Thursday, September 19, 2024
Home Blog Page 4972

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தூண்டி விடுவதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய சமூக வலைத்தளங்களில் கோரிக்கை

0

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தூண்டி விடுவதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய சமூக வலைத்தளங்களில் கோரிக்கை

கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கறிவேப்பிலங்குறிச்சியில் தன்னை காதலிக்க மறுத்ததற்காக வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த திலகவதி என்ற கல்லூரி மாணவியை, அதேபகுதியைச் சேர்ந்த தலித் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார்.இதையடுத்து அந்த இளைஞரை காவல்துறை கைது செய்துள்ளது.இந்த வழக்கில் தனது மகனை சம்பந்தமில்லாமல் கைது செய்திருப்பதாக கொலையாளியின் தந்தை காவல் துறையில் புகார் அளித்திருந்தார்.

இந்த கொடுமையான சம்பவத்தையடுத்து பெரும்பாலான தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் கண்டு கொள்ளாமல் கடந்து செல்ல வழக்கம் போல பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மட்டுமே கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் இந்த கொலைக்கு ஒரு சில அமைப்பினரால் நடத்தப்படும் நாடக காதலே காரணம் என்றும் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த அறிக்கையில் தனிப்பட்ட முறையில் எந்த அரசியல் அமைப்பையோ அல்லது தலைவர்களையோ குறிப்பிடாத நிலையில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்கள் தன்னை சம்பந்தமில்லாமல் அந்த கொலை வழக்குடன் இணைத்து பேச கூடாது என்று அந்த அறிக்கைக்கு பதில் அளித்திருந்தார்.மீறினால் மான நஷ்ட வழக்கு தொடர போவதாகவும் கூறியிருந்தார்.

மேலும் இந்த கொலையானது அந்த பெண்ணின் குடும்பத்தினரால் நடத்தப்பட்ட ஆணவ கொலையாக கூட இருக்கலாம் என காவல் துறையினரின் விசாரணையை திசைதிருப்பும் வகையில் பேசியிருந்தார். இந்நிலையில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் குற்றவாளியே அந்த கொலையை தான் தான் செய்ததாக வாக்குமூலம் அளித்தது உண்மையை உறுதி செய்தது. அதே நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஒரு கொலையாளியை காப்பாற்றும் வகையில் அவனுக்கு ஆதரவாக கொலையை திசை திருப்ப முயன்றது மக்கள் மத்தியில் உறுதியானது. இதற்கு முன்பே திருமாவளவன் அவரது கட்சி பொது கூட்டத்தில் மற்ற சமுதாய பெண்களை காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்று அந்த கட்சி இளைஞர்களுக்கு தவறான வழியை காட்டும் வகையில் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடக்கும் பெரும்பாலான குற்றங்களுக்கு தலித் இளைஞர்களே காரணமாக இருப்பதற்க இவரின் அந்த தவறான வழிகாட்டுதலே காரணம் என பல்வேறு தரப்புகளிலிருந்தும் எதிர்ப்பு குரல் கிளம்பியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இவரை எதிர்த்து பதிவிடும் பெரும்பாலோனோர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வேண்டும் என்றே கோரிக்கை வைக்கின்றனர்.

இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய கூறி சமூக வலைதளங்களில் வெளியான பதிவுகளில் சில உங்களின் பார்வைக்காக

முதலமைச்சரை கன்னத்தில் அறைந்த இளைஞர் அளித்த பரபரப்பான பேட்டி

0

முதலமைச்சரை கன்னத்தில் அறைந்த இளைஞர் அளித்த பரபரப்பான பேட்டி

மக்களவை தேர்தலை முன்னிட்டு கடந்த 4-ஆம் தேதி டெல்லி முதலமைச்சரான அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள், டெல்லி மோத்தி நகர் பகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத நிலையில் கூட்டத்திலிருந்து ஒருவர் ஓடிக்கொண்டிருந்த அவரது வாகனத்தின் மீது ஏறி அரவிந்த் கெஜ்ரிவாலின் கன்னத்திலும் பளார் என அறைந்து விட்டார்.

இதனால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சற்று தடுமாறி நிலைகுலைந்தார். உடனே அங்கிருந்த ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் அரவிந்த் கெஜ்ரிவாலை தாக்கிய சுரேஷ் என்ற நபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பொது இடத்திலேயே முதல்வரை தாக்கிய அவர் மீது டெல்லி காவல் நிலையம் கிரிமினல் சட்ட பிரிவு 107/5-ன் கீழ் வழக்கு பதிவு செய்து கடந்த 5 ஆம் தேதி மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தியது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சுரேஷை இரண்டு நாள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சுரேஷ் இது தொடர்பாக பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது. ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை மதிக்காமல், நான் ஏன் இப்படி செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை. எப்படி அறைந்தேன் என்றும் தெரியவில்லை நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவன் அல்ல. என் பின்னணியில் யாரும் இல்லை. என்னை யாரும் தூண்டிவிட்டு நான் செய்யவில்லை. நான் செய்தது மிகப் பெரிய தவறு என்றும் அவர் கூறியுள்ளார்.இவ்வாறு இவர் கூறிய காரணங்கள் சம்பந்தமில்லாமல் இருப்பதால் இவர் யார்? எதற்காக அறைந்தார்? என்று எதுவும் புரியாமல் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

கொலை செய்ததை தலித் இளைஞரே ஒப்பு கொண்ட பிறகும் சாதியை வைத்து காப்பாற்ற துடிக்கும் திருமாவளவன்

0

கொலை செய்ததை தலித் இளைஞரே ஒப்பு கொண்ட பிறகும் சாதியை வைத்து காப்பாற்ற துடிக்கும் திருமாவளவன்

சமீபத்தில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் தன்னை காதலிக்க வில்லை என்ற ஒரே காரணத்திற்காக வன்னிய சமூகத்தை சேர்ந்த திலகவதி என்ற கல்லூரி மாணவியை அப்பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்ற தலித் இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த பெண்ணின் உறவினர்கள் இந்த கொலைக்கு காரணமானவனை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் கொலை செய்ததாக கூறப்படும் தலித் இளைஞர் ஆகாஷின் தந்தை இந்த கொலையில் தன் மகனுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும்,இவர் தலித் என்பதால் அந்த பெண்ணை அவரின் உறவினர்களே ஆணவ கொலை செய்து விட்டு ஆகாஷ் மீது பழி சுமத்துவதாகவும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
இவரை போலவே தலித் மக்களுக்காக அரசியல் செய்யும் விசிகவின் திருமாவளவனும் இந்த கொலையில் தேவையில்லாமல் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தன்னை இணைத்து பேசுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.மேலும் இது அந்த பெண்ணின் உறவினர்களால் செய்யப்பட்ட ஆணவ கொலை என்றும், வேண்டுமென்றே தலித் இளைஞர் மீது பழி சுமத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கொலை வழக்கில் கைது செய்யபட்ட அந்த தலித் இளைஞர் ஆகாஷ் தான் இந்த கொலையை செய்ததாக அவரே வாக்குமூலம் அளித்துள்ளார். இவ்வாறு கொலை செய்த அந்த இளைஞரே குற்றத்தை ஒப்பு கொண்டு வாக்கு மூலம் கொடுத்துள்ள நிலையில் பொது வாழ்க்கையில் இருக்கும் தலைவர் திருமாவளவன் சாதிய அடிப்படையில் கொலைக்கு காரணமான இளைஞரை காப்பாற்ற முயற்சிப்பது பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரை போன்றவர்கள் இப்படி இந்த இளைஞர்களை ஊக்க படுத்துவதால் தான் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழகத்தில் ஆட்சியை கலைக்க தயாராகும் டிடிவி தினகரன் கலக்கத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

0

தமிழகத்தில் ஆட்சியை கலைக்க தயாராகும் டிடிவி தினகரன் கலக்கத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் நடைபெற்று வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவின் ஆட்சியை கவிழ்ப்பதற்காக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புதிய வியூகம் ஒன்றை வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த காலங்களில் சொல்லியது போல தினகரனின் ஸ்லீப்பர் செல்கள் மூலம் நடைபெற்று வரும் அதிமுக ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 18 ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 தமிழக சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் மேலும் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் வருகிற 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, தமிழக அரசியல் கட்சிகள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23 ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு அனுப்பப்படுவார் என மு.க.ஸ்டாலின் அவ்வப்போது கூறி வருகிறார். கடந்த 3 வருடங்களாக திமுக தலைவர் ஸ்டாலின் இது போன்ற கருத்துக்களை மட்டுமே தெரிவித்து வருகிறார்.பிரகாசமான வாய்ப்பிருந்தும் அதை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்றும் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி அளவிற்கு ஸ்டாலினுக்கு அரசியல் திறமை இல்லை என்றும் அக்கட்சியினரே புலம்பி வருகின்றனர்.

தற்போதைய சூழலில் எடப்பாடி தலைமையிலான தமிழக சட்டப்பேரவையில் 22 இடங்கள் காலியாக உள்ளது. அதிமுகவிடம் 114 எம்.எல்.ஏ.க்களும்,திமுகவிடம் 96 எம்.எல்.ஏ.க்களும் இருக்கிறார்கள். மேலும் சுயேச்சை எம்.எல்.ஏவாக டிடிவி. தினகரன் இருக்கிறார். இது இல்லாமல் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமீமுன் அன்சாரி மற்றும் கருணாஸ், தனியரசு ஆகியோர்களும் இருக்கிறார்கள். அதேபோல் அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோர் அதிமுகவின் மீது அதிருப்தியில் உள்ளனர். இதனால் இடைத்தேர்தல் முடிவிற்கு பிறகு அதிமுக பெரும்பான்மை பெற குறைந்தது 7-8 இடங்கள் தேவைப்படுகிறது. 

இதனால் ஆட்சியை தக்க வைத்து கொள்ள தினகரனுடன் தொடர்பில் இருப்பதாக கூறி 3 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்துவிட்டு 4 அல்லது 5 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியில் தொடரலாம் என எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி திட்டத்திற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையிலும் தினகரனுக்கு ஆதரவாகவும் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். அதேபோல் சபாநாயகர் நோட்டீஸை எதிர்த்து அந்த 3 எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தை நாடினர். அதில் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு நடக்கும் வரை சபாநாயகர் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது நீதிமன்றம் கூறி விட்டது.

இதனிடையே சமீபத்தில் பேசிய தங்க தமிழ்ச்செல்வன் திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கவிழ்போம் என கூறியிருந்தார். திமுகவிற்கு அமமுக உதவ போவதாகவும் அறிவித்து இருக்கிறார். அதாவது சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் அமமுக திமுகவிற்கு ஆதரவு அளிக்கும். இதனால் சபாநாயகர் நீக்கப்பட வாய்ப்புள்ளது. அப்படி நடக்கும் பட்சத்தில் அதிமுக அரசு கவிழ கூட வாய்ப்புள்ளது என்றும் எதிர்பார்க்க படுகிறது.

இந்நிலையில் தான் தினகரன் பல நாட்களாக சொல்லிக்கொண்டு வரும் அந்த அமமுக ஆதரவான ஸ்லீப்பர் செல்கள் மூலம் அதிமுக ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் சபாநாயகற்கு எதிராக வாக்களிப்பார்கள். இல்லையென்றால் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து மொத்தமாக ஆட்சியை கவிழ்ப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியோ மே 23-ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவிற்கு பிறகு அதிமுக ஆட்சியில் தொடருமா? கவிழுமா? அல்லது திமுக ஆட்சியமைக்குமா? காத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

நாடகக் காதல் மற்றும் ஒருதலைக் காதல் கொலைகளில் ஈடுபடும் மனித மிருகங்களை மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டும்-மருத்துவர் ராமதாஸ்

0

நாடகக் காதல் மற்றும் ஒருதலைக் காதல் கொலைகளில் ஈடுபடும் மனித மிருகங்களை மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டும்-மருத்துவர் ராமதாஸ்

கடந்த காலங்களில் ஒரு குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்த தலைவர்கள் சாதி மறுப்பு திருமணத்தை ஆதரித்து பேசியதாலோ என்னவோ தொடர்ந்து அந்த சமுதாய இளைஞர்கள் மற்ற சமுதாய பெண்களை விரட்டி விரட்டி காதலிப்பதும் காதலிக்க மறுக்கும் பெண்களை கொலை செய்வதுமாகவே தொடர்கிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த தலித் இளைஞர் தன்னை காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார்.தலித் மக்களுக்கு எதாவது பிரச்சனை என்றால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என்ற விளம்பர பிரியர்கள் அனைவரும் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.

ஆனால் அந்த தலித் மக்களால் மற்றவர்களுக்கு பிரச்சனை என்றால் கண்டு கொள்ளாமல் சென்று விடுகிறார்கள். இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட அந்த சமுதாய தலைவர்கள் தொடர்ந்து அந்த இளைஞர்களை இது போல தூண்டி விட்டு வருகின்றனர். வழக்கம் போல தமிழகத்தில் யாருக்கு எந்த பிரச்சனை என்றாலும் முதல் ஆளாக குரல் கொடுக்கும் பாமக நிறுவனர் இந்த விவகாரத்திலும் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கறிவேப்பிலங்குறிச்சியில் காதலிக்க மறுத்ததற்காக வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த திலகவதி என்ற கல்லூரி மாணவியை, அதேபகுதியைச் சேர்ந்த தலித் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார். காதலிக்க மறுத்ததற்காக அப்பாவிப் பெண்ணை கொலை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது; கடுமையாக தண்டிக்கத்தக்கது.

கீழ் பவளங்குடியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான சுந்தரமூர்த்தி அருகில் உள்ள கருவேப்பிலங் குறிச்சியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார். அவரது மகள் திலகவதி விருத்தாசலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். நேற்று கல்லூரியில் இருந்து திரும்பிய அவர், வீட்டில் தனியாக இருந்த போது அருகிலுள்ள பேரலையூர் காலனியைச் சேர்ந்த ஆகாஷ் என்பவன் வீட்டிற்குள் புகுந்து திலகவதியை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பியோடி விட்டான். உயிருக்கு போராடிய திலகவதியை அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. திலகவதியை இழந்த அவரது குடும்பம் துயரத்தில் மூழ்கியுள்ளது.

திலகவதி எந்தப் பாவமும் செய்யவில்லை. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அவர் படித்தால் தான் எதிர்காலம் என்பதை உணர்ந்து கல்வியில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், நாடகக் காதல் மற்றும் ஒருதலைக் காதல் செய்வதையும், அதையே முதலீடாகக் கொண்டு பணம் பறிப்பதையும் வாடிக்கையாக வைத்திருக்கும் கும்பலைச் சேர்ந்த ஆகாஷ் தம்மை காதலித்தே தீர வேண்டும் என்று திலகவதியை கட்டாயப்படுத்தி இருக்கிறான். அதற்கு திலகவதி மறுத்து விட்டதால், அவரை வெறித்தனமாக கொலை செய்திருக்கிறான்.

காதலிக்க மறுக்கும் பெண்களை கொடூரமான முறையில் குத்தியும், வெட்டியும் கொலை செய்வது இது முதல்முறையல்ல. சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த சுவாதி என்ற பொறியாளர் 2016&ஆம் ஆண்டு ஜூன் 24-ஆம் தேதி நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் இராம்குமார் என்ற இளைஞனால் கொடூரமாக வெட்டிப் கொலை செய்யப்பட்டார். அதன்பின் விழுப்புரத்தையடுத்த வ.பாளையம் கிராமத்தில் நவீனா என்ற சிறுமியை செந்தில் என்ற மிருகம் உயிருடன் எரித்து கொலை செய்தது. தொடர்ந்து கரூர் பொறியியல் கல்லூரியில் சோனாலி என்ற மாணவி வகுப்பறையில் கட்டையால் அடித்தும், தூத்துக்குடியில் பிரான்சினா என்ற ஆசிரியை தேவாலயத்தில் வெட்டியும் படுகொலை செய்யப் பட்டுள்ளனர். இவர்களுக்கு முன்பே காரைக்காலில் வினோதினியும், ஆதம்பாக்கத்தில் வித்யாவும் அமிலம் வீசிப் படுகொலை செய்யப்பட்டனர். இத்தகையக் கொலைகள் தடையின்றி தொடர்கின்றன.

ஒரு தலைக் காதல் கொலைகளில் பெரும்பாலானவை அவற்றையே பிழைப்பாகக் கொண்டிருக்கும் ஒரு கும்பலால் நடத்தப்பட்டவை தான். பிற சமுதாயத்து பெண்கள் அனைவரும் தங்களால் காதலிக்கப் படுவதற்காகவே பிறந்தவர்கள் என நினைக்கும் அவர்கள், தங்களின் நாடகக் காதலை நம்பி ஏமாறும் பெண்களிடமிருந்து பணம் பறிக்கின்றனர்; காதலிக்க மறுக்கும் பெண்களை படுகொலை செய்கின்றனர். இத்தகைய குற்றவாளிகள் அனைவருக்கும் விடுதலை சிறுத்தைகள் கும்பல் அனைத்து வகையிலும் பாதுகாப்பாக இருப்பது தான் இத்தகைய குற்றங்கள் தொடரவும், அதிகரிக்கவும் காரணமாக அமைகின்றன.

நாடகக் காதல் மற்றும் ஒருதலைக் காதல் கொலைகளை திட்டமிட்டு அரங்கேற்றுவது சமுதாயத்தில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இத்தகைய கொலைகள் தொடரக்கூடாது என்பதற்காகவும், இளம்பெண்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும் தான் அனைத்து சமுதாயப் பேரியக்கத்தைத் தொடங்கி அனைத்து மாவட்டங்களிலும் கூட்டங்களை நடத்தி அரசுக்கு கோரிக்கை விடுத்தோம். ஆனாலும் இத்தகைய கொலைகள் தொடருகின்றன.

இளைஞர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த ஆலோசனைகளை வழங்கி வழிகாட்ட வேண்டிய தலைவர்கள், இத்தகைய செயல்களை ஆதரிப்பதும், தூண்டி விடுவதும் தான் இத்தகைய கொலைகளுக்கு மூல காரணம் ஆகும். தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளின் தலைவர்களும் இதில் ஆர்வம் காட்ட மறுக்கின்றனர். இன்னும் சிலரோ, இத்தகைய கொலைகளை நியாயப்படுத்தும் வகையிலும், வேறு சிலரோ இது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்றும் கூறி மிகவும் எளிதாக கடந்து செல்கின்றனர். இத்தகையப் போக்கு மிகவும் ஆபத்தானது.

தமிழ்நாட்டில் பெண்கள் படித்தால் தான் சமூகம் முன்னேறும். ஆனால், நாடகக் காதல் மற்றும் ஒருதலைக் காதல் காரணமாக தங்களின் பெண் குழந்தைகளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பவே தயங்கும் நிலை உருவாகியுள்ளது. பெண்களை படிக்க வைக்க முடியாமலும், பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடியாமலும் தடுக்கும் வகையில் நாடகக் காதல் மற்றும் ஒருதலைக் காதல் கொலைகளில் ஈடுபடும் மனித மிருகங்களை மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் கடுமையான சட்டத்தை வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் இயற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடவுள் இருக்கான் குமாரு இந்துக்களிடம் அசிங்கப்பட்ட திமுக மற்றும் பெரியார் ஆதரவாளர்கள்

0

கடவுள் இருக்கான் குமாரு இந்துக்களிடம் அசிங்கப்பட்ட திமுக மற்றும் பெரியார் ஆதரவாளர்கள்

தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்யாததால் கடுமையான வறட்சி நிலவுவதாக தமிழ்நாடு அறநிலை துறை சார்பாக ஒரு அறிக்கை கடந்த வாரம் வெளியானது.

இவ்வாறு தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான வறட்சியின் காரணமாக பெரும்பாலான இடங்களில் குடிக்க தண்ணீர் கூட கிடைக்காமல் மக்கள் கடும் துன்பத்திற்கு உள்ளாகியுள்ளனர், எனவே மழை வேண்டி அனைத்து கோவில்களிலும் யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்த வேண்டும் என்று தமிழக அறநிலையத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டது.

இது வழக்கமாக கிராமங்களில் உள்ள கோவில்களில் வருடம் ஒரு முறை அந்த பகுதி மக்களால் நடத்தப்படும் வழக்கம் என்றாலும் தமிழக அறநிலை துறையால் அறிவிக்கப்பட்டது பெரும் விமர்சனத்திற்கு ஆளானது. இந்து சமய கோவில்களை பராமரித்து வரும் தமிழக அறநிலை துறை இந்துக்களின் பழக்க வழக்கங்களை மறக்காமல் அதை அரசு அறிவிப்பாக வெளியிட்டது பெரும்பாலான இந்துக்களின் வரவேற்பை பெற்றது.

ஆனால் சாதி மற்றும் மதங்களை வைத்து பிரிவினை அரசியல் செய்யும் தலைவர்கள் இதற்கு விமர்சனம் எழுப்பி வந்தார்கள். குறிப்பாக திமுக கூட்டணியில் இருக்கும் திராவிட கழக தலைவர் வீரமணி யாகம் நடத்தினால் மழை வருமா? என்று கிண்டலாக கேள்வி எழுப்பினார். ஆனால் இவ்வளவு விமர்சனங்களையும் மீறி தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் தமிழக அறநிலை துறை அறிவிப்பின் படி மழை வேண்டி யாகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தபட்டன.

இதனையடுத்து தமிழக அறநிலை துறை மற்றும் இந்துக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.மேலும் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனத்த மழையும் பெய்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து மழை இல்லாமல் வறட்சி நிலவி வந்த நிலையில் இந்த மழையால் மக்களும் தமிழக விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்கள். மேலும் மழை வர யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்த வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்ட தமிழக அறநிலை துறையையும் பாராட்டி வருகின்றனர்.

அறநிலை துறையை பாராட்டும் அதே நேரத்தில் கோவில்களில் யாகம் நடத்த அறநிலைய துறை உத்தரவிட்டபோது யாகம் நடத்தினால் மழை வருமா இது ஒரு முட்டாள்தனம் என்று விமர்சனம் செய்து வந்த கி வீரமணி உள்ளிட்ட பெரியாரிய இயக்கங்களை சார்ந்தவர்களையும் அதன் கூட்டணி கட்சியான திமுகவினரையும் இப்போது சமூகவலைத்தளங்களில் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

இதில் குறிப்பாக யாகம் நடத்தினால் முதல்வர் ஆகலாம் என்ற நம்பிக்கை இருக்கும் போது யாகம் நடத்தினால் மழை பெய்யும் என்று நம்ப கூடாதா? என்றும் திமுக,பெரியார் மற்றும் திராவிட ஆதரவாளர்களை குறிவைத்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தருமபுரி மற்றும் தேனி உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு

0

தருமபுரி மற்றும் தேனி உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழகத்தில் கடந்த மாதம் 18 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்காகவும், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலுக்காகவும் மாநிலம் முழுவதும் வாக்குபதிவு நடத்தப்பட்டது. இந்த  வாக்குப்பதிவின் போது சில இடங்களிலில் முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சிகளால் புகார் எழுப்பப்பட்டது. இந்நிலையில் இவ்வாறு புகாருக்கு உள்ளான 46 வாக்குச்சாவடிகளில் நடந்த பிரச்சினை மற்றும் குளறுபடிகள் பற்றி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு விரிவான அறிக்கையை அளித்தார்.

தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அளித்த அறிக்கையின் படி புகார்கள் பதிவு செய்யப்பட்ட இந்த 46 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்ததது.எனினும் தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவு எப்படி இருக்கும் என்று அனைவருக்கும் எதிர்பார்ப்பு இருந்தது.

மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் முடிவை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் புகாருக்கு உள்ளான 13 வாக்குச்சாவடிகளில் தமிழகத்தில் மே 19-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து தருமபுரி தொகுதியில் 8 வாக்கு சாவடிகளிலும், தேனியில் 2 வாக்குசாவடிகளிலும், திருவள்ளூர், கடலூர், ஈரோடு ஆகிய தொகுதிகளில் தலா 1 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு  நடைபெறும் என தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் மறுதேர்தல் நடைபெற்றாலும் தேர்தல் முடிவை வெளியிடும் நாளில் எந்த மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கபடுகிறது.


புயல் முன்னறிவிப்பு பற்றி அன்புமணி ராமதாஸ் அறிக்கையை விமர்சித்தவருக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு ஆதாரத்துடன் தக்க பதிலடி

0

புயல் முன்னறிவிப்பு பற்றி அன்புமணி ராமதாஸ் அறிக்கையை விமர்சித்தவருக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு ஆதாரத்துடன் தக்க பதிலடி

கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழகத்தை கடும் புயல் மழை தாக்கிய போது சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வசித்த மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். அந்த சமயத்தில் புயல் வருவதை முன்கூட்டியே கணிக்க தவறிவிட்டதாகவும், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் புயல் வருவதை ஒரு வாரத்திற்கு முன்பே துல்லியமாக கணிக்க தொழில்நுட்ப வசதிகள் இருப்பதாகவும் அதை நமது அரசும் பயன்படுத்த வேண்டும் என்று மக்களின் மீதுள்ள அக்கறையால் ஒரு அறிக்கையை ஆளும் அரசுக்கு ஆலோசனையாக பாமகவின் அன்புமணி ராமதாஸ் வழங்கியிருந்தார்.

ஒரு எதிர்க்கட்சியாக குறைகளை மட்டுமே கூறாமல் பிரச்சனைகளை தீர்க்க தீர்வும் கூறிய அவரது அறிக்கையை விமர்சிக்கும் வகையில் குடிமை பணி தேர்விற்கு புவியியல் பாடத்தில் சிறப்பாக பயிற்சியளிக்கும் பிரபல ஐ ஏ எஸ் பயிற்சி மையத்தை சேர்ந்தவர் ஒருவர் முகநூலில் ஒரு பதிவை வெளியிட்டிருந்துள்ளார். அதில் அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் உள்ளது போல புயல் வருவதை துல்லியமாக கணிக்க முடியாது எனவும், இது போன்ற அறிக்கைகளை விடுவதற்கு முன்பு புவியியல் பற்றி படித்து விட்டு வரவும் என சில புவியியல் சம்பந்தமான வார்த்தைகளை குறிப்பிட்டுருந்தனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஒடிசாவை தாக்கிய பானி புயலை அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இந்தியா செலுத்திய செயற்கைகோள்களின் உதவியுடன் முன்கூட்டியே துல்லியமாக கண்டுபிடித்து பல லட்சம் கணக்கான மக்களின் உயிர்களை காப்பற்றியுள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல அதி நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டு புயல் வருவதை முன்கூட்டியே கண்டு பிடிக்க முடியும் என்பது முற்றிலும் உண்மையே என்பது தெளிவாகிறது.

புவியியல் பாடத்தில் சிறந்தவர்கள் என்று பெயர் பெற்ற அந்த பயிற்சி மையத்தை சேர்ந்தவர் தான் புத்தகத்தில் படித்ததை மட்டுமே வைத்து கொண்டு விமர்சனம் செய்தது தவறு உறுதியாகிவிட்டது. எதிர்கால ஆட்சியாளர்களை உருவாக்க பயிற்சியளிக்கும் இது போன்ற ஆசிரியர்கள் புத்தக அறிவுடன் கொஞ்சம் நவீன தொழில்நுட்ப வசதிகளை பற்றியும் அறிந்து கொள்வது சிறந்தது.

தற்போது பிரபல கட்சி தலைவரும்,தமிழக எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் போன்றவர்கள் சுதந்திர தின நாளை கூட சரியாக சொல்ல முடியாமல் தடுமாறும் நிலையில் அன்புமணி ராமதாஸ் அவர்கள் புயல் முன்னறிவிப்பு பற்றி வெளியிட்ட அறிக்கையை விமர்சித்தவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆதாரத்தை காட்டி பாமகவினர் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

மேலும் இது போன்ற சினிமா செய்திகளை படிக்க நமது News4 Tamil முகநூல் பக்கத்தை பின்தொடருங்கள்.


மக்களவை தேர்தல் முடிவிற்கு பிறகு காங்கிரஸ் திமுக கூட்டணி உடைகிறதா?

0

மக்களவை தேர்தல் முடிவிற்கு பிறகு காங்கிரஸ் திமுக கூட்டணி உடைகிறதா?

நடைபெற்று வருகின்ற மக்களவை தேர்தலில் தேசிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் தலைமையிலான இரண்டு கூட்டணிகள் எதிரெதிராக போட்டியிடுகின்றன. மேலும் சில மாநில கட்சிகள் தனியாக போட்டியிடுகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் ஆளும் தேசிய கட்சியான பாஜக,அதிமுக,பாமக மற்றும் தேமுதிக போன்ற கட்சிகளுடனும், இவர்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி திமுக,விசிக,மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் என அதன் கூட்டணி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.மேலும் அதிமுகவிலிருந்து பிரிந்த டிடிவி தினகரன் சார்பாக அமமுக, திரையுலகத்தை சேர்ந்த சீமான் சார்பாக நாம் தமிழர் கட்சி, கமலஹாசன் ஆரம்பித்த மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் தனியாக போட்டியிட்டன.

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தாலும் தேர்தல் முடிவிற்கு பிறகு திமுக இந்த கூட்டணியில் நீடிக்குமா என்று பெரும்பாலோனோருக்கு சந்தேகம் இருந்தது. இந்த சந்தேகம் வருவதற்கு காரணம் தேர்தல் அறிவிப்பிற்கு முன்பு திமுக தலைவர் தேசிய அளவில் மூன்றாவது அணி அமைக்க முயற்சிக்கும் சில மாநில கட்சி தலைவர்களை சந்தித்தது தான். குறிப்பாக தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகரராவ், மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சி செய்யும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, கர்நாடகாவில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் குமாரசாமி, கேரளாவில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பினராயி விஜயன், டெல்லியில் இருக்கும் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து மூன்றாவது அணி அமைப்பதில் தீவிரம் காட்டி வந்தனர்.

மூன்றாவது அணிக்காக மற்ற மாநில தலைவர்களுடன் திமுக தலைவருடைய சந்திப்புகள் நடந்து கொண்டிருக்கும் போதே பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க தயார் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு வந்ததும் மூன்றாவது அணிக்காக ஸ்டாலின் எடுத்த முயற்சியை கைவிட்டு ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியை உறுதி செய்தார்.இதனால் மூன்றாவது அணி என்பது வழக்கம் போலவே வெறும் பேச்சுவார்த்தையுடன்  போக ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த கட்சிகள் தனித்தே போட்டியிட்டன.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் மக்களவை தேர்தலுக்காக பிரச்சாரம் செய்யும் பொழுது ராகுல்காந்தியை பாரத பிரதமராகவும், ஸ்டாலினை முதலமைச்சராகவும் முன்னிறுத்தி தான் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர். அதேபோல காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை முதன் முதலில் பிரதமர் வேட்பாளராக அறிவித்ததும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான்.ஆனால் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் இந்த பிரச்சாரங்கள் மற்றும் நடந்து முடிந்த தேர்தல் ஒரு புறமிருக்க,தேர்தலுக்கு முன்பிலிருந்தே மூன்றாவது அணி அமைக்க முயற்சித்த சில மாநில முதலமைச்சர்கள் தற்போதும் தேர்தலுக்கு பிறகாவது மூன்றாவது அணியை அமைக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் மே 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வர உள்ள நிலையில் அன்று பெரிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்றும் இந்த கட்சிகள் நம்புவதால் மாநில கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து மூன்றாவது அணியை அமைத்து தேசிய அளவில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு தயாராகும் விதமாக தான் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ்  முதல் கட்ட பணிகளை தொடங்கி உள்ளதாகவும், அதற்காக தற்போது கேரள முதலமைச்சர் பினராய் விஜயனை சந்திக்க உள்ளதாகவும் அதை போல திமுக தலைவர் மு க ஸ்டாலினை வருகின்ற 13 ஆம் தேதி சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அவர் மம்தா பானர்ஜியை சந்தித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டணியில் ஆந்திர பிரதேசத்தின் சந்திரபாபு நாயுடு, பீகாரில் லல்லு பிரசாத் யாதவ் போன்றோரும் இணைய வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. 

ஒரு வேளை மக்களவை தேர்தல் முடிவில் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை எனில் ஏற்கனவே திட்டமிட்டபடி மாநில கட்சிகள் இணைந்து மீண்டும் ஒரு 1996 ஆம் ஆண்டு நடந்தது போல மூன்றாவது அணியின் சார்பாக தேசிய அளவில் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த மூன்றாவது அணியில் தமிழக கட்சியான திமுக இணைவது அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமே.ஏனெனில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை முதன் முதலில் பிரதமர் வேட்பாளராக அறிவித்ததே மு.க.ஸ்டாலின் தான். அதேபோல அவர் பிரசாரத்தின் போதும் பிஜேபியின் எதிர்ப்பு வாக்குகளைப் பெறுவதற்காக காங்கிரஸ் சார்பில் பிரதமர் ராகுல் காந்தி தான் என்றும் கூறி பிரச்சாரம் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களவை தேர்தல் முடிவிற்கு பிறகு காங்கிரஸ் திமுக கூட்டணி உடைகிறதா? இந்நிலையில் அவர் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி மூன்றாவது அணியில் இணைவாரா அல்லது காங்கிரசுடனே தொடர்வாரா என்பது எல்லாம் தேர்தல் முடிவு வெளியான பிறகு தான் தெரியும். இந்நிலையில் அவர் மூன்றாவது அணிக்கு முயற்சித்து வரும் சந்திரசேகர் ராவுடன் சந்திப்பதற்கு தேதி ஒதுக்கி உள்ளது தான் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சந்திப்பினால்தேர்தல் முடிவு வெளியிடுவதற்கு முன்பே எதாவது மாற்றங்கள் நிகழவும் வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கபடுகிறது.

மேலும் இது போன்ற சினிமா செய்திகளை படிக்க நமது News4 Tamil முகநூல் பக்கத்தை பின்தொடருங்கள்.

இணையத்தில் வைரலாகி வரும் சிவகார்த்திகேயன் நயன்தாரா படம்

0

இயக்குனர்  ராஜேஷ் அவர்களின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா ஆகியோர் நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘மிஸ்டர் லோக்கல்’ திரைப்படத்தின் டிரைலர் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இன்று வெளியான இந்த டிரைலர் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும்  “மிஸ்டர் லோக்கல்” படத்தை இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கதாநாயகியாக நடிக்கிறார். காதல்,காமெடி மற்றும் ஆக்சன் என அனைத்திலும் தனது திறமையை நிரூபித்து வரும்  சிவகார்த்திகேயன் இந்த படத்திலும் சிறப்பாக நடித்திருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பை போலவே இந்த படமும்  காதல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்கள். இவ்வளவு எதிர்பார்ப்புகளுக்கிடையே இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் டிரைலர் இன்று வெளியானது. ஆக்‌ஷன், காமெடி கலந்த மிஸ்டர் லோக்கல் படத்தின்  இந்த டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று சமூக வலைதளங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது. மேலும் இன்று மாலை இந்த படத்தின் ஒரு சிங்கிள் பாடலையும் வெளியிட இருப்பதாக மிஸ்டர் லோக்கல் படக்குழுவினர்  அறிவித்துள்ளார்கள்.

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இந்தப் படத்தில் மேலும் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு போன்ற முன்னணி நடிகர்களும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

மேலும் இது போன்ற சினிமா செய்திகளை படிக்க நமது News4 Tamil முகநூல் பக்கத்தை பின்தொடருங்கள்.