந்து வருவதால் மாற்று இதயம் பொருத்த வேண்டும் அல்லது செயற்கை இதயம் பொருத்த வேண்டும் என்றார். மாற்று இதயம் கிடைக்க தாமதமானதால் அவருக்கு செயற்கை இதயம் பொருத்தப்பட்டது.
அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவரை தொடர்ந்து பரிசோதனை செய்ததில் செயற்கை இதயம் செயல்பட்டு வந்தது. உண்மையான இதயம் செயலிழந்து ஓய்வில் இருந்தது. ஆனால் 3 மாதம் கழித்து இந்த முறை பரிசோதனைக்கு வந்தபோது, அதிசயிக்கத்தக்க வகையில் அவரது உண்மையான இதயம் இயல்பாக செயல்பட்டது. சந்தேகம் அடைந்து மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இதில் உண்மையான இதயம் நன்றாக செயல்பட்டு, செயற்கை இதயத்தின் செயல்பாட்டை குறைத்து இருந்தது தெரிந்தது.

வழக்கமாக இதுபோன்ற சமயங்களில் உண்மையான இதயம் 10 முதல் 15 சதவீதம் தான் குணமாகும். ஆனால் இவரது இதயம் மிக நன்றாக செயல்பட்டது. இதனை உறுதி செய்த பின்னர், அவரது செயற்கை இதயத்தை அறுவை சிகிச்சை இல்லாமல் புதிய தொழில்நுட்பத்தில் அகற்றிவிட்டோம். இப்போது அவரது இதயம் எந்த உதவியும் இல்லாமல் நன்றாக செயல்படுகிறது என்று டாக்டர் கவுல் தெரிவித்தார்.

‘‘இது எனக்கு மறுபிறப்பு’’ என்று ஹனி தெரிவித்தார்.

கும்பகோணம் மாவட்டமா.? எம்.எல்.ஏ வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல்

0

கும்பகோணம் மாவட்டமா.? எம்.எல்.ஏ வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல்

சில நாட்களாக சமூக வலைதளங்களில் கும்பகோணத்தை தலைமையிட மாக கொண்டு தனி வருவாய் மாவட்டம் அறிவிக்கப்பட இருப்பதாக சில தகவல்கள் பரவிவருகின்றது. மிகப்பெரிய வரலாற்று பின்னணியும்,பாரம்பரியமும் கொண்டுள்ள கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கிட்டத்தட்ட கால் நூற்றாண்டாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இருப்பது போலவே, கும்பகோணத்தில் தலைமை குற்றவியல் நீதிமன்றம், கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றம், தொழிலாளர் நல நீதிமன்றம் போன்றவை இருக்கிறது. கடந்த 1866 முதல் கும்பகோணம் சிறப்பு நகராட்சியாக செயல்பட்டு வருகிறது.

இதைப்போலவே, கும்பகோணத்தின் மத்திய கூட்டுறவு வங்கியானது, நாகை மாவட்டம் வரை தன்னுடைய சேவையை இன்றளவும் வழங்கி வருகிறது. மேலும், தமிழகத்தில் உள்ள 8 பேருந்து கோட்டங்களில் கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டமும் செயல்படுகிறது. மேலும், கும்பகோணத்தில் தான், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் காவிரி டெல்டா மாவட்டத்துக்கான தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

மேலும், மாவட்ட தலைமையகத்துக்கு தேவையான முக்கிய அம்சங்களான பதிவாளர் அலுவலகம், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் போன்றவையும் இருக்கின்றது. இந்நிலையில், கும்பகோணம் தனி வருவாய் மாவட்டம் நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் சில தகவல்கள் பரவி வருகின்றது.

இதன்காரணமாக கும்பகோணம் மக்களின் எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. ஆனால், இதுகுறித்து, அரசிடம் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை. கூட்டத்தொடரில் இதுபற்றி பேசப்போவதுமில்லை என்கின்றார் கும்பகோணம் எம்எல்ஏ க.அன்பழகன்.

மத்திய மாநில அரசுத்துறைகளில் காலி பணியிடங்களை நிரப்பாமல் சமூகநீதிக்கு பெருந்துரோகம் இழைப்பதாக மருத்துவர் ராமதாஸ் குற்றச்சாட்டு

0

மத்திய மாநில அரசுத்துறைகளில் காலி பணியிடங்களை நிரப்பாமல் சமூகநீதிக்கு பெருந்துரோகம் இழைப்பதாக மருத்துவர் ராமதாஸ் குற்றச்சாட்டு

மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் கடந்த 2 ஆண்டுகளில் 65% காலி பணியிடங்கள் அதிகரிதுள்ளதால் உடனடியாக மத்திய
அரசு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

மத்திய அரசுத் துறைகள் மற்றும் அமைச்சகங்களில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை கடந்த இரு ஆண்டுகளில் 65% அளவுக்கு அதிகரித்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியளிக்கிறது. தொடர்வண்டித்துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் ஏற்பட்ட காலியிடங்களும் இதுவரை முழுமையாக நிரப்பப்படாதது வேலையில்லாத இளைஞர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்திய நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் செலவினங்கள் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் தான் இந்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன. மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 2016-ஆம் ஆண்டு மார்ச் நிலவரப்படி 4 லட்சத்து 12,752 ஆக இருந்தது. 2018 மார்ச் நிலவரப்படி இது 6 லட்சத்து 83,823 ஆக அதிகரித்திருக்கிறது. அதாவது மத்திய அரசு துறைகளில் காலி பணியிடங்களின் எண்ணிக்கை 2 ஆண்டுகளில் 2 லட்சத்து 71,071 (65%) அதிகரித்திருக்கிறது. மத்திய அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 38 லட்சத்து 2,779 ஆகும். இது கடந்த ஆண்டு மார்ச் நிலவரப்படி 31 லட்சத்து 18,956 ஆக குறைந்து விட்டது. மத்திய அரசுத் துறைகளில் 18 விழுக்காட்டுக்கும் கூடுதலான பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பது இந்திய வரலாற்றில் இதுவே முதல்முறை.

உலகின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் என்ற பெருமைக்குரிய தொடர்வண்டித்துறையில் மட்டும் 2 லட்சத்து 59,369 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த புள்ளி விவரங்கள் கடந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படியானது தான் என்றாலும் கூட, அதற்கு பிறகும் காலியிடங்கள் குறிப்பிடத்தக்க அளவில் நிரப்பப்படவில்லை என்பது தான் உண்மை. நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய இராணுவம், துணை இராணுவப் படைகள் ஆகியவற்றிலும் 2 லட்சத்திற்கும் அதிகமான பணிகள் காலியாக உள்ளன.

உலக அளவில் மக்கள்தொகை அதிகமுள்ள நாடுகளில் ஒன்று என்பதைப் போலவே வேலைவாய்ப்புத் திண்டாட்டம் அதிகமுள்ள நாடுகளில் ஒன்று என்ற அவப்பெயரையும் இந்தியா பெற்றிருக்கிறது. இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.1% என்ற உச்சத்தை தொட்டிருக்கிறது. அரசு, பொதுத்துறை, தனியார் துறை என அமைப்பு சார்ந்த அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து விட்ட நிலையில் அதை அதிகரிக்கவும், அதன் மூலம் இளைய தலைமுறையினரிடம் நம்பிக்கையை விதைக்கவும் வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.

ஆனால், மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலேயே கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் கூடுதலான பணியிடங்களை காலியாக வைத்திருப்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத ஒன்றாகும். மத்திய அரசுப் பணியிடங்கள் இந்த அளவுக்கு காலியாக இருக்கும் நிலையில், தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுத் துறைகளில் 20 லட்சத்திற்கும் கூடுதலான பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. வேலையில்லாத் திண்டாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஒருபுறமிருக்க, அரசுத்துறைகளில் காலியாக உள்ள இடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டியது அவசியமாகும்.

மத்திய, மாநில அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நீண்டகாலமாக நிரப்பாமல் கிடப்பில் போட்டு வைத்திருப்பதன் மூலம் சமூகநீதிக்கும் பெருந்துரோகம் இழைக்கப்படுகிறது. நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருக்கும் இடங்களில், ஏதேனும் ஒரு கட்டத்தில் சில இடங்கள் மட்டும் நிரப்பப்படும் போது அதில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை. இதன்மூலம் சமூகநீதி சாகடிக்கப்படுகிறது.

மத்தியில் இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசு, நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு முடிவு கட்டுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப் போவதாக அறிவித்து உள்ளது. அதுமட்டுமின்றி, வேலைவாய்ப்புக்காக அமைச்சரவைக் குழு ஒன்றையும் அமைத்துள்ளது. இவை வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஆகும். ஆனால், இவை மட்டுமே வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவதற்கு போதுமானவை அல்ல. வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வது மட்டுமே இளைஞர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும்.

எனவே, மத்திய அரசிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் காலியாக உள்ள இடங்கள் அனைத்தும் சிறப்பு ஆள்தேர்வு இயக்கத்தின் மூலம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும். அமைப்பு சார்ந்த தனியார்துறை வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சேலம் உருக்காலையை தனியார்மயமாக்குவதற்கு திமுக எம்பி. டி.ஆர்.பாலு எதிர்ப்பு

0

சேலம் உருக்காலையை தனியார்மயமாக்குவதற்கு திமுக எம்பி. டி.ஆர்.பாலு எதிர்ப்பு

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலையை தனியார்மயமாக்குவதற்கு சேலம் மாவட்ட விவசாயிகள் அனுமதிக்க மாட்டார்கள் என்று மக்களவையில் திமுக குழுத் தலைவரான  டி.ஆர். பாலு கூறியுள்ளார்.

மக்களவையில் நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்ற 2019-2020-ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மீதான விவாதத்தில் இது குறித்து அவர் பேசியதாவது:

சேலம் உருக்காலை பிரச்சனை தொழிலாளர்களால் ஏற்படவில்லை. அதன் நிர்வாகத்தால் ஏற்பட்டது. தற்போது, அரசு அளித்த வாக்குறுதியின்படி சூரிய சக்தி மின்நிலையம் கொண்டுவரப்படவில்லை. அப்படி கொண்டு வந்திருந்தால் செலவில் ரூ.30 கோடி குறைந்திருக்கும். ஆலை அமைக்க 4 ஆயிரம் விவசாயிகள் தங்களது நிலத்தைக் கொடுத்துள்ளனர். இதனால், அந்த ஆலையை மூன்றாவது நபருக்கோ, தனியாருக்கோ தாரைவார்க்க விவசாயிகள் அனுமதிக்கமாட்டார்கள். 

இந்திய ரயில்வே நிர்வாகம் சேலம் உருக்காலையில் இருந்து ஆண்டுக்கு 5,575 டன் ஸ்டீலை வாங்கிக் கொண்டிருந்தது. ஆனால், தற்போது இந்த ஆண்டு 121 டன் மட்டுமே வாங்கியுள்ளது. இது இந்த ஆலை குறித்த அக்கறை ஏதும் இந்த அரசுக்கு இல்லை என்பதைத்தான் காட்டுகிறது.

இதே நிலைதான் சேது சமுத்திர திட்ட விவகாரத்திலும் இருந்தது. இத்திட்டம் வாஜ்பாய் திட்டம் என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் கனவுத் திட்டத்தை 150 ஆண்டுகளுக்குப் பிறகு நனவாக்கும் வகையில் வாஜ்பாய் கொண்டு வந்தார். இத்திட்டம் குறித்து பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை. வாஜ்பாயை மறந்துவிட்டீர்களா? இது பாஜகவின் திட்டம். நான் செயல்படுத்த ஆரம்பித்தேன் அவ்வளவுதான். ஆனால், அதைப் பாழாக்கிவிட்டனர். இத்திட்டத்தை மீண்டும் எடுத்து உரிய நிதியை ஒதுக்க வேண்டும். இது அரசின் கொள்கை விவகாரமாகும்.

இதுமட்டுமில்லாமல் மேலும், கத்திப்பாரா -பூந்தமல்லி, விமான நிலையம் – வண்டலூர், திருமங்கலம் – அம்பத்தூர் ஆகிய மெட்ரோ ரயில் வழித்தடங்களை நீட்டிக்க வேண்டும். ஸ்ரீபெரும்புதூரில் பசுமை விமான நிலையம் அமைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த டி.ஆர். பாலு செயல்படுத்த நினைத்த சேது சமுத்திர திட்டத்தை பற்றியெல்லாம் பேசியிருப்பது கவனிக்கத்தக்கது. திமுக எம்.பியான இவருக்கு பாஜக தலைமையிலான அரசு முக்கியத்துவம் கொடுக்குமா என்பது கேள்வியே?

உலக கோப்பை போட்டிக்கு பிறகு தோனி தீவிர அரசியலில் ஈடுபட போகிறாரா?

0

உலக கோப்பை போட்டிக்கு பிறகு தோனி தீவிர அரசியலில் ஈடுபட போகிறாரா?

இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் முடிந்த பிறகு தோனி, தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது. முடிந்த ஜூலை 7 ஆம் தேதியுடன் தோனிக்கு 38 வயது நிறைவடைகிறது. இதுவே அவர் ஓய்வுபெறுவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. வயது ஒரு காரணமாக இருந்தாலும் அரசியல் ஈடுபாடு இருப்பதாலும் தான் ஓய்வு பெறுகிறார் என்றும் கூறப்படுகிறது.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் தோனி. தனது திறமையாலும் கிரிக்கெட்டில் காட்டிய அதிரடியாலும் நாட்டு மக்களிடையே குறிப்பாக இளைஞர்கள் இடையே மிகவும் பிரபலமானவர். ஏற்கனவே இளைஞர்களிடம் அதிக செல்வாக்குடன் இருக்கும் பாஜகவுக்கு தோனியும் இணைந்தால் மேலும் செல்வாக்கு அதிகரிக்கும் என்று அக்கட்சியினரால் எதிர்பார்க்கப்படுகிறது.

MS Dhoni Political Entry-News4 Tamil Online Tamil News Channel Tamil News Today Sports News Today

நடந்து முடிந்த கடந்த லோக்சபா தேர்தலில் ஜார்க்கண்டில் உள்ள 14 தொகுதிகளில் 11 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் இனி வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் அக்கட்சி வெற்றி பெறுவது கடினமாக இருக்கும் என பாஜக தரப்பு நினைக்கிறது. இதற்கு காரணம் ஆளும் பாஜக அரசு மீது அதிருப்தியும் பழங்குடியினர் மத்தியில் வெறுப்பும் காணப்படுகிறது என்று கூறுகிறார்கள். தேர்தலுக்கு முன்பு இதையெல்லாம் பாஜக தரப்பு சரி செய்ய வேண்டியுள்ளது.

அரசியலில் நுழைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர்

இந்நிலையில் ஏற்கனவே பாஜகவில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான கவுதம் காம்பீர், கிழக்கு டில்லியில் போட்டியிட்டு எம்.பி.யாகி விட்டார். அவரை போலவே தோனியையும் கட்சிக்குள் கொண்டு வரும் வேலைகளை பாஜக தரப்பு செய்ய துவங்கி விட்டது என்று கூறுகிறார்கள். டில்லி பாஜக எம்.பி.யான மனோஜ் திவாரி, தோனிக்கு நெருக்கமானவர் என்றும் தோனி அரசியலுக்கு வர அவரது மனதை இவரும் மாற்றி வருவதாக கூறப்படுகிறது.

இதையும் பாருங்கள்: அமித்ஷா போட்ட பக்கா பிளான்.! முக்கிய கட்சியின் கூடாரத்தை காலி செய்ய வியூகம்.!

கடந்த தேர்தல் பிரசாரத்தின் போது கூட, அமித்ஷா தோனியை ஒரு முறை சந்தித்து பேசினார். அப்போது இருந்தே தோனி பாஜகவில் இணைவார் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் அடிபட துவங்கியது. ஏற்கனவே இது குறித்து பேச்சுவார்த்தை நடத்திய பாஜகவின் மூத்த நிர்வாகிகளிடம் பேசிய தோனி நடைபெற்று வரும் உலகக் கோப்பை முடியும் வரை காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டதாக ஒரு செய்தி கசிந்து வருகிறது.

MS Dhoni Political Entry-News4 Tamil Online Tamil News Channel Tamil News Today Sports News Today

ஜார்க்கண்டில் தோனிக்கு வழங்கப்படும் பணி

நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முடிவடைந்த பிறகு தோனி கட்சியில் சேரும் நிலையில் அவருக்கு ஜார்க்கண்டில் என்ன மாதிரியான வேலைகளை கொடுக்கலாம் என்றும் பாஜக தலைமை ஆலோசித்து வருவதாக கூறபடுகிறது. அம்மாநிலத்தில் மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் குறைந்தது 65 தொகுதிகளிலாவது ஜெயிக்க வேண்டும் என்று பாஜக தரப்பு விரும்புகிறது. இதில் ஒரு முக்கிய திட்டம் தான் தோனியை கட்சியில் சேர்ப்பதும் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

அமித்ஷா போட்ட பக்கா பிளான்.! முக்கிய கட்சியின் கூடாரத்தை காலி செய்ய வியூகம்.!

0

அமித்ஷா போட்ட பக்கா பிளான்.! முக்கிய கட்சியின் கூடாரத்தை காலி செய்ய வியூகம்.!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கானாவில் பாஜக வலிமை பெற பாஜக தலைவர் அமித்ஷா தெலுங்கானாவிற்கு அடிக்கடி வருவார் என தெலுங்கானா பாஜக தலைவர் லக்ஷ்மணனன் தெரிவித்துள்ளார்.

மிஷன் 2023 திட்டத்தின் ஒரு பகுதியாக, சட்டமன்ற தேர்தலில் பாஜக தெலுங்கானாவில் 50 சதவீதம் வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை பிடிக்கும் படி தெலுங்கானா பாஜக நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய லட்சுமண், “ஜூலை ஏழாம் தேதி நடந்த பாஜக கூட்டத்தில், தெலங்கானாவில் கவனம் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை, அறிவுறுத்தல்களை அமித்ஷா வழங்கியுள்ளார்.

மக்களவை தேர்தலில் 70 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சட்டமன்ற தேர்தல் வருவதற்கு மாநிலத்தின் மூலை முடுக்குகளை பாஜக சென்று அடைய எங்களுக்கு தேவையான அவகாசம் இருக்கின்றது. தெலுங்கானாவில் ராஷ்ட்ரிய சமிதி கட்சி மத்திய அரசின் நலத் திட்டங்களை சரியாக அமல்படுத்தவில்லை.

தெலுங்கானாவில் பிரதமர் மோடி பலம் அடைந்து விடுவார் என மாநில அரசு பயந்துபோய் இருக்கின்றது. ஒவ்வொரு மாதமும் அமித்ஷா தெலுங்கானாவிற்கு வருகை புரிவேன் என உறுதி கூறியுள்ளார். மத்திய அரசின் நலத்திட்டங்களை மாநில அரசு அமல்படுத்தியதா என கண்காணிக்க செய்யவும், கிராமங்களில் பாஜகவை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.” என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக தெலுங்கானாவில் ஒரு தொகுதி மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால், மக்களவைத் தேர்தலில் நான்கு தொகுதிகளை பாஜக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த முன்னேற்றத்தை கருத்தில் கொண்டே பாஜக அடுத்ததாக தெலுங்கானாவை குறி வைத்துள்ளார் என தெரிகிறது.

நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில், அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவர், “பாஜகவின் வாக்கு விகிதமானது, 6 மாதங்களில் 41 விழுக்காடாக உயர்ந்துள்ளது. தெலங்கானாவில் பாஜகவின் ஒட்டு மொத்த வாக்கு விகிதம் 7.5 லிருந்து 22 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தெலுங்கானாவில் 13 லட்சம் உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக முரளிதரராவ் கூறியுள்ளார். ஆனால் நான் 18 லட்சம் முதல் 20 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என அவரிடம் கூறியுள்ளேன். தெலுங்கானா பாஜக கஞ்சத்தனமாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. உங்களால் உறுப்பினர்களை சேர்க்க முடியவில்லை என்றால், என்னை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள் நான் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதல் உறுப்பினர்களைக் பெற்று தர வழிவகை செய்கிறேன்.

பாஜக வலுவிழந்து இருக்கும் இடங்களில் மட்டும் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவில் 1600 அரசியல் கட்சி இருக்கின்றது. ஆனால், பாஜகவின் உறுதியை எந்த கட்சியாலும் வலுவிழக்கச் செய்ய முடியாது. நமது கட்சியை கண்டு ஒரு காலத்தில் கிண்டல் செய்தவர்கள்தான் சரத்பவார், அகிலேஷ் யாதவ் போன்ற தலைவர்கள். தற்பொழுது நமது உறுப்பினர் சேர்க்கை முகாம்களை கவனம் செலுத்திய கண்காணித்து வருகின்றனர். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.” என அவர் பேசியுள்ளார்.

73 ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்ட பழமையான சிவாலயத்திற்கு குடமுழுக்கு விழா

0

73 ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்ட பழமையான சிவாலயத்திற்கு குடமுழுக்கு விழா

அரியலூர் மாவட்டம்,தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள செளந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் ஆலயம் 73 ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்டு இன்று குடமுழுக்கு விழா சிறப்பாக நடைப்பெற்றது.

இந்த குடமுழுக்கு விழாவில் சுற்றுவட்ட மாவட்டத்திலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.

இராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீசுவரர் கோவிலை போன்றே வரலாற்று சிறப்பு மிக்க பல்வேறு சிவாலயங்கள் உள்ளது.

திருஞானசம்பந்தர்,அப்பர்,சுந்தரர் ஆகிய மூவர் தேவாரம் பெற்ற கீழப்பழூவூர் ஆலந்துறையார், திருமழைபாடி வைத்தியநாத சுவாமி, கோவிந்தபுத்தூகங்காராஜடேஸ்வரர், அண்மையில் அமெரிக்க நாட்டில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட திருபுரந்தான் நடராஜர் சிலை என சிறப்பு மிக்க கோவில்களின் வரிசையில் உள்ள கோவில் தான் காரைக்குறிச்சி செளந்தர நாயகி அம்பாள் சமேத பசுபதீசுவரர் ஆலயம்.

கோவிலின் சிறப்புகள் அம்சங்கள்

  1. ஆண்டுதோறும் சித்திரை மற்றும் ஆவணி மாதங்களில் சூரிய பகவான் தனது கதிர்களால் சிவபெருமானை வழிபடுதல்.
  2. திருவிசை நல்லூர்க்கு பிறகு சௌந்தரநாயகி அம்பாள் மற்றும் லஷ்மி நாராயணன் ஒரே இடத்தில் நமக்கு காட்சித் தருகிறார்கள்..
  3. லட்சுமி நாராயணன் உடன் கருட ஆழ்வார் நம்மாழ்வார் சேர்ந்து காட்சி அளிப்பதும் சிறப்பு வாய்ந்தாகவும் கருதப்படுகிறது.
  4. துர்க்கை அம்மன் அஷ்டபுஜ துர்க்கையாக எட்டு கரங்களுடன் காட்சி மற்றும் நவகிரகங்களில் ஒன்றான சனி பகவான் சற்று தனித்து நமக்கு காட்சி தருவதும் இந்த கோவிலின் சிறப்பம்சம்.

அன்புமணி ராமதாசால் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தொடங்குவதற்கு முன்பே மூடப்படும் அவலநிலை

0

அன்புமணி ராமதாசால் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தொடங்குவதற்கு முன்பே மூடப்படும் அவலநிலை

மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதார துறை அமைச்சராக பதவி வகித்த பொது கொண்டு வரப்பட்ட செங்கல்பட்டு தடுப்பூசி பூங்காவை மூடுவதா? என்றும் இதை அரசே நடத்த வேண்டும் என்றும் பாமக நிறுவனர் கண்டித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.


இந்தியாவின் தடுப்பூசிகள் தேவையை பூர்த்தி செய்வதற்காக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் முயற்சியால் செங்கல்பட்டில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி பூங்காவை மூட முயற்சிகள் நடப்பதாக வெளிவரும் செய்திகள் கடும் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கின்றன. தடுப்பூசி வளாகத்தை மூட மத்திய அரசு தீர்மானித்திருப்பது உண்மை என்றால் அது கண்டிக்கத்தக்கது.

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது தமிழகத்திற்கு ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றில் குறிப்பிடத்தக்கது சென்னையை அடுத்த செங்கல்பட்டில் தடுப்பூசி பூங்காவும், மருத்துவப் பூங்காவும் கொண்ட மிகப்பெரிய வளாகத்தை அமைப்பது ஆகும். இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி கணிசமாக குறைந்து விட்ட நிலையில், தடுப்பூசிகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை உருவானது. அதை தடுத்து இந்தியாவுக்கு தேவையான தடுப்பூசி மருந்துகளை உள்நாட்டிலேயே தயாரிப்பது தான் இதன் நோக்கமாகும். மத்திய சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் எச்.எல்.எல் லைஃப் கேர் என்ற பொதுத்துறை நிறுவனத்தின் துணை நிறுவனமான எச்.எல்.எல் பயோடெக் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

மருத்துவர் அன்புமணி மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை ரூ.594 கோடியில் செயல்படுத்தி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், திட்டத்தை செயல்படுத்துவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக இத்திட்டத்தின் மதிப்பு 2017&ஆம் ஆண்டில் ரூ.710 கோடியாகவும், 2019&ஆம் ஆண்டில் ரூ. 904 கோடியாகவும் அதிகரித்தது. முதற்கட்ட மதிப்பீட்டின்படி ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு தடுப்பூசி பூங்கா அமைக்கப்பட்டு, அதில் தடுப்பூசி மருந்துகளை தயாரிப்பதற்கான உலகத்தரம் வாய்ந்த எந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. உயர்த்தப்பட்ட திட்ட மதிப்பீட்டின்படி கூடுதலான வழங்க வேண்டிய நிதியை ஒதுக்கீடு செய்தால் செங்கல்பட்டு தடுப்பூசி மருந்து வளாகத்தில் தடுப்பூசி மருந்து உற்பத்தியை உடனடியாக தொடங்கி விட முடியும்.

Dr Ramadoss Condemned on Integrated Vaccines Complex Closing Issue-News4 Tamil Online News Channel

ஆனால், உயர்த்தப்பட்ட திட்ட மதிப்பீட்டுக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்றும், அவ்வளவு முதலீட்டில் தடுப்பூசி பூங்காவை அமைத்தால், அதை லாபத்தில் இயக்க முடியாது என்றும் மத்திய அரசு கூறி விட்டதாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து தடுப்பூசிபூங்காவில் பணியாற்றி வரும் 174 பணியாளர்களை அழைத்த நிர்வாகம், அவர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்க முடியாது என்றும், மாற்று வேலையை பார்த்துக் கொள்ளும்படியும் கூறியிருக்கிறது. அதனால், கனவுத்திட்டமான தடுப்பூசி உற்பத்தி பூங்கா அதன் மருந்து உற்பத்தியை தொடங்குவதற்கு முன்பாகவே மூடப்படும் அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.

தடுப்பூசி உற்பத்திப் பூங்காவை அதன் உயர்த்தப்பட்ட மதிப்பீட்டில் திறந்தால், அதை லாபத்தில் இயக்க முடியாது என்ற மத்திய அரசின் வாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும். தடுப்பூசி உற்பத்தி பூங்காவை ஆய்வு செய்த உலக நலவாழ்வு நிறுவனத்தின் வல்லுனர் குழுவினர் அது உலகத்தரத்தில் அமைக்கப் பட்டிருப்பதாக சான்றளித்துள்ளனர். தடுப்பூசி பூங்கா திறக்கப்பட்டால், அதில் பென்டாவேலண்ட் தடுப்பூசி, ஹெபடைடிஸ்&பி, ரேபிஸ், மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட 7 வகையான தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய முடியும். இந்த வகை தடுப்பூசிகள் இந்தியாவில் மிகக்குறைந்த அளவிலேயே தயாரிக்கப்படுவதால், பெருமளவில் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. செங்கல்பட்டு தடுப்பூசி பூங்காவில் இம்மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டால் மத்திய அரசுக்கு பெருமளவில் செலவு மிச்சமாகும்.

அதுமட்டுமின்றி, செங்கல்பட்டு தடுப்பூசி பூங்காவில் உற்பத்தி செய்யப்படவுள்ள மருந்துகள் அனைத்தும் உலகத்தரம் வாய்ந்தவை என்பதால், அவற்றில் இந்தியாவின் தேவைக்குப் போக மீதமுள்ள தடுப்பூசி மருந்துகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். அவற்றை வாங்கிக் கொள்ள உலக நாடுகள் தயாராக உள்ளன. அதனால், செங்கல்பட்டு தடுப்பூசி பூங்கா தொடங்கப்பட்ட நாளில் இருந்தே லாபத்தில் இயங்கும். இது மத்திய அரசின் எந்த பொதுத்துறை நிறுவனத்திற்கும் கிடைக்காத அரிய வாய்ப்பாகும்.

தடுப்பூசி பூங்காவை அமைக்கும் எச்.எல்.எல் பயோடெக்கின் தாய் நிறுவனமான எச்.எல்.எல் லைஃப் கேரை பங்குவிற்பனை மூலம் தனியாருக்கு தாரை வார்க்க இருப்பது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் ஆகும். உண்மையில் இது பிரச்சினையே இல்லை. ஏனெனில் எச்.எல்.எல் லைஃப் கேர் நிறுவனத்தை விலைக்கு வாங்கி நடத்த கேரள மாநில அரசு முன்வந்துள்ளது. அத்தகைய சூழலில் எச்.எல்.எல் பயோடெக்கை தனி பொதுத்துறை நிறுவனமாக மாற்றி மத்திய அரசே நடத்தலாம். அதன்மூலம் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் 174 பேரின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். ஒருவேளை இது மத்திய அரசால் சாத்தியமாகாத நிலையில், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5% பங்குகளை வாங்கியது போன்று, அதிக லாபம் ஈட்டக்கூடிய தடுப்பூசி பூங்காவையும் தமிழக அரசு வாங்கி நடத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கிய இளைஞர் அணி செயலாளர் பதவியால் நேர்ந்த அசிங்கம் #உதயநிதிக்கு_மண்டியிட்ட_திமுக

0

உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கிய இளைஞர் அணி செயலாளர் பதவியால் நேர்ந்த அசிங்கம் #உதயநிதிக்கு_மண்டியிட்ட_திமுக

முன்னாள் திமுக தலைவரும்,முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி அவர்களின் மறைவிற்கு பிறகு ஸ்டாலின் திமுகவின் தலைவராக பொறுப்பேற்றார். திமுக தலைவராக பதவியேற்பதற்கு முன்பு திமுகவின் செயல் தலைவராகவும் அதற்கு முன்னதாக இளைஞர் அணி தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு பிறகு அந்த பதவிக்கு வந்த அவரது வாரிசான மு.க.ஸ்டாலின் தனக்கு பிறகு தன்னுடைய வாரிசான உதயநிதி ஸ்டாலினை கட்சிக்குள் நுழைக்க தீவிரமாக செயல்பட்டு வந்தார்.அதுவும் ஆரம்பத்தில் தான் வகித்த இளைஞர் அணியில் பதவியை வழங்க திட்டமிட்டு வந்தார்.

இந்நிலையில் ஜெயலலிதா மறைவினால் ஏற்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் விட்டது, அவரது தொகுதியான ஆர்.கே நகரில் நடந்த இடைத்தேர்தலில் டெபாசிட்டை இழந்து படு தோல்வியடைந்து மற்றும் ஸ்டாலினின் கடந்த கால உளறல் பேச்சுக்களையெல்லாம் பார்க்கும் போது ஸ்டாலின் திமுகவை சரியாக வழி நடத்துவாரா? ஸ்டாலினால் திமுகவை தேர்தலில் வெற்றி பெற வைக்க முடியுமா? மக்கள் ஸ்டாலின் தலைமையை ஏற்பார்களா என பல கேள்விகள் தொடர்ந்து எழுந்து வந்தன.

இவ்வளவு கேள்விகளுக்கும் மத்தியில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக அதிக இடங்களை பெற்று வெற்றி பெற்றது. இத்துடன் நடத்தபட்ட தமிழக மக்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சட்டமன்ற இடைத்தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை பெற்று ஆட்சியை கவிழ்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எதிர்பார்த்த அளவு இடைத்தேர்தலில் வெற்றி கிடைக்கவில்லை என்பதால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியே தொடர்கிறது. இவ்வாறான நிலையில் இந்த தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் மத்தியில் ஸ்டாலின் திமுக தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அரசியல் ஆர்வலர்கள் பேசி வருகின்றனர். 

இந்நிலையில் ஏற்கனவே எதிர்பார்த்தது போல தற்போது திமுகவின் இளைஞரணி செயலாளர் பதவியை ஸ்டாலின் மகனான உதயநிதி ஸ்டாலினிற்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திமுகவில் வாரிசு அரசியல் அதிகம் இருப்பதாக பேசப்படும் நிலையில் கட்சிக்கு உதயநிதி ஸ்டாலினை விட அதிகமாக உழைத்தவர்களையெல்லாம் விட்டு அரசியலில் நுழைந்து ஒரு வருடம் கூட ஆகாத உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த பதவியை வழங்கியது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. 

இதையடுத்து உதயநிதி திமுகவின் இளைஞரணி செயலாளரானதை விரும்பாதவர்களும், மாற்று கட்சியினரும் #உதயநிதிக்கு_மண்டியிட்ட_திமுக என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி டுவிட்டரில் தேசிய அளவில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

அவ்வாறு அவர்கள் பதிவிட்டவைகளில் சில பதிவுகளை கீழே காணலாம்.

#உதயநிதிக்கு_மண்டியிட்ட_திமுக #உதயநிதிக்குமண்டியிட்டதிமுக