Thursday, September 19, 2024
Home Blog Page 4973

தேவராட்டம் சாதி வெறி படமென்றால் இயக்குனர் ரஞ்சித் எடுத்தது எல்லாம் புரட்சி படங்களா?

0

தேவராட்டம் சாதி வெறி படமென்றால் இயக்குனர் ரஞ்சித் எடுத்தது எல்லாம் புரட்சி படங்களா?

சாதி ஒழிப்பு என்ற பெயரில் தமிழக மக்களுக்குள்ளே பிரிவினைகளை தூண்டி அதன் மூலம் விளம்பரத்தை தேடி கொள்வது தமிழக அரசியல்வாதிகள்  மற்றும் தமிழ் ஊடகங்களில் பணி புரிவோர்களுக்கு பிடித்த தீராத வியாதியாக தொடர்ந்து வருகிறது. அதுவும் தமிழ் திரைப்படங்களில் எதாவது ஒரு குறிப்பிட்ட சாதியை பற்றி குறிப்பிட்டிருந்தால் எல்லா அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் விமர்சிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் திரைப்படங்களில் புகைபிடிப்பது தவறு என்று பாமகவின் அன்புமணி ராமதாஸ் பேசிய போது சினிமாவை சினிமாவாக பாருங்கள் என ஆலோசனை கூறியவர்களும் இந்த குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளும்,சமூக ஆர்வலர்கள் தான். அந்த வகையில் தான் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தேவராட்டம் படத்தின் மீதும் இந்த சாதிய விமர்சனம் வந்துள்ளது.

இந்த விமர்சனம் வைப்பவர்கள் யாரென்று பார்த்தால் பெரும்பாலோனோர் சமீபத்தில் இயக்குனர் ரஞ்சித் வெளியிட்ட காலா, பரியேரும் பெருமாள் போன்ற படங்களை பாராட்டி கருத்து தெரிவித்தவர்கள் தான். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை முறையை பற்றி படமெடுப்பதாக கூறிக்கொண்டு சாதிய அடிப்படையில் தங்களுக்கு பிடிக்காத சமூகத்தினருக்கு எதிரான கருத்துக்களை திணிப்பது, தலித் மக்கள் முன்னேற சரியான வழியை காட்டாமல் சாதி மறுப்பு திருமணங்கள் இதற்கெல்லாம் தீர்வு என்றும் அதற்கு மாற்று சமூக பெண்களை துரத்தி துரத்தி காதலித்து திருமணம் செய்வது போல காட்சியை கொண்ட  ரஞ்சித் எடுத்தவை எல்லாம் புரட்சி படங்களா?

ஒரு காலத்தில் பெண் குழந்தை என்றாலே பிறந்த உடனே கொல்லும் வழக்கத்தை மாற்றி பெண்கள் உயர்கல்வி படிக்கும் அளவிற்கும் தனியாக வெளியூர் சென்று வேலை செய்யும் அளவிற்கும் பெற்றவர்கள் பெண் பிள்ளைகளை வளர்க்க ஆரம்பித்து வருகிறார்கள். இந்நிலையில் தான் ரஞ்சித் போன்ற சினிமா இயக்குனர்கள் எடுக்கும் படங்கள் மற்றும் சாதி ஒழிப்பு பேசும் சில அரசியல்வாதிகளின் தூண்டுதலால் இவர்கள் சாதி மறுப்பு திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக விருப்பம் இல்லாத பெண்களையும் விரட்டி விரட்டி காதலிக்கிறார்கள், குறிப்பிட்ட காலத்திற்குள் அவர்களுக்கு அந்த பெண் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால் கொலை செய்வது, அந்த பெண்ணின் மீது ஆசிட் வீசுவது போன்ற கோடுரமான செயல்களையும் அந்த இளைஞர்கள் செய்ய தூண்டபடுகிறர்கள்.

தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற படிப்பு மற்றும் வேலைவாய்ப்பில் அரசு வழங்கிய சலுகையை பயன்படுத்தி அந்த மக்களை முன்னேற்ற ஆலோசனை வழங்காமல் அவர்கள் முன்னேற சாதி மட்டுமே தடை என்றும்  அதற்கு சாதி மறுப்பு திருமணம் மட்டுமே தீர்வு என்றும் தவறாக வழிகாட்டும் நபர்களுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் எடுக்கப்பட்ட படமே தேவராட்டம். இயக்குனர் ரஞ்சித் அவர் சார்ந்த சமூகத்திற்கு ஆதரவாக படம் எடுப்பது சரியென்றால் இயக்குனர் முத்தையா தான் சார்ந்த சமூக மக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பிற்காக படம் எடுப்பதும் சரியே. இயக்குனர் ரஞ்சித் எடுத்தது புரட்சி படங்கள் என்றால் முத்தையா எடுத்த தேவராட்டமும் பெண்கள் பாதுகாப்பை பற்றி பேசும் புரட்சி படமே என்றும் சமூக வலைதளங்களில் தேவராட்டம் படத்திற்கு ஆதரவான விமர்சனங்களும் பதிவாகி வருகிறது.

மேலும் இது போன்ற சினிமா செய்திகளை படிக்க நமது News4 Tamil முகநூல் பக்கத்தை பின்தொடருங்கள்.

தொடர்ந்து அராஜகம் செய்யும் விசிகவினர் அமைதி காக்கும் தமிழக அரசியல் கட்சிகள்

0

தொடர்ந்து அராஜகம் செய்யும் விசிகவினர் அமைதி காக்கும் தமிழக அரசியல் கட்சிகள்

சமீபத்தில் பொன்பரப்பி மற்றும் பொன்னமராவதி பகுதிகளில் நடந்த கலவர பிரச்சனைகள் அடங்கும் முன்பே அடுத்த கலவரத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட குச்சிப்பாளையம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தலித் இளைஞர்கள் வன்னியர் மக்கள் வாழும் பகுதிக்கு சென்று கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
தலித் மக்களின் இந்த அராஜகத்தை பற்றி அந்த பகுதி பொது மக்கள் கூறியதாவது

bஇந்த குச்சிப்பாளையம் பகுதியில் உள்ள வன்னியர் மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் திடீரென ஏற்பட்ட மோதலில் விளைவாக நடத்தப்பட்டது இல்லை என்றும் இந்தத் தாக்குதல் ஏற்கனவே திட்டமிட்டு வன்னியர்கள் மீது நடத்தப்பட்டிருக்கிறது என்றும் கூறுகிறார்கள். மேலும் குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அங்குள்ள திடலில் சம்பவம் நடந்த அன்று காலை கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்ததாகவும். அப்போது அங்கிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள மேல்கவரப்பட்டு காலனியைச் சேர்ந்த லெனின், திவாகர் என்ற இரண்டு தலித் காலனி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் குச்சிப்பாளையம் இளைஞர்களிடம் சென்று தகராறு செய்துள்ளததாகவும் அது தலித் மக்கள் அதிகமாக வாழும் பகுதி என்பதால் குச்சிப்பாளையம் இளைஞர்கள் அவர்களிடம் எதுவும் செய்யாமல் விலகி சென்றதாகவும் கூறுகிறார்கள். அப்பகுதியில் தலித்துகள் அதிகம் வசிப்பதால், அவர்கள் அடிக்கடி இது போல தகராறு செய்வது வழக்கம் என்றும் அந்த பகுதி பொது மக்கள் கூறுகின்றனர்.

தாங்கள் திட்டமிட்டது போல நடக்காததால் லெனின், திவாகர் ஆகிய இரண்டு தலித் இளைஞர்களும் ஏற்கனவே வகுக்கப்பட்ட நாடகத்தின்படி குச்சிப்பாளையம் இளைஞர்கள் தங்களைத் தாக்கி விட்டதாக தங்கள் காலனியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி சீத்தாராமன் என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி ஏற்கனவே கலவரம் ஏற்படுத்த தயாராக இருந்த அவர்கள் சிறிய சரக்குந்தில் அரிவாள், உருட்டுக்கட்டை போன்ற கொடிய ஆயுதங்களுடன் குச்சிப்பாளையம் கிராமத்திற்குள் புகுந்து அப்பகுதியில் வாழ்ந்து வந்த வன்னியர் மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தலித் காலனி பகுதியை சேர்ந்த விசிக கட்சியினர் நடத்திய இந்த தாக்குதலில் அங்கிருந்த வன்னியர் மக்களின் வீடுகள் மீது கற்களை வீசியும், உருட்டுக் கட்டைகளால் அடித்தும் அவர்களின் சொத்துக்களை சூறையாடியுள்ளனர். மேலும் அந்த விசிக கலவர கும்பல், தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெரும்பாலான இரு சக்கர வாகனங்களையும் அடித்து உடைத்துள்ளார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சியினரால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 25-க்கும் மேற்பட்ட வீடுகளும், 10-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களும் சேதமடைந்துள்ளதாகவும் அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் இந்த தாக்குதலில் 8 பேர் படுகாயமடைந்து பண்ருட்டி மருத்துவமனையில் மருத்துவத்திற்காக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

தாக்குதல் சம்பவம் நடந்த குச்சிப்பாளையம் கிராம பகுதியில் வன்னியர்கள் 350 நபர்கள் மட்டுமே வாழும் நிலையில், அதைச் சுற்றியுள்ள காலனிகளில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலித்துகள் வாழ்வதாலும், அவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் வன்முறைக்கு தூண்டி விட்டு வருவதாலும் எந்த நேரத்தில் தங்களுக்கு என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் வன்னிய மக்கள் அஞ்சி வாழ்வதாகவும் அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.

மேலும் குச்சிப்பாளையம் பகுதியில் வசிக்கும் வன்னிய மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சாதி வெறியும், அரசியல் பகையுமே முக்கிய காரணம் என்றும், தாக்குதலின் போது அந்த பகுதிக்குள் நுழைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், ‘‘ இனி மாம்பழம் சின்னத்தை உங்கள் வீடுகளில் வரைவீர்களா? இனி மாம்பழத்திற்கு வாக்களிப்பீர்களா? என்று அந்த மக்களை மிரட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர். வன்னிய சமுதாய மாணவிகள் படிப்பதற்காக பேருந்து ஏறி வெளியூர் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்றும் மிரட்டியுள்ளனர் என்றும் கூறுகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து தமிழகத்தில் உள்ள எந்த அரசியல் கட்சிகளும் கண்டு கொள்ளாமல் இருக்கும் நிலையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மட்டும் இந்த தாக்குதலை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது வன்னிய சமுதாய மக்களின் வாழ்வுரிமையை பறிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் செயல்படுவது கண்டிக்கத்தக்கதாகும். இந்நிலை தொடர தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்த வேண்டும். சேதமடைந்த பொருட்களுக்கு இழப்பீடும், காயமடைந்த மக்களுக்கு தரமான சிகிச்சையும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் இத்தாக்குதலுக்குக் காரணமானவர்கள், தூண்டியவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பொன்பரப்பியில் விடுதலை சிறுத்தைகள் தான் கலவரத்தைத் தூண்டினார்கள். ஆனால், அதற்கு பாமகவும், வன்னியர்களும் தான் காரணம் என்று பொய்யாக குற்றஞ்சாட்டிய திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் அவதூறுகளை அள்ளித் தெளித்தனர். வன்னிய மக்களை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று வெறியூட்டும் பேச்சுக்களை பேசினார்கள். வன்னியர்கள் மீது தங்களுக்கு காழ்ப்புணர்ச்சியும், பகையும் இல்லை என்றால் திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒரு குழுவை அமைத்து பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு சென்று மக்களை சந்திக்க வேண்டும்.

இது போலவே மக்களவை தேர்தலின் போது பொன்பரப்பியில் விசிக கட்சியினரால் ஆரம்பிக்கப்பட்ட கலவரத்தில் தலித் மக்களின் வீடுகளை வன்னியர்கள் தாக்கி விட்டதாக விளம்பரத்திற்காகவும் அரசியல் ஆதாயத்திற்காகவும் பேசி வந்த தமிழக அரசியல் தலைவர்களும்,விசிக மற்றும் திமுக கூட்டணி கட்சி தலைவர்களும்,சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சாதி பிரிவினையை தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பவர்களும் வன்னியர் மக்கள் பாதிக்கபட்ட இந்த கலவரத்தை பற்றி பேசுவார்களா? கலவரத்திற்கு காரணமான விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தலித் இளைஞர்களை கண்டிப்பார்களா? என்று பல்வேறு கேள்விகள் சமூக வலைத்தளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.

தோல்வியின் விரக்தியில் ஸ்டாலின் அரசியல் நாகரிகத்தை மறந்து விட்டாரா? மீண்டும் புதிய சர்ச்சை

தோல்வியின் விரக்தியில் ஸ்டாலின் அரசியல் நாகரிகத்தை மறந்து விட்டாரா? மீண்டும் புதிய சர்ச்சை

தமிழக அரசியல் சூழ்நிலை திமுக ஆட்சியமைக்க சாதகமாக இருந்தும் திமுகவின் முந்தைய ஆட்சி காலத்தில் நடைபெற்ற ஊழல் வழக்குகளால் தைரியமாக எந்த முடிவும் எடுக்க முடியாமல் தடுமாறி வரும் திமுக தலைவர் ஸ்டாலின் பொது இடங்களில் சிறு பிள்ளைகளை விட மோசமாக உளறி வந்திருக்கிறார். இதையெல்லாம் தமிழக மக்கள் மீம்ஸ் மூலம் நகைச்சுவையாகவும் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் செய்யவும் பயன்படுத்தி கொண்டனர்.

இந்நிலையில் மக்களவை தேர்தலுக்காக அதிமுக,பாமக மற்றும் பாஜக கூட்டணி அமைந்ததும் இதை சற்றும் எதிர்பார்க்காத ஸ்டாலின் பொறுமையிழந்து விரக்தியின் உச்சியில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களை நாகரிகமற்ற முறையில் விமர்சித்திருந்தார். ஸ்டாலினின் இந்த செயல் அவருடைய சொந்த கட்சியினரையே அதிர்ப்தியடைய செய்தது.

இந்த விமர்சனங்களே மறையாத நிலையில் சமீபத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியை களவாணி என்று திமுக தலைவர் ஸ்டாலின் நாகரிகமற்ற முறையில் விமர்சனம் செய்திருந்தார். இவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவின் நாராயணன் திமுக தலைவர் ஸ்டாலினை புறம்போக்கு என்று விமர்சனம் செய்திருந்தார். கட்சி தொண்டர்களுக்கு நாகரிக அரசியலை கற்று கொடுக்க வேண்டிய தலைவர்களே தரம் தாழ்ந்து ஒருவரை ஒருவர் நாகரிகமற்ற வார்த்தைகளால் விமர்சனம் செய்து கொண்டிருக்க இதை பார்த்த பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி தொண்டர்கள் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து #புறம்போக்குஸ்டாலின் என்ற ஹேஷ் டேக்கில் சமூக வலைத்தளங்களில் தங்களது விமர்சனங்களை பதிவு செய்தது இந்திய அளவில் டிரெண்டிங் ஆகி விட்டது.

திமுக தலைவர் ஸ்டாலின் செய்தது அவருக்கே எதிராக திரும்பி விட்டது. இனியாவது திமுக தலைவர் ஸ்டாலின் அரசியல் நாகரிகத்தை கடைபிடிப்பாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்திய அளவில் ஒலித்த தமிழர்களின் குரல் #தமிழகவேலைதமிழருக்கே ட்விட்டரில் டிரெண்டிங்

0

இந்திய அளவில் ஒலித்த தமிழர்களின் குரல் #தமிழகவேலைதமிழருக்கே ட்விட்டரில் டிரெண்டிங்

தமிழக வேலையை தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்று தமிழ் தேசிய ஆர்வலர்கள் இன்று சமூக வலைத்தளங்களில் #தமிழகவேலைதமிழருக்கே என்ற ஹேஷ் டேக்கில் நடத்திய போராட்டம் இந்திய அளவில் டிரெண்டிங் ஆகி வருகிறது.இத்துடன் #TamilnaduJobsForTamils என்ற ஹேஷ் டேக்கும் இந்திய அளவில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

தொடர்ந்து பல வருடங்களாக தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் தமிழக மக்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் வட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கே அதிக அளவில் வேலை வாய்ப்பை வழங்கி வருகிறார்கள். தமிழக அரசியல் தலைவர்களும்,தமிழ் தேசிய ஆர்வலர்களும் இதை எதிர்த்து குரல் கொடுத்து வந்தனர்.இந்நிலையில் திருச்சி பொன்மலையில் உள்ள ரயில்வே பணிமனையில் வட மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு அதிக அளவில் பணி நியமனம் வழங்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் வெளியான பழகுனர் (அப்ரண்டீஸ்) பணியிடத்திற்காக ஒரே சமயத்தில் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் நியமிக்கப்பட்டு உள்ளார்கள். இங்கு தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு நிறுவனங்களின் இந்த செயல்பாட்டை கண்டித்து பொன்மலை ரயில்வே பணிமனையில் நியமிக்கப்பட்ட வடமாநில பணியாளர்களை வெளியேற்றி விட்டு, தமிழர்களுக்கு வேலை வழங்கவேண்டும் என்றும். மத்திய அரசு பணிகளில் மற்ற மாநிலங்களானஆந்திரா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் அம்மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கே வேலை வழங்கும் சட்டம் உள்ளதை போல், தமிழர் வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் தமிழகத்திலும் சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு இன்று தமிழ் தேசிய ஆர்வலர்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதே நேரத்தில் முகநூல் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் தமிழ் தேசிய ஆர்வலர்களும்,தமிழக அரசியல் ஆர்வலர்களும் #தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils என்ற தலைப்பிலும் தங்களது கருத்துக்களை போராட்டத்திற்கு ஆதரவாக பதிவிட்டு வந்தனர். இவ்வாறு இவர்கள் பதிவிட்டது இந்திய அளவில் தற்போது டிரெண்டிங் ஆகி வருகிறது.

பொன்பரப்பி கலவரத்திற்கான திமுகவின் சூழ்ச்சியை ஸ்டாலின் பழமொழியை வைத்து கலாய்க்கும் சமூக ஆர்வலர்

0

பொன்பரப்பி கலவரத்திற்கான திமுகவின் சூழ்ச்சியை ஸ்டாலின் பழமொழியை வைத்து கலாய்க்கும் சமூக ஆர்வலர்

பொன்பரப்பி கலவரத்தை கண்டித்து வன்னிய மக்களுக்கு எதிராக திமுகவின் கூட்டணி கட்சிகள் நடத்திய கண்டன கூட்டத்தில் பேராயர் எஸ்ரா சற்குணம் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் ஆகியோர் பாமக நிறுவனர் மற்றும் வன்னியர் மக்களை விமர்சித்து வன்முறையை தூண்டும் வகையில் பேசியிருந்தனர். இதை கண்டித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் திமுக கூட்டணி தலைவர்கள் பேசாததை குறிப்பிட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதை கண்டிக்கும் வகையிலும் பொன்பரப்பி கலவரத்தில் திமுகவின் சூழ்ச்சி அரசியலை வெளி உலகிற்கு எடுத்து காட்டும் வகையிலும் சமூக ஆர்வலர் ஒருவர் முகநூலில் பதிவிட்டுள்ளதாவது.

பொன்பரப்பியில் ஒரு சாதாரண பிரச்சனையை சாதிக்கலவரமாக உங்கள் இருபத்தி சொச்சம் ஊடகங்கள் மூலமாக திசைமாற்றி விட்டீர்கள். உங்கள் கூட்டணி கட்சியினரால் பாட்டிலால் வயிற்றில் குத்தப்பட்டு குற்றுயிராக இருப்பவருக்கோ, கொலைவெறி தாக்குதலில் அடிபட்ட மாற்றுதிறனாளிக்கோ இதுவரை ஒற்றை ஆறுதல் வார்த்தை கூட கூற மனமில்லாத உங்களுக்கு வேண்டுகோள் வைப்பது ‘விழலுக்கிறைத்த நீர்’ தான்.

அதிலும் எல்லா வன்முறைக்கும், சமுதாய பதற்ற நிலைக்கும் காரணகர்த்தாவாக நீங்களும் உங்கள் கூட்டணி கட்சி விசிகவும் இருந்துவிட்டு பாதிக்கப்பட்ட நபர்களுக்கே ‘வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ’ என்று ஆலோசனை சொல்கிறீர்கள்.

பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டவது உங்களுக்கு கை வந்த கலை, “ஏனென்றால் நீங்கள் கலைஞரின் மகன்”. ஆனால் உண்மையை ஊருக்கு சொல்ல வேண்டும் இது எங்கள் கடமை.

முத்தரசன் நக்சலைட்டுகளை போல எங்களை சுட்டுத்தள்ள வேண்டும், எங்களை தடை செய்ய வேண்டும் என்று பேசியதை நீங்கள் அறிவீர். பேச சொல்லியதே நீங்கள் தான் என்பது என் நம்பிக்கை.

சற்குணம் என்கிற நபர் எங்களை மரம்வெட்டி என்றும், பாறாங்கற்களை உருட்டி போட்டு அனைவருக்கும் இடையூறு செய்தவர்கள் என்றும், உங்கள் தந்தை திருடப்பார்த்து ஏமாந்து போன பெருமைமிகு “108 சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு” வாங்கித்தந்த எங்கள் மரு.அய்யாவை ‘நீங்கள் எதில் பெரிய அய்யா’ என்றும், இன்று நீங்கள் திருடப்பார்த்து அவமானம் மட்டுமே அடைந்த பெருமைமிகு “108 ஆம்புலன்ஸ் திட்டத்தை” இந்தியாவுக்கே அளித்த மரு.அன்புமணியை ‘நீங்க எதில் சின்ன அய்யா’ என்றும் கேட்டுள்ளார்.

சற்குணம் பேராயரா? தன்னை சிலுவையில் அறைந்தோர்க்கும் இறைவனாகிய தந்தையிடம் மன்னிப்பு வேண்டிய இயேசுபிரானை பின்பற்றும் ஒரு நல்ல சாமானிய கிறிஸ்துவனாக கூட இருக்க முடியாது. பிறகு எப்படி இவர் பேராயராக இருக்க முடியும்? சற்குணம் பேசிய கேவலமான சாதிவெறி பேச்சை கேட்ட நல்ல கிறித்துவர் யாரும் சற்குணத்தை ஒரு கிறித்துவனாக ஏற்க மாட்டார்கள்.

எப்படி நீங்கள் திமுக என்கிற மிகப்பெரிய வெகுமக்கள் இயக்கத்தில் தகுதியற்ற தலைவராக இருக்கிறீர்களோ, அதுபோலவே எஸ்ரா சற்குணமும் உன்னதமான கிறித்துவத்தில் ஒரு சாதிவெறி ஏறிய பேராயராக இருக்கிறார்.

திரு.ஸ்டாலின் அவர்களே, நீங்கள் அனைத்து வன்முறைகளுக்கான காரணங்களையும் அறிவீர்கள். எனவே உங்களுக்கு வேண்டுகோள் வைக்கப்போவதில்லை. சில ஆலோசனைகள் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

உங்களுக்கு பழமொழி பிடிக்கும் என்பதால் சொல்கிறேன் – கிராமத்திலே ஒரு பழமொழி சொல்வார்கள் – ‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் மட்டும்’ என்று. ஆக அதுபோல உங்கள் தந்தை ரயில் வராத தண்டவாளத்தில் தலைவைத்து ஊரை ஏமாற்றினார், விசாரணை அதிகாரிகளே வியந்து பாராட்டும் அளவுக்கு ‘விஞ்ஞான ஊழல்’ செய்தார். தனியார் ஊடகங்கள் மூலம் எங்களை வன்முறையாளர் என்று வர்ணம் பூசினார். ஆனால் அந்த பொய்கள் எல்லாம் இன்று அம்பலப்பட்டு நிற்கின்றன.

சமூக ஊடகத்தில் உண்மைகள் காணொளிகளாகவும், புகைப்படங்களாகவும் காற்றைவிட, ஒலியை விட வேகமாக பரவும் இந்த காலத்திலும் ‘நம்பியார் காலத்து’ கலகம் மூட்டும் உத்திகளை நீங்கள் பயன்படுத்துவது நகைப்புக்கு உரியது. ஊடகங்களில் எந்த செய்தி வரவேண்டும் என்பதையே தீர்மானிக்கும் சமூக ஊடக தலைமுறை இது. ஆம் இப்போதெல்லாம் ‘யானை வரும் முன்னே மணியோசை வருகிறது பின்னே’

பொன்னமராவதியில் மிகப்பெரிய சாதிக்கலவரம் வந்தபோதும் அதை மூடி மறைத்து, பொன்பரப்பியில் நடந்த தேர்தல் கால மோதலை ஊதி பெருக்கி தமிழகத்தில் வன்முறையின் மூலகாரணமாக இருப்பது திமுக என்பது ஊர் அறிந்த ரகசியம். இந்த ‘முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து’ நீங்கள் விடும் அறிக்கையை பார்த்தால் மீண்டும் நினைவுக்கு வருவது உங்கள் பழமொழி தான் ‘கிராமத்திலே ஒரு பழமொழி சொல்வாங்க. பொய்யை சொன்னாலும் பொருந்த சொல்லுங்கடா, போக்கத்த பசங்களா’ என்று.

தன் தந்தை போல பேச்சு திறமையோ, பாமக போல சாதனை பட்டியலோ, தொலைநோக்கு திட்டங்களோ, அன்புமணி போன்ற ஆளுமையோ, பேச்சாற்றலோ, திறமையான அடிமட்டத்தில் இருந்து முன்னேறி வந்த வேட்பாளர்களோ, அனுசரணையான கூட்டணியோ இல்லாமல் – சுருக்கமாக சொன்னால் “போக்கத்த ஆளாக” தனியே நின்று புலம்பும் உங்களை பார்த்து கல்லறையில் உறங்கும் உங்கள் தந்தையும் கண்ணீர் விடுவார்.

தனியார் ஊடகங்களும், பண முதலைகளும், ஊழல்வாதிகளும், விசிக, கம்யூனிஸ்ட் போன்ற சாதிவெறி வன்முறையாளர்களும் துணை இருக்கும் தைரியத்தில் விஷத்தை கக்க வேண்டாம் ஸ்டாலின் அவர்களே. திமுக என்பது கட்சி அல்ல. ஊழல் காசை மையமாக வைத்து நடக்கும் பன்னாட்டு நிறுவனம். உங்கள் கூட்டம் கூலிக்கு மாரடிக்கும் ‘அற்றகுளத்து அறுநீர் பறவைக் கூட்டம்’. திமுகவில் காசு காலியானால் காக்கை கூட்டம் பறந்து வேறு இடம் போய்விடும். ஆனால் பாமக என்பது வெறும் கட்சி அல்ல. இது குடும்பம். எங்கள் குடும்பத்தலைவர் மரு.அய்யாவின் பின்னால் சாகும் வரை ஒரு பைசா கூட பலன் எதிர்பார்க்காமல் உயிரைக்கூட தரும் கூட்டம்.

உங்கள் அநியாயத்தை யார் பார்க்காவிட்டால் என்ன, நாங்கள் பார்க்கிறோம். யார் கேட்காவிட்டால் என்ன? நாங்கள் கேட்கிறோம். நூற்றாண்டுகளை தாண்டிய வறுமை போராட்டத்தில் இருந்து, 21 உயிர்களை தியாகம் செய்து இட ஒதுக்கீடு பெற்று, 108 சாதிகளோடு சேர்த்து எங்களையும் படுகுழியில் இருந்து மேலே உயர்த்திய எங்கள் மரு.அய்யாவின் தியாகத்தால், போராட்டத்தால் வாழ்வு பெற்று, உரிமை பெற்று டாக்டர்களாகவும், பொறியாளர்களாகவும், கல்வியாளராகவும், தொழிலதிபர்களாகவும் லட்சக்கணக்கில் உலகெங்கும் வாழும் பாட்டாளிகள் இருக்கிறோம். எங்கள் அய்யாவை அவமானப்படுத்திய அத்தனை பேரையும் அவர் காலில் விழவைத்தது எங்கள் வரலாறு.

ஏற்கனவே செய்த தவறுகளுக்கு 2016 சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்து கொள்ளையடிக்க அதிகாரம் இல்லாமல் கையை பிசைந்து நிற்கிறீர்கள். உங்கள் வெறுப்பு பேச்சுகள் மூலம் நிரந்தரமாக நீங்கள் எந்த பதவிக்கும் வராமல், திமுக என்கிற இயக்கம் உங்கள் கண் முன்னே வேரோடும், வேரடி மண்ணோடும் அழிந்து சாம்பாலவதை நீங்கள் பார்ப்பீர்கள். எனவே உங்கள் முதல்வர் நாற்காலி கனவு “சீனி சக்கரை சித்தப்பா, துண்டு சீட்டில் எழுதி நக்கப்பா” என்றே முடியும்.

உங்கள் தந்தை எங்களுக்கு சாதிவெறி பட்டம் கட்டியதை கவனித்த நீங்கள், தன் கட்சிக்குள் இருந்த வன்னியர்களை எங்களுக்கு எதிரான துருப்பு சீட்டாக எப்போதும் அரவணைத்தே சென்றார். அதை நீங்கள் கவனிக்கவில்லை. கடைமட்ட திமுக தொண்டன் வரை பொன்பரப்பியின் உண்மையும், உங்கள் நாடகமும் சென்று சேர்ந்துவிட்டது. இனி வரும் ஒவ்வொரு தேர்தலிலும் வட மாவட்டங்களில் திமுக மண்ணை கவ்வும். அப்போது புரியும் திமுக என்கிற யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்டதை.

இறுதியாக உங்கள் தந்தையின் அன்புக்குரிய சிலப்பதிகாரத்தில் இருந்து ஒரு வரி, உங்கள் தந்தையே தனது கரகரத்த குரலில் உங்களுக்கு கூறுவதாக படித்துப்பாருங்கள் ஸ்டாலின் –

“அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும்” என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதில் கடந்த காலங்களில் ஸ்டாலின் உளறியதை வைத்தே அவருக்கு விமர்சனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

எதிர்க்கட்சி தலைவர்களை தொடர்ந்து தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சிக்கும் ஸ்டாலின் விரக்தியில் திமுக தொண்டர்கள்

0

எதிர்க்கட்சி தலைவர்களை தொடர்ந்து தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சிக்கும் ஸ்டாலின் விரக்தியில் திமுக தொண்டர்கள்

மத்தியில் ஆளும் பாஜக அரசின் 5 ஆண்டு கால ஆட்சி நிறைவடைவதையடுத்து மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஏப்ரல் மாதத்தில் நாடு முழுவதும் பல கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் தேதி அறிவித்தது முதல் தமிழக அரசியல் களம் மிகவும் தீவிரமாக செயல்பட ஆரம்பித்தது.இதில் அனைவரின் எதிர்பார்ப்பையும் மீறி அதிமுக,பாமக மற்றும் பாஜக கூட்டணி அமைந்தது தமிழக அரசியலை திசை திருப்பியது.அதுவரை நம்பிக்கையாக இருந்த திமுக காங்கிரஸ் உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகளுக்கும்,அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற தினகரன் அணியினருக்கும் பாமகவின் இந்த கூட்டணி முடிவு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது முக்கியமானது.

கடந்த தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு 5 சதவீத வாக்குகளை பெற்று தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுகவிற்கு அடுத்த பெரிய கட்சி பாமக தான் என்பதை நிரூபித்தது. இந்த நிலையில் வழக்கம் போல அந்த கட்சி தனித்து போட்டியிட்டால் அதிமுகவில் உள்ள உட்கட்சி பிரச்னையால் 40 தொகுதிகளிலும் சுலபமாக வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் திமுக தலைவர் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தார்.

திடீரென்று அதிமுக,பாமக மற்றும் பாஜக கூட்டணி அமைந்ததும் அதை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் தான் ஒரு முக்கிய கட்சியின் தலைவர் என்பதையும் மறந்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களை தரக்குறைவான வார்த்தைகளை கொண்டு விமர்சனம் செய்திருந்தார். ஏற்கனவே பொது மேடைகளில் தொடர்ந்து உளறி கொண்டிருந்த ஸ்டாலினின் மருத்துவர் ராமதாஸ் மீதான இந்த விமர்சனத்தை கட்சி பாகுபடின்றி அனைவரும் கண்டித்தனர்.முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி அளவிற்கு ஸ்டாலினுக்கு சகிப்பு தன்மையோ, கட்சியை வழி நடத்தும் திறமையோ இல்லை என அனைவரும் விமர்சனம் செய்து வந்தனர்.

இதன் பிறகும் தன்னை மாற்றி கொள்ளாமல் விரக்தியில் ஆளும் கட்சியின் கூட்டணி தலைவர்களை தொடர்ந்து தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்து வந்தார். அந்த வகையில் தற்போது பாஜகவை சேர்ந்த ஹெச் ராஜா அவர்களையும் விமர்சித்துள்ளார். சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் பா சிதம்பரம் அவர்களின் மகன் கார்த்தி சிதம்பரம் அவர்களை ஆதரித்தும்,மானாமதுரை சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்தும்  திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அங்கு அவர் பேசியதாவது, கார்த்தி சிதம்பரத்தை வாரிசு அடிப்படையில் நிறுத்தியதாக ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள் ஆனால் கார்த்தி சிதம்பரம் தகுதியின் அடிப்படையில் தான் நிறுத்தபட்டுள்ளார். ஆனால் அவரை எதிர்த்து போட்டியிடும் ஹெச் ராஜாவை நான் வேட்பாளராக பார்க்கவில்லை. தமிழகத்தில் ஏன் இந்தியாவிலேயே இதுபோன்று ஒரு கடைந்தெடுத்த அயோக்கிய அரசியல்வாதியை இதுவரையில் நாம் பார்த்திருக்க முடியாது.

இனிமேலும் பார்க்கவும் முடியாது. தமிழ் சமூகத்தின் அமைதியையும், நிம்மதியையும் கெடுக்கும்  வகையில் பேசுவது, வாய்க்கு வருவதையெல்லாம் உளறுவது, பொய் பேசுவது, அவதூறு கிளப்புவது, வன்முறையைத் தூண்டுவது போன்ற அராஜக செயல்களை மட்டும் தான் இவர் தொழிலாகச் செய்து வருகிறார். 

நான் பாஜகவில் இருக்கும் எல்லோரையும் குறை சொல்ல மாட்டேன். எனக்கு அவர்களின் கொள்கையில் பிடிப்பில்லாமல், ஏற்று கொள்ளாமல் இருக்கலாம். கொள்கை ரீதியாக, அரசியல் ரீதியாக, பண்பாட்டு ரீதியாக வாதம் செய்வது என்பது ஜனநாயக உரிமை. ஆனால், ஹெச்.ராஜா அப்படி இல்லை. கொச்சையாக பேசி அசிங்கத்தை ஏற்படுத்த கூடியவர்.  இது போன்ற ஒருவர் எம்பியானால் அது நாடாளுமன்றத்துக்கே அவமானம். இந்த சிவகங்கை தொகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கு ஏற்படக்கூடிய அவமானம்’ என்று ஆவேசம் பொங்க திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார். 

பாஜகவை சேர்ந்த ஹெச் ராஜா பல நேரங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியிருந்தாலும் அது தனிபட்ட வகையிலோ அல்லது எந்த ஒரு சமுதயத்தினருக்குமோ பாதிப்பாக அமைந்ததில்லை. மேலும் அவர் சில நேரங்களில் தமிழக அரசியல்வாதிகள் கண்டிக்க மறுக்கும் திருமாவளவன் அவர்களின் ஒரு குறிப்பிட்ட சாதி மற்றும் மதத்திற்கு எதிரான பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் சமீபத்தில் முஸ்லீம் மதவாதிகளால் கொல்லப்பட்ட பாமக நிர்வாகியின் குடும்பத்திற்கு பெருமளவு பணவுதவியும் செய்துள்ளார்.ஆனால் சாதி மதமற்ற அரசியலை செய்வதாக கூறி கொண்டு ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு ஆதரவாகவும் இந்து மதத்திற்கு எதிராகவும் திமுக தலைவர் செயல்பட்டு வருகிறார். அதே போல திருமாவளவன் போன்றவர்களை வைத்து கொண்டு இரு பிரிவை சேர்ந்த மக்களை தொடர்ந்து பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து வருகிறார் என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

அரசியலில் இதுவரை திமுக தமிழகத்தை ஆண்ட போது அல்லது மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்த போது மக்களுக்காக என்ன செய்தது. வெற்றி பெற்றால் இனிமேல் என்ன செய்ய போகிறது என்பதை பற்றி மக்களிடம் பேசாமல் விமர்சனம் என்ற பெயரில் விரக்தியினால் ஆளுங்கட்சியின் கூட்டணி தலைவர்களை தொடர்ந்து ஸ்டாலின் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்து வருவது தொடர்ந்து விமர்சனத்துள்ளாகி வருகிறது.

முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி உட்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் வளர்த்த திமுகவை ஸ்டாலின் குறுகிய காலத்தில் தன்னுடைய இயலமையால் அழித்து விடுவாரோ என்று அக்கட்சியினரே புலம்பி வருகின்றனர்.

மத்திய சென்னையில் மரண அடி வாங்க போகும் திமுக சத்தமில்லாமல் சாதித்து வரும் பாமகவின் சாம் பால்

0

மத்திய சென்னையில் மரண அடி வாங்க போகும் திமுக சத்தமில்லாமல் சாதித்து வரும் பாமகவின் சாம் பால்

வருகின்ற மக்களவை தேர்தலில் திமுக,காங்கிரஸ்,விசிக மற்றும் இடதுசாரிகள் ஒரு அணியாகவும்,அதிமுக,பாமக,பாஜக மற்றும் தேமுதிக மறு அணியாகவும் போட்டியிடவுள்ளன. மேலும் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஏற்பட்ட சாதகமான சூழ்நிலையை பயன்படுத்தி கட்சி ஆரம்பித்த கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் அதிமுகவிலிருந்து பிரிந்து சசிகலா மற்றும் தினகரன் ஆதரவாளர்களால் உருவான அமமுக,திரைப்பட இயக்குனர் சீமானின் நாம் தமிழர் கட்சி போன்றவை தனித்து களம் காண்கின்றன.

இரு கூட்டணிகளிலும் தொகுதி பங்கீடு முடிந்து ஒவ்வொரு தொகுதியிலும் தங்கள் கட்சிக்கான வேட்பாளர்களையும் அறிவித்து விட்டார்கள். அந்த வகையில் மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பாக ஏற்கனவே போட்டியிட்ட கருணாநிதி அவர்களின் குடும்ப உறவான தயாநிதி மாறன் அவர்களும்,அதிமுக கூட்டணியில் பாமக சார்பாக தொழிலதிபர் முனைவர் சாம் பால் அவர்களும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்கள்.

மேலும் அமமுக கூட்டணியின் சார்பாக அதன் கூட்டணி கட்சியான எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவியை வேட்பாளராக அறிவித்துள்ளார்கள்,மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சியும் தனித்தனியாக தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

மத்திய சென்னையை பொறுத்தவரை திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான தயாநிதி மாறனுக்கும்,பாமகவின் வேட்பாளர் சாம் பாலுக்கும் இடையே தான் போட்டி என பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்தில் வெளியான தகவலின் படி அனைவரின் எதிர்பார்ப்புகளையும் மீறி மத்திய சென்னை தொகுதியில் பாமக வேட்பாளர் சாம் பால் அவர்களுக்கு தயாநிதி மாறனை விட பெருமளவு செல்வாக்கு கூடியுள்ளதாக தெரிகிறது.

அதற்கு அடுத்த இடத்தில் அமமுக கூட்டணியின் சார்பாக போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி இரண்டாம் இடத்திலும் உள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.திமுகவின் வேட்பாளர் தயாநிதி மாறன் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.இது திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவின் வேட்பாளரான தயாநிதி மாறன் ஏற்கனவே அமைச்சராக இருந்தாலும் தொகுதி மக்களிடமோ,சொந்த கட்சி தொண்டர்களிடமோ நெருங்கி பழகியதில்லை என்றும், அவருக்காக வேலை செய்யும் கட்சியினருக்கும் நிர்வாகிகளுக்கும் ஒரு பைசா கூட செலவு செய்வதில்லை என்றும் சொந்த கட்சியினரே குற்றம் சாட்டி வருகின்றனர்.மேலும் தான் ஒரு தொழிலதிபர் என்ற கர்வத்துடன் தொகுதி மக்களை கூட கடந்த காலங்களில் சந்தித்ததில்லை என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர்.திமுகவின் குடும்ப வாரிசு என்ற ஒரே காரணத்திற்காக இந்த தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று திமுக நிர்வாகிகளே குற்றம் சாட்டுகின்றனர்.

அதிமுகவுடன் கூட்டணி அமைத்திலிருந்து பாமக மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கபட்டிருந்தாலும் தனக்கு கிடைத்த 7 தொகுதிகளிலும் மிகவும் கவனமாக செயல்பட்டு சரியான வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பாமக ஒரு குறிப்பிட்ட சாதிக்கான கட்சி என்று பல்வேறு நேரங்களில் விமர்சனம் வைக்கபட்டிருந்தாலும் அதை பாமக தொடர்ந்து மறுத்து வந்ததது.அந்த வகையில் தற்போது பாமக கூறியது உண்மை என்பதை தாங்கள் நிறுத்திய வேட்பாளர்களில் அனைத்து சமூகத்தினருக்கும் சமமான வாய்ப்பை வழங்கியது மூலம் நிரூபித்துள்ளது.

பாமக சார்பாக மத்திய சென்னையில் போட்டியிடும் சாம் பால் அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில தலைவராக உள்ளார். மேலும் அவர் தனது கடின உழைப்பால் பல்வேறு தொழில் நிறுவனங்களை சிறப்பாக நடத்தி வருகிறார். பாண்டிச்சேரியில் தான் நடத்தி வரும் கல்வி நிறுவனங்களில் ஏழை மக்களுக்கு நிறைய சலுகைகளை வழங்கி வருகிறார். பிரபல தொழிலதிபராக இருந்தாலும் எந்த நேரத்திலும் மக்கள் அவரை சந்திக்கும் அளவிற்கு எளிமையாக உள்ளார் என்றும் மக்கள் கருதுகின்றனர்.அது மட்டுமல்லாமல் நன்கு படித்தவர்,ப பல்வேறு மக்கள் நலப்பணிகளில் தன்னார்வளராக கலந்து கொண்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் மத்திய சென்னை தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதல் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில தலைவராக இருப்பதால் முகநூல் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் மக்களின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் உரிய நேரத்தில் சரியான முறையில் விளக்கமளித்து வருகிறார். இது கட்சியியையும் தாண்டி இளம் தலைமுறையினரிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தொகுதி பக்கமே திரும்பி பார்க்காத தயாநிதி மாறன் எப்படி மத்திய சென்னை தொகுதியை சமாளிக்க போகிறார் என்று திமுகவினரே கலக்கத்தில் உள்ளனர்.எது எப்படியோ இந்த மக்களவை தேர்தலில் திமுகவின் செல்வாக்கு மிகுந்த பகுதியாக கருதப்படும் சென்னையை சேர்ந்த மத்திய சென்னை தொகுதியில் அக்கட்சிக்கு மரண அடி காத்து கொண்டிருக்கிறது என்று அக்கட்சியினரே புலம்பி வருகின்றனர்.

தமிழ் நடிகைகள் தூது விட்ட பிறகும் தொடர்ந்து கெத்து காட்டும் நடிகர் சந்தானம்

0

தமிழ் நடிகைகள் தூது விட்ட பிறகும் தொடர்ந்து கெத்து காட்டும் நடிகர் சந்தானம்

விஜய் தொலைக்காட்சியின் லொள்ளு சபா நிகழ்ச்சியில் பிரபலமானதை தொடர்ந்து தமிழ் திரைத்துறையில் நகைச்சுவை நடிகராக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கினார் நடிகர் சந்தானம். 2004 ஆம் ஆண்டு வெளியான மன்மதன் படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி அதைத்தொடர்ந்து பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராகவும் பல முன்னணி நடிகர்களுக்கு நண்பனாக துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார்.

இவ்வாறு தமிழ் திரைத்துறையில் சிறந்த நகைச்சுவை நடிகராக தனது திறமையை நிரூபித்த சந்தானம் “ கண்ணா லட்டு தின்ன ஆசையா “ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகராக அறிமுகம் ஆனார். அந்த படம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,இங்க என்ன சொல்லுது,இனிமே இப்படி தான், சக்கப்போடு போடு ராஜா, தில்லுக்கு துட்டு மற்றும் சமீபத்தில் வெளியான தில்லுக்கு துட்டு 2 ஆம் பாகம் படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் நடிகர் சந்தானம் நடிப்பில் மன்னவன் வந்தானடி,சர்வர் சுந்தரம் போன்ற படங்களும் விரைவில் திரைக்கு வரவுள்ளன.

இவ்வாறு நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானம் நடிகராக அறிமுகம் ஆகும் போது தமிழ் திரையுலக நடிகைகள் யாரும் இவருடன் நடிக்க முன்வரவில்லை. இதனால் இனிமேல் நான் நடிக்கும் படங்களில் வேற்று மொழி நடிகைகள் தான் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்த நடிகர் சந்தானம் இன்று வரை அதை கடைபிடித்து வருகிறார். இதுவரை அவர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த படங்கள் அனைத்திலும் இந்தி மற்றும் தெலுங்கு மொழியை சேர்ந்த வெளி மாநில நடிகைகளே நடித்திருக்கிறார்கள்.

தற்போது சந்தானம் கதாநாயகனாக நடித்து வெளிவந்த படங்கள் அனைத்தும் வெற்றியை கொடுத்ததால் அவரது ஹீரோ மார்க்கெட் உயர்ந்துள்ளது. இவ்வாறு நடிகர் சந்தானத்தின் மார்க்கெட் உயர்ந்ததால் ஏற்கனவே புறக்கணித்த தமிழ் நடிகைகள் இவருடன் இணைந்து நடிக்க அழைப்பு விடுத்திருக்கின்றனர். ஆனாலும் பழையதை மறக்காத நடிகர் சந்தானம் சற்றும் இறங்கி வராமல் ஏற்கனவே பல இந்தி நடிகைகள் தன்னுடைய படத்தில் நடிக்க காத்திருப்பதால் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த பிறகு உங்களுடன் நடிப்பதை பற்றி யோசிக்கிறேன் அதுவரைக்கும் காத்திருங்கள் என்று கெத்தாக கூறியுள்ளாராம்.    

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள்|தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

சரக்கு மிடுக்கு இருப்பதாக பேசிய திருமாவளவனை கூட்டணியில் வைத்து கொண்டு பொள்ளாச்சி விவகாரத்தை பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி இருக்கிறதா?

0

சரக்கு மிடுக்கு இருப்பதாக பேசிய திருமாவளவனை கூட்டணியில் வைத்து கொண்டு பொள்ளாச்சி விவகாரத்தை பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி இருக்கிறதா?

சரக்கு மிடுக்கு இருப்பதால் தான் மாற்று சமுதாய பெண்கள் தங்களை தேடி வருகிறார்கள் என்று பெண்களுக்கு எதிராக அருவருக்கத்தக்க வார்த்தைகளை கொண்டு திட்டமிட்டு காதல் செய்யும் நபர்களுக்காக ஆதரவாக பேசிய திருமாவளவனுடன் கூட்டணி வைத்து கொண்டு பொள்ளாச்சி விவகாரத்தை பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் பேசலாமா என்று பல்வேறு தரப்பினரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

கடந்த காலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களது கட்சி கூட்டத்தில் பேசும் போது மாற்று கட்சியை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் பெண்களை பற்றியும் காதலை பற்றியும் அருவருக்கத்தக்க வார்த்தைகளை கொண்டு பேசியிருந்தார். பொது வாழ்க்கையில் உள்ள ஒரு நபர் தனது கட்சிகாரர்களை நல்வழிபடுத்துவதை விடுத்து தனது அரசியல் சுயலாபத்திற்காக தவறான கருத்துக்களை திணித்து அந்த இளைஞர்களை தவறான பாதையில் வழிநடத்தி செல்கிறார் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் விமர்சனம் செய்திருந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் கூட அந்த கட்சியை சேர்ந்த சில இளைஞர்கள் அம்பேத்கர் விழா ஒன்றில் கலந்து கொண்டு ‘காதலிப்போம் காதலிப்போம் வன்னியர் பெண்ணை காதலிப்போம் என்றும், திருமணம் செய்வோம் திருமணம் செய்வோம் கவுண்டர் பெண்ணை திருமணம் செய்வோம் என்றும், கட்டியணைப்போம் கட்டியணைப்போம் முதலியார் பெண்ணை கட்டியணைப்போம் என்றும் கோஷமிட அதை மற்ற சில வாலிபர்கள் வழிமொழியும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியானது. இந்த வீடியோவுக்கு கண்டனம் தெரிவித்த பலர் இதுதான் ஜாதியை ஒழிக்கும் லட்சணமா? என்று கேள்வி எழுப்பினர். மேலும் அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

இவ்வாறு பெண்களுக்கு எதிராகவும் மாற்று சமுதாயங்களுக்கு எதிராகவும் பேசி வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் சாதி மதமற்ற அரசியலை முன்னெடுத்து செல்வதாக கூறும் திமுக கூட்டணி வைத்தது மட்டுமல்லாமல் பொள்ளாச்சியில் காதலிப்பதாக பெண்களை ஏமாற்றி வன்புணர்வு செய்தவர்களை பற்றி பேசுவதும் அந்த பெண்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக காட்டி கொள்வதும் முரண்பாடக உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக காட்டி கொண்டு தேர்தலில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறதா? என்ற  சந்தேகத்தையும் எழுப்புகின்றனர்.

பெண்களின் உணர்வுகளை கொச்சை படுத்திய திருமாவளவனுடன் கூட்டணி மற்றும் தனது சொந்த கட்சியை சேர்ந்த பெண்ணின் இடுப்பை கிள்ளியது, பியூட்டி பார்லரில் உள்ள பெண்ணை அடித்து துன்புறுத்தியது என பெண்களுக்கு எதிராக திமுக தொண்டர்கள் செய்த அட்டூழியங்கள் நிறைய இருக்க தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக பேசுவது அரசியல் ஆர்வலர்களிடம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இனியாவது வாக்குக்காக எதையும் பேசிவரும் திருமாவளவன் மற்றும் பெண்களிடம் தொடர்ந்து அத்துமீறும் தனது கட்சி தொண்டர்கள் என அனைவரையும் நல்வழிபடுத்தி செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள்|தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

திமுக தலைவர் ஸ்டாலினின் அடுத்தடுத்த உளறல் பேச்சால் புலம்பும் திமுக தொண்டர்கள்

0

திமுக தலைவர் ஸ்டாலினின் அடுத்தடுத்த உளறல் பேச்சால் புலம்பும் திமுக தொண்டர்கள்

மக்களவை தேர்தல் வருவதையடுத்து தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளான திமுக,அதிமுக என அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாஜகவின் மீதான அதிருப்தியை சரியாக பயன்படுத்த நினைத்த காங்கிரஸ் திமுக உடனான கூட்டணியை உறுதி செய்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று கள்ளகுறிச்சியில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்று பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தலில் கூட்டணி என்பது விருப்பத்தோடு அமைய வேண்டும் என்றும்,கட்டாயப்படுத்தி அமைக்க கூடாது என்றும் விமர்சனம் செய்திருந்தார்.மேலும் தற்போதைய ஆளும் அதிமுக அரசை நிலையில்லாதது என்றும் அது உடைந்த நாற்காலியை போல எப்போது வேண்டுமென்றாலும் கவிழும் என்று கூறினார்.

அடுத்து பேசிய அவர் திமுக வின் ஆட்சி காலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஜப்பான்துணைமுதல்வராக இருந்த போது மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்ததாக உளறி கொட்டினார்.

என்ன பேச வேண்டும் என்பது பற்றி துண்டு சீட்டில் எழுதி கொடுத்ததை கூட சரியாக படிக்காமல் ஏற்கனவே பலமுறை இது போல உளரியிருக்கிறார்.தமிழக்கத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் மட்டுமில்லாமல் சமீபத்தில் மேற்கு வங்காளத்தில் நடந்த கூட்டணி கட்சிகளின் நிகழ்ச்சியிலும் உளரியிருந்தார்.

ஏற்கனவே பழமொழியை கூட சரியாக சொல்ல தெரியாதவர் என்று சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வரும் வேளையில் தற்போது மீண்டும் ஸ்டாலின் உளரியது திமுக தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள நினைத்த எதிர்க்கட்சிளும் இளைஞர்களும் #ஜப்பான்துணைமுதல்வர்ஸ்டாலின் என்ற ஹேஸ்டேக்கில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சில பதிவுகள்

https://twitter.com/Bjpharikrishnan/status/1097229503326085120?s=19
#ஜப்பான்துணைமுதல்வர்ஸ்டாலின்

https://twitter.com/Bjpharikrishnan/status/1097229465090809856?s=19
#ஜப்பான்துணைமுதல்வர்ஸ்டாலின்
https://twitter.com/avavinoth/status/1097170610126503936?s=19