Thursday, September 19, 2024
Home Blog Page 4971

அரசியலுக்காக கமல்ஹாசன் பேசிய சர்ச்சை கருத்துக்கு எதிராக எழும் கண்டனம்

0

அரசியலுக்காக கமல்ஹாசன் பேசிய சர்ச்சை கருத்துக்கு எதிராக எழும் கண்டனம்

தமிழக சட்ட பேரவைக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து நடிகர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்து வந்தார். அப்போது முஸ்லிம்கள் வசிக்கும் பள்ளப்பட்டி அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது இந்துக்கள் குறித்து கமல்ஹாசன் பேசிய சர்ச்சைகுரிய கருத்தானது இந்துக்கள் இடையே கடும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.தற்போது இருக்கும் அரசியல் தலைவர்கள் போல அல்லாமல் நடிகர் கமலஹாசன் எதாவது மாற்றத்தை கொண்டு வருவார் என்று எதிர்பார்த்திருந்த பெரும்பாலான மக்களுக்கு இந்த சர்ச்சைக்குரிய பேச்சால் ஏமாற்றமே மிஞ்சியது.

பிரச்சாரத்தின் போது அவர் பேசியதாவது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து தான் என்றும் அது கோட்ஸே என்றும் குறிப்பிட்டு பேசியிருந்தார்.இவரின் இந்த சர்ச்சைக்குரிய கருத்து முஸ்லிம்கள் வாக்கை பெறுவதற்காக என்பதை அனைவரும் அறிவர்.மதத்தின் அடிப்படையில் மக்களை பிரித்து அரசியல் செய்ய கமலும் ஆரம்பித்து விட்டார். அதற்காகவே இது போன்ற சர்ச்சை கருத்தை பதிவு செய்திருக்கிறார் என்றும் மக்கள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்துவருகின்றனர்.

நடிகர் கமலஹாசனின் இந்த சர்ச்சைக்குரிய கருத்தை கண்டித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் பாஜக தலைவர் H ராஜா கூறியுள்ளதாவது தமிழகத்தில் ராமலிங்கம் படுகொலையை செய்த முஸ்லீம் தீவிரவாதிகளை கண்டிக்கவோ,அவர்களின் தவறை சுட்டிக்காட்டவோ கமலஹாசனுக்கு தைரியம் இருக்கிறதா என்றும் அவர் கேட்டுள்ளார்.மேலும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜனும் இவரது கருத்துக்கு கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

மேலும் நடிகர் அஜித்துடன் இணைந்து நடித்தவரான விவேக் ஓபராய் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் அவர் முஸ்லிம் மக்களை சந்தோசப்படுத்த பல வழிகள் உள்ளன. அவர்களை சந்தோஷப்படுத்த எங்கள் மதத்தை இழுக்காதீர்கள் என்றும், உங்களை சிறந்த நடிகராக மதிக்கிறேன் ஆனால் இப்படி ஒரு கேவலமான செயலில் மீண்டும் ஈடுபடாதீர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கமல்ஹாசனின் இந்த சர்ச்சைக்குரிய கருத்திற்கு, திராவிட கழக தலைவர் வீரமணி, காங்கிரஸ் தலைவர் K.S அழகிரி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஏற்கனவே இருக்கும் அரசியல்வாதிகள் தான் சாதி,மதம் மற்றும் மொழி அடிப்படையில் பிரிவினைவாத அரசியல் செய்கிறார்கள் என்றால் மாற்றத்தை ஏற்படுத்த போகிறேன் என்று கட்சி ஆரம்பித்த கமலஹாசனும் அதையே செய்ய முயற்சிப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் கமலஹாசனின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சால் இடைத்தேர்தலுக்கான அவரது பிரச்சாரம் இன்று நிறுத்தப்பட்டுள்ளது.

தலித் என்பதால் கொலை குற்றவாளியை கூட ஆதரிக்குமா கம்யூனிஸ்ட் கட்சி?

0

தலித் என்பதால் கொலை குற்றவாளியை கூட ஆதரிக்குமா கம்யூனிஸ்ட் கட்சி?

கடந்த சில தினங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட மாணவி திலகவதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆகாஷின் வாக்குமூலம் அளித்த வீடியோவை காவல் துறை வெளியிட்டது ஏன்?  என போன்ற பல்வேறு கேள்விகளை முன்வைத்து அந்த இளைஞரை ஆதரிக்கும் விதமாக மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கறிவேப்பிலங்குறிச்சியில் தன்னை காதலிக்க மறுத்துவிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக திலகவதி என்ற கல்லூரி மாணவியை, அதேபகுதியைச் சேர்ந்த தலித் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார். காதலிக்க மறுத்ததற்காக மட்டுமே அந்த அப்பாவிப் பெண்ணை அந்த இளைஞர் கொலை செய்திருப்பது தெளிவாக தெரிகிறது.  

இந்நிலையில் கொலையாளி ஆகாஷை கைது செய்து, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட திலகவதி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், கொலை செய்ததாக குற்றம்சாட்டப்படும் ஆகாஷ் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதாலும் காவல் துறையில் உள்ள சிலர் கொலை குற்றவாளிக்கு ஆதரவாக செயல்படுவதாக சந்தேகம் இருப்பதாலும் அப்பகுதியில் சாதிய மோதல் ஏற்படும் பதற்றம் தொடர்கிறது. இதுதொடர்பாக கொலை குற்றவாளி ஆகாஷ் தானே கொலை குற்றத்தை ஏற்றுக்கொண்டு காவல் துறையினரிடம் அளித்த வாக்குமூலம் வீடியோவாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரவி வருகிறது.

குற்றவாளியின் தந்தை மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போன்றோர் இந்த கொலையை ஆகாஷ் செய்யவில்லை என்றும் இது அந்த மாணவியின் உறவினர்களால் செய்யப்பட்ட ஆணவ கொலையாக கூட இருக்கலாம் என்றும் கூறி வந்த நிலையில் கொலையாளி ஆகாஷே குற்றத்தை ஒப்பு கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளது அவர் தான் கொலையை செய்துள்ளார் என்பதை உறுதி செய்கிறது.

இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “திலகவதி படுகொலை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. வீட்டிலிருக்கும் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லையென்றால், வெளியில் சென்றுவரும் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும்?  தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து கொண்டிருக்கின்றன என்று குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், இவ்வழக்கில் ஆகாஷ் என்னும் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியதாக காவல் துறையே வாட்ஸ் அப்பில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. ஒருவேளை அவர் கொலை செய்திருக்கலாம். போலீசார் அந்த இளைஞரிடம் வாக்குமூலம் வாங்கியும் இருக்கலாம். அதை நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்திருக்கனும். வாட்ஸ் அப்பில் வெளிப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? நாளைக்கே அந்த இளைஞர் கட்டாயத்தின் பேரில்தான் வாக்குமூலம் பெற்றதாகக் கூறினால் போலீசால் என்ன செய்யும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர்கள் இருவரும் விரும்பினார்கள் என்றும், மாணவியைக் கொலை செய்ய வேண்டிய அவசியம் தனது மகனுக்கு இல்லை என்றும் அந்த இளைஞரின் தந்தை புகார் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள், இப்படியான இரண்டு மாறுபட்ட கருத்துகள் வருவது பலத்த சந்தேகமாகவே உள்ளது. எங்களைப் பொறுத்தவரை மாணவி திலகவதியை யார் கொலை செய்திருந்தாலும், அவர்கள் எந்த சாதி, மதமாக இருந்தாலும் உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

குற்றத்தை கொலையாளியே ஒப்பு கொண்டு வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் அரசியல் லாபத்திற்காக இவர் போன்றவர்கள் வழக்கை திசை திருப்பும் வகையில் பேசி குற்றவாளியை ஆதரிக்கலாமா? என்று பொது மக்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

மக்களவை தேர்தல் முடிவிற்கு பிறகு காங்கிரஸ் கட்சியை ஓரங்கட்ட தயாராகும் ஸ்டாலின்

0

மக்களவை தேர்தல் முடிவிற்கு பிறகு காங்கிரஸ் கட்சியை ஓரங்கட்ட தயாராகும் ஸ்டாலின்

ஏற்கனவே வெளிவந்த தகவல்களின் படி தேசிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணி அமைக்க முயற்சித்து வரும் தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று மதியம் சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, மத்தியில் காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத அணி அமைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவு வெளியான பிறகு, தேசிய அளவில் பாஜக காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில், ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவும் தனித்தனியாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வாரம் திங்கள் அன்று இது சம்பந்தமாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்திரசேகர ராவ், சந்தித்துப் பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து, இன்று மதியம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேச வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையொட்டி, தனது குடும்பத்தினருடன் திருச்சி வந்துள்ள சந்திரசேகர ராவ், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோயில்களில் இன்று காலை வழிபாடு நடத்துகிறார். பிறகு சென்னைக்கு திரும்பி, மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, மூன்றாவது அணி அமைப்பது குறித்தும், தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று கூறி பிரச்சாரம் செய்த ஸ்டாலின் அவர்களது வாக்குகளை பெற்று கொண்டு தற்போது காங்கிரஸ் கட்சியை ஒதுக்கி விட்டு மூன்றாவது அணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பது காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசியலில் திமுக ஆட்சியை பிடிக்க சாதகமான சூழ்நிலை இருந்தும் அதை செய்ய முடியாத ஸ்டாலின் தேசிய அளவில் மூன்றாவது அணி அமைக்க முயற்சிப்பது நடக்குமா? என்று அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தூண்டி விடுவதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய சமூக வலைத்தளங்களில் கோரிக்கை

0

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தூண்டி விடுவதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய சமூக வலைத்தளங்களில் கோரிக்கை

கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கறிவேப்பிலங்குறிச்சியில் தன்னை காதலிக்க மறுத்ததற்காக வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த திலகவதி என்ற கல்லூரி மாணவியை, அதேபகுதியைச் சேர்ந்த தலித் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார்.இதையடுத்து அந்த இளைஞரை காவல்துறை கைது செய்துள்ளது.இந்த வழக்கில் தனது மகனை சம்பந்தமில்லாமல் கைது செய்திருப்பதாக கொலையாளியின் தந்தை காவல் துறையில் புகார் அளித்திருந்தார்.

இந்த கொடுமையான சம்பவத்தையடுத்து பெரும்பாலான தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் கண்டு கொள்ளாமல் கடந்து செல்ல வழக்கம் போல பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மட்டுமே கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் இந்த கொலைக்கு ஒரு சில அமைப்பினரால் நடத்தப்படும் நாடக காதலே காரணம் என்றும் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த அறிக்கையில் தனிப்பட்ட முறையில் எந்த அரசியல் அமைப்பையோ அல்லது தலைவர்களையோ குறிப்பிடாத நிலையில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்கள் தன்னை சம்பந்தமில்லாமல் அந்த கொலை வழக்குடன் இணைத்து பேச கூடாது என்று அந்த அறிக்கைக்கு பதில் அளித்திருந்தார்.மீறினால் மான நஷ்ட வழக்கு தொடர போவதாகவும் கூறியிருந்தார்.

மேலும் இந்த கொலையானது அந்த பெண்ணின் குடும்பத்தினரால் நடத்தப்பட்ட ஆணவ கொலையாக கூட இருக்கலாம் என காவல் துறையினரின் விசாரணையை திசைதிருப்பும் வகையில் பேசியிருந்தார். இந்நிலையில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் குற்றவாளியே அந்த கொலையை தான் தான் செய்ததாக வாக்குமூலம் அளித்தது உண்மையை உறுதி செய்தது. அதே நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஒரு கொலையாளியை காப்பாற்றும் வகையில் அவனுக்கு ஆதரவாக கொலையை திசை திருப்ப முயன்றது மக்கள் மத்தியில் உறுதியானது. இதற்கு முன்பே திருமாவளவன் அவரது கட்சி பொது கூட்டத்தில் மற்ற சமுதாய பெண்களை காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்று அந்த கட்சி இளைஞர்களுக்கு தவறான வழியை காட்டும் வகையில் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடக்கும் பெரும்பாலான குற்றங்களுக்கு தலித் இளைஞர்களே காரணமாக இருப்பதற்க இவரின் அந்த தவறான வழிகாட்டுதலே காரணம் என பல்வேறு தரப்புகளிலிருந்தும் எதிர்ப்பு குரல் கிளம்பியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இவரை எதிர்த்து பதிவிடும் பெரும்பாலோனோர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வேண்டும் என்றே கோரிக்கை வைக்கின்றனர்.

இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய கூறி சமூக வலைதளங்களில் வெளியான பதிவுகளில் சில உங்களின் பார்வைக்காக

முதலமைச்சரை கன்னத்தில் அறைந்த இளைஞர் அளித்த பரபரப்பான பேட்டி

0

முதலமைச்சரை கன்னத்தில் அறைந்த இளைஞர் அளித்த பரபரப்பான பேட்டி

மக்களவை தேர்தலை முன்னிட்டு கடந்த 4-ஆம் தேதி டெல்லி முதலமைச்சரான அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள், டெல்லி மோத்தி நகர் பகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத நிலையில் கூட்டத்திலிருந்து ஒருவர் ஓடிக்கொண்டிருந்த அவரது வாகனத்தின் மீது ஏறி அரவிந்த் கெஜ்ரிவாலின் கன்னத்திலும் பளார் என அறைந்து விட்டார்.

இதனால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சற்று தடுமாறி நிலைகுலைந்தார். உடனே அங்கிருந்த ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் அரவிந்த் கெஜ்ரிவாலை தாக்கிய சுரேஷ் என்ற நபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பொது இடத்திலேயே முதல்வரை தாக்கிய அவர் மீது டெல்லி காவல் நிலையம் கிரிமினல் சட்ட பிரிவு 107/5-ன் கீழ் வழக்கு பதிவு செய்து கடந்த 5 ஆம் தேதி மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தியது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சுரேஷை இரண்டு நாள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சுரேஷ் இது தொடர்பாக பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது. ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை மதிக்காமல், நான் ஏன் இப்படி செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை. எப்படி அறைந்தேன் என்றும் தெரியவில்லை நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவன் அல்ல. என் பின்னணியில் யாரும் இல்லை. என்னை யாரும் தூண்டிவிட்டு நான் செய்யவில்லை. நான் செய்தது மிகப் பெரிய தவறு என்றும் அவர் கூறியுள்ளார்.இவ்வாறு இவர் கூறிய காரணங்கள் சம்பந்தமில்லாமல் இருப்பதால் இவர் யார்? எதற்காக அறைந்தார்? என்று எதுவும் புரியாமல் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

கொலை செய்ததை தலித் இளைஞரே ஒப்பு கொண்ட பிறகும் சாதியை வைத்து காப்பாற்ற துடிக்கும் திருமாவளவன்

0

கொலை செய்ததை தலித் இளைஞரே ஒப்பு கொண்ட பிறகும் சாதியை வைத்து காப்பாற்ற துடிக்கும் திருமாவளவன்

சமீபத்தில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் தன்னை காதலிக்க வில்லை என்ற ஒரே காரணத்திற்காக வன்னிய சமூகத்தை சேர்ந்த திலகவதி என்ற கல்லூரி மாணவியை அப்பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்ற தலித் இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த பெண்ணின் உறவினர்கள் இந்த கொலைக்கு காரணமானவனை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் கொலை செய்ததாக கூறப்படும் தலித் இளைஞர் ஆகாஷின் தந்தை இந்த கொலையில் தன் மகனுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும்,இவர் தலித் என்பதால் அந்த பெண்ணை அவரின் உறவினர்களே ஆணவ கொலை செய்து விட்டு ஆகாஷ் மீது பழி சுமத்துவதாகவும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
இவரை போலவே தலித் மக்களுக்காக அரசியல் செய்யும் விசிகவின் திருமாவளவனும் இந்த கொலையில் தேவையில்லாமல் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தன்னை இணைத்து பேசுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.மேலும் இது அந்த பெண்ணின் உறவினர்களால் செய்யப்பட்ட ஆணவ கொலை என்றும், வேண்டுமென்றே தலித் இளைஞர் மீது பழி சுமத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கொலை வழக்கில் கைது செய்யபட்ட அந்த தலித் இளைஞர் ஆகாஷ் தான் இந்த கொலையை செய்ததாக அவரே வாக்குமூலம் அளித்துள்ளார். இவ்வாறு கொலை செய்த அந்த இளைஞரே குற்றத்தை ஒப்பு கொண்டு வாக்கு மூலம் கொடுத்துள்ள நிலையில் பொது வாழ்க்கையில் இருக்கும் தலைவர் திருமாவளவன் சாதிய அடிப்படையில் கொலைக்கு காரணமான இளைஞரை காப்பாற்ற முயற்சிப்பது பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரை போன்றவர்கள் இப்படி இந்த இளைஞர்களை ஊக்க படுத்துவதால் தான் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழகத்தில் ஆட்சியை கலைக்க தயாராகும் டிடிவி தினகரன் கலக்கத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

0

தமிழகத்தில் ஆட்சியை கலைக்க தயாராகும் டிடிவி தினகரன் கலக்கத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் நடைபெற்று வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவின் ஆட்சியை கவிழ்ப்பதற்காக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புதிய வியூகம் ஒன்றை வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த காலங்களில் சொல்லியது போல தினகரனின் ஸ்லீப்பர் செல்கள் மூலம் நடைபெற்று வரும் அதிமுக ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 18 ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 தமிழக சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் மேலும் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் வருகிற 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, தமிழக அரசியல் கட்சிகள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23 ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு அனுப்பப்படுவார் என மு.க.ஸ்டாலின் அவ்வப்போது கூறி வருகிறார். கடந்த 3 வருடங்களாக திமுக தலைவர் ஸ்டாலின் இது போன்ற கருத்துக்களை மட்டுமே தெரிவித்து வருகிறார்.பிரகாசமான வாய்ப்பிருந்தும் அதை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்றும் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி அளவிற்கு ஸ்டாலினுக்கு அரசியல் திறமை இல்லை என்றும் அக்கட்சியினரே புலம்பி வருகின்றனர்.

தற்போதைய சூழலில் எடப்பாடி தலைமையிலான தமிழக சட்டப்பேரவையில் 22 இடங்கள் காலியாக உள்ளது. அதிமுகவிடம் 114 எம்.எல்.ஏ.க்களும்,திமுகவிடம் 96 எம்.எல்.ஏ.க்களும் இருக்கிறார்கள். மேலும் சுயேச்சை எம்.எல்.ஏவாக டிடிவி. தினகரன் இருக்கிறார். இது இல்லாமல் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமீமுன் அன்சாரி மற்றும் கருணாஸ், தனியரசு ஆகியோர்களும் இருக்கிறார்கள். அதேபோல் அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோர் அதிமுகவின் மீது அதிருப்தியில் உள்ளனர். இதனால் இடைத்தேர்தல் முடிவிற்கு பிறகு அதிமுக பெரும்பான்மை பெற குறைந்தது 7-8 இடங்கள் தேவைப்படுகிறது. 

இதனால் ஆட்சியை தக்க வைத்து கொள்ள தினகரனுடன் தொடர்பில் இருப்பதாக கூறி 3 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்துவிட்டு 4 அல்லது 5 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியில் தொடரலாம் என எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி திட்டத்திற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையிலும் தினகரனுக்கு ஆதரவாகவும் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். அதேபோல் சபாநாயகர் நோட்டீஸை எதிர்த்து அந்த 3 எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தை நாடினர். அதில் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு நடக்கும் வரை சபாநாயகர் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது நீதிமன்றம் கூறி விட்டது.

இதனிடையே சமீபத்தில் பேசிய தங்க தமிழ்ச்செல்வன் திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கவிழ்போம் என கூறியிருந்தார். திமுகவிற்கு அமமுக உதவ போவதாகவும் அறிவித்து இருக்கிறார். அதாவது சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் அமமுக திமுகவிற்கு ஆதரவு அளிக்கும். இதனால் சபாநாயகர் நீக்கப்பட வாய்ப்புள்ளது. அப்படி நடக்கும் பட்சத்தில் அதிமுக அரசு கவிழ கூட வாய்ப்புள்ளது என்றும் எதிர்பார்க்க படுகிறது.

இந்நிலையில் தான் தினகரன் பல நாட்களாக சொல்லிக்கொண்டு வரும் அந்த அமமுக ஆதரவான ஸ்லீப்பர் செல்கள் மூலம் அதிமுக ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் சபாநாயகற்கு எதிராக வாக்களிப்பார்கள். இல்லையென்றால் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து மொத்தமாக ஆட்சியை கவிழ்ப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியோ மே 23-ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவிற்கு பிறகு அதிமுக ஆட்சியில் தொடருமா? கவிழுமா? அல்லது திமுக ஆட்சியமைக்குமா? காத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

நாடகக் காதல் மற்றும் ஒருதலைக் காதல் கொலைகளில் ஈடுபடும் மனித மிருகங்களை மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டும்-மருத்துவர் ராமதாஸ்

0

நாடகக் காதல் மற்றும் ஒருதலைக் காதல் கொலைகளில் ஈடுபடும் மனித மிருகங்களை மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டும்-மருத்துவர் ராமதாஸ்

கடந்த காலங்களில் ஒரு குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்த தலைவர்கள் சாதி மறுப்பு திருமணத்தை ஆதரித்து பேசியதாலோ என்னவோ தொடர்ந்து அந்த சமுதாய இளைஞர்கள் மற்ற சமுதாய பெண்களை விரட்டி விரட்டி காதலிப்பதும் காதலிக்க மறுக்கும் பெண்களை கொலை செய்வதுமாகவே தொடர்கிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த தலித் இளைஞர் தன்னை காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார்.தலித் மக்களுக்கு எதாவது பிரச்சனை என்றால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என்ற விளம்பர பிரியர்கள் அனைவரும் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.

ஆனால் அந்த தலித் மக்களால் மற்றவர்களுக்கு பிரச்சனை என்றால் கண்டு கொள்ளாமல் சென்று விடுகிறார்கள். இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட அந்த சமுதாய தலைவர்கள் தொடர்ந்து அந்த இளைஞர்களை இது போல தூண்டி விட்டு வருகின்றனர். வழக்கம் போல தமிழகத்தில் யாருக்கு எந்த பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக குரல் கொடுக்கும் பாமக நிறுவனர் இந்த விவகாரத்திலும் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கறிவேப்பிலங்குறிச்சியில் காதலிக்க மறுத்ததற்காக வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த திலகவதி என்ற கல்லூரி மாணவியை, அதேபகுதியைச் சேர்ந்த தலித் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார். காதலிக்க மறுத்ததற்காக அப்பாவிப் பெண்ணை கொலை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது; கடுமையாக தண்டிக்கத்தக்கது.

கீழ் பவளங்குடியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான சுந்தரமூர்த்தி அருகில் உள்ள கருவேப்பிலங் குறிச்சியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார். அவரது மகள் திலகவதி விருத்தாசலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். நேற்று கல்லூரியில் இருந்து திரும்பிய அவர், வீட்டில் தனியாக இருந்த போது அருகிலுள்ள பேரலையூர் காலனியைச் சேர்ந்த ஆகாஷ் என்பவன் வீட்டிற்குள் புகுந்து திலகவதியை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பியோடி விட்டான். உயிருக்கு போராடிய திலகவதியை அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. திலகவதியை இழந்த அவரது குடும்பம் துயரத்தில் மூழ்கியுள்ளது.

திலகவதி எந்தப் பாவமும் செய்யவில்லை. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அவர் படித்தால் தான் எதிர்காலம் என்பதை உணர்ந்து கல்வியில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், நாடகக் காதல் மற்றும் ஒருதலைக் காதல் செய்வதையும், அதையே முதலீடாகக் கொண்டு பணம் பறிப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கும் கும்பலைச் சேர்ந்த ஆகாஷ் தம்மை காதலித்தே தீர வேண்டும் என்று திலகவதியை கட்டாயப்படுத்தி இருக்கிறான். அதற்கு திலகவதி மறுத்து விட்டதால், அவரை வெறித்தனமாக கொலை செய்திருக்கிறான்.

காதலிக்க மறுக்கும் பெண்களை கொடூரமான முறையில் குத்தியும், வெட்டியும் கொலை செய்வது இது முதல்முறையல்ல. சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த சுவாதி என்ற பொறியாளர் 2016&ஆம் ஆண்டு ஜூன் 24-ஆம் தேதி நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் இராம்குமார் என்ற இளைஞனால் கொடூரமாக வெட்டிப் கொலை செய்யப்பட்டார். அதன்பின் விழுப்புரத்தையடுத்த வ.பாளையம் கிராமத்தில் நவீனா என்ற சிறுமியை செந்தில் என்ற மிருகம் உயிருடன் எரித்து கொலை செய்தது. தொடர்ந்து கரூர் பொறியியல் கல்லூரியில் சோனாலி என்ற மாணவி வகுப்பறையில் கட்டையால் அடித்தும், தூத்துக்குடியில் பிரான்சினா என்ற ஆசிரியை தேவாலயத்தில் வெட்டியும் படுகொலை செய்யப் பட்டுள்ளனர். இவர்களுக்கு முன்பே காரைக்காலில் வினோதினியும், ஆதம்பாக்கத்தில் வித்யாவும் அமிலம் வீசிப் படுகொலை செய்யப்பட்டனர். இத்தகையக் கொலைகள் தடையின்றி தொடர்கின்றன.

ஒரு தலைக் காதல் கொலைகளில் பெரும்பாலானவை அவற்றையே பிழைப்பாகக் கொண்டிருக்கும் ஒரு கும்பலால் நடத்தப்பட்டவை தான். பிற சமுதாயத்து பெண்கள் அனைவரும் தங்களால் காதலிக்கப் படுவதற்காகவே பிறந்தவர்கள் என நினைக்கும் அவர்கள், தங்களின் நாடகக் காதலை நம்பி ஏமாறும் பெண்களிடமிருந்து பணம் பறிக்கின்றனர்; காதலிக்க மறுக்கும் பெண்களை படுகொலை செய்கின்றனர். இத்தகைய குற்றவாளிகள் அனைவருக்கும் விடுதலை சிறுத்தைகள் கும்பல் அனைத்து வகையிலும் பாதுகாப்பாக இருப்பது தான் இத்தகைய குற்றங்கள் தொடரவும், அதிகரிக்கவும் காரணமாக அமைகின்றன.

நாடகக் காதல் மற்றும் ஒருதலைக் காதல் கொலைகளை திட்டமிட்டு அரங்கேற்றுவது சமுதாயத்தில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இத்தகைய கொலைகள் தொடரக்கூடாது என்பதற்காகவும், இளம்பெண்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும் தான் அனைத்து சமுதாயப் பேரியக்கத்தைத் தொடங்கி அனைத்து மாவட்டங்களிலும் கூட்டங்களை நடத்தி அரசுக்கு கோரிக்கை விடுத்தோம். ஆனாலும் இத்தகைய கொலைகள் தொடருகின்றன.

இளைஞர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த ஆலோசனைகளை வழங்கி வழிகாட்ட வேண்டிய தலைவர்கள், இத்தகைய செயல்களை ஆதரிப்பதும், தூண்டி விடுவதும் தான் இத்தகைய கொலைகளுக்கு மூல காரணம் ஆகும். தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளின் தலைவர்களும் இதில் ஆர்வம் காட்ட மறுக்கின்றனர். இன்னும் சிலரோ, இத்தகைய கொலைகளை நியாயப்படுத்தும் வகையிலும், வேறு சிலரோ இது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்றும் கூறி மிகவும் எளிதாக கடந்து செல்கின்றனர். இத்தகையப் போக்கு மிகவும் ஆபத்தானது.

தமிழ்நாட்டில் பெண்கள் படித்தால் தான் சமூகம் முன்னேறும். ஆனால், நாடகக் காதல் மற்றும் ஒருதலைக் காதல் காரணமாக தங்களின் பெண் குழந்தைகளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பவே தயங்கும் நிலை உருவாகியுள்ளது. பெண்களை படிக்க வைக்க முடியாமலும், பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடியாமலும் தடுக்கும் வகையில் நாடகக் காதல் மற்றும் ஒருதலைக் காதல் கொலைகளில் ஈடுபடும் மனித மிருகங்களை மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் கடுமையான சட்டத்தை வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் இயற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடவுள் இருக்கான் குமாரு இந்துக்களிடம் அசிங்கப்பட்ட திமுக மற்றும் பெரியார் ஆதரவாளர்கள்

0

கடவுள் இருக்கான் குமாரு இந்துக்களிடம் அசிங்கப்பட்ட திமுக மற்றும் பெரியார் ஆதரவாளர்கள்

தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்யாததால் கடுமையான வறட்சி நிலவுவதாக தமிழ்நாடு அறநிலை துறை சார்பாக ஒரு அறிக்கை கடந்த வாரம் வெளியானது.

இவ்வாறு தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான வறட்சியின் காரணமாக பெரும்பாலான இடங்களில் குடிக்க தண்ணீர் கூட கிடைக்காமல் மக்கள் கடும் துன்பத்திற்கு உள்ளாகியுள்ளனர், எனவே மழை வேண்டி அனைத்து கோவில்களிலும் யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்த வேண்டும் என்று தமிழக அறநிலையத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டது.

இது வழக்கமாக கிராமங்களில் உள்ள கோவில்களில் வருடம் ஒரு முறை அந்த பகுதி மக்களால் நடத்தப்படும் வழக்கம் என்றாலும் தமிழக அறநிலை துறையால் அறிவிக்கப்பட்டது பெரும் விமர்சனத்திற்கு ஆளானது. இந்து சமய கோவில்களை பராமரித்து வரும் தமிழக அறநிலை துறை இந்துக்களின் பழக்க வழக்கங்களை மறக்காமல் அதை அரசு அறிவிப்பாக வெளியிட்டது பெரும்பாலான இந்துக்களின் வரவேற்பை பெற்றது.

ஆனால் சாதி மற்றும் மதங்களை வைத்து பிரிவினை அரசியல் செய்யும் தலைவர்கள் இதற்கு விமர்சனம் எழுப்பி வந்தார்கள். குறிப்பாக திமுக கூட்டணியில் இருக்கும் திராவிட கழக தலைவர் வீரமணி யாகம் நடத்தினால் மழை வருமா? என்று கிண்டலாக கேள்வி எழுப்பினார். ஆனால் இவ்வளவு விமர்சனங்களையும் மீறி தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் தமிழக அறநிலை துறை அறிவிப்பின் படி மழை வேண்டி யாகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தபட்டன.

இதனையடுத்து தமிழக அறநிலை துறை மற்றும் இந்துக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.மேலும் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனத்த மழையும் பெய்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து மழை இல்லாமல் வறட்சி நிலவி வந்த நிலையில் இந்த மழையால் மக்களும் தமிழக விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்கள். மேலும் மழை வர யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்த வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்ட தமிழக அறநிலை துறையையும் பாராட்டி வருகின்றனர்.

அறநிலை துறையை பாராட்டும் அதே நேரத்தில் கோவில்களில் யாகம் நடத்த அறநிலைய துறை உத்தரவிட்டபோது யாகம் நடத்தினால் மழை வருமா இது ஒரு முட்டாள்தனம் என்று விமர்சனம் செய்து வந்த கி வீரமணி உள்ளிட்ட பெரியாரிய இயக்கங்களை சார்ந்தவர்களையும் அதன் கூட்டணி கட்சியான திமுகவினரையும் இப்போது சமூகவலைத்தளங்களில் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

இதில் குறிப்பாக யாகம் நடத்தினால் முதல்வர் ஆகலாம் என்ற நம்பிக்கை இருக்கும் போது யாகம் நடத்தினால் மழை பெய்யும் என்று நம்ப கூடாதா? என்றும் திமுக,பெரியார் மற்றும் திராவிட ஆதரவாளர்களை குறிவைத்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தருமபுரி மற்றும் தேனி உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு

0

தருமபுரி மற்றும் தேனி உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழகத்தில் கடந்த மாதம் 18 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்காகவும், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலுக்காகவும் மாநிலம் முழுவதும் வாக்குபதிவு நடத்தப்பட்டது. இந்த  வாக்குப்பதிவின் போது சில இடங்களிலில் முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சிகளால் புகார் எழுப்பப்பட்டது. இந்நிலையில் இவ்வாறு புகாருக்கு உள்ளான 46 வாக்குச்சாவடிகளில் நடந்த பிரச்சினை மற்றும் குளறுபடிகள் பற்றி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு விரிவான அறிக்கையை அளித்தார்.

தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அளித்த அறிக்கையின் படி புகார்கள் பதிவு செய்யப்பட்ட இந்த 46 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்ததது.எனினும் தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவு எப்படி இருக்கும் என்று அனைவருக்கும் எதிர்பார்ப்பு இருந்தது.

மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் முடிவை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் புகாருக்கு உள்ளான 13 வாக்குச்சாவடிகளில் தமிழகத்தில் மே 19-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து தருமபுரி தொகுதியில் 8 வாக்கு சாவடிகளிலும், தேனியில் 2 வாக்குசாவடிகளிலும், திருவள்ளூர், கடலூர், ஈரோடு ஆகிய தொகுதிகளில் தலா 1 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு  நடைபெறும் என தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் மறுதேர்தல் நடைபெற்றாலும் தேர்தல் முடிவை வெளியிடும் நாளில் எந்த மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கபடுகிறது.