கண் திருஷ்டி பில்லி சூனியம் தரித்திரம் நீங்க கல் உப்பு தீபத்தை இப்படி ஏற்றுங்கள்!!

0
76
#image_title

கண் திருஷ்டி பில்லி சூனியம் தரித்திரம் நீங்க கல் உப்பு தீபத்தை இப்படி ஏற்றுங்கள்!!

வீட்டில் தரித்திர நிலை,அதிகளவு கண் திருஷ்டி இருந்தால் எடுத்த காரியங்கள் தோல்வியில் முடியும்.வீட்டில் அதிகளவு எதிர்மறை ஆற்றல் இருந்தால் நல்ல சிந்தனைகள் ஏற்படாது.கஷ்டங்கள்,தோல்விகள் மட்டுமே வந்து சேரும்.

அதுமட்டும் இன்றி வாழ்க்கையில் நம்பிக்கை என்ற ஒன்று போய்விடும்.பணத் தட்டுப்பாடு,கடன் பிரச்சனை சூழ்ந்து கொள்ளும்.

குடும்பத்தில் சந்தோசம் என்ற ஒன்று இருக்காது,இப்படி கெட்டது மட்டுமே நடந்து கொண்டிருக்கும்.இந்த பிரச்சனையில் இருந்து முழுமையாக வெளியேற ஒரு தீபம் ஏற்ற வேண்டும்.

இதற்கு கல் உப்பு,நல்லெண்ணெய்,அகல் விளக்கு,பஞ்சு திரி ஆகியவை தேவைப்படும்.கல் உப்பு கெட்ட சக்திகளை அளிக்க கூடிய பொருள்.

வீட்டு பூஜை அறையில் ஒரு பித்தளை தட்டு வைத்து அதில் கல் உப்பு நிரப்பி கொள்ளவும்.பிறகு அதன் மேல் ஒரு மண் அகல் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றவும்.

இவ்வாறு காலை,மாலை தீபம் ஏற்றி வழிபாடு வந்தால் கண் திருஷ்டி,பில்லி,சூனியம்,ஏவல்,தரித்திரம் முழுமையாக நீங்கும்.இந்த தீபம் பார்க்க சாதாரணமாக தான் தெரியும்.ஆனால் இதனால் கிடைக்க கூடிய பலன் அதிகம்.