ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்த மிட்செல் மார்ஷ்! உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகல்!!

0
34
#image_title

ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்த மிட்செல் மார்ஷ்! உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகல்!!

ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் அவர்கள் உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சியையும் பின்னடைவையும் கொடுத்துள்ளது.

உலகக் கோப்பை ஒருநாள் தொடர் இந்தியாவில் கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்கியது பல நகரங்களில் பெட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் தோல்வியை சந்தித்து மோசமாக விளையாடினாலும் தற்பொழுது அடுத்தடுத்து விளையாடி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஆஸ்திரேலிய அணி தற்பொழுது வரை 6 லீக் போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று கிட்டதட்ட அரையிறுதி சுற்றுக்கான இடத்தை நெருங்கியுள்ளது. இதற்கு மத்தியில் குஜராத் மைதானத்தில் காலப் வண்டியில் சவாரி செய்து கொண்டிருந்த பொழுது கிளென் மேக்ஸ்வெல் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.

இதில் இவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கிளென் மேக்ஸ்வெல் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மற்றொரு ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் ஆஸ்திரேலியா அணிக்கு மேலும் ஒரு அதிர்ச்சியை அளித்துள்ளார்.

அதாவது ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் சொந்த காரணங்களுக்காக உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் நேற்று(நவம்பர்1) இரவு ஆஸ்திரேலியாவிற்கு சென்றார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

இந்நிலையில் மிட்செல் மார்ஷ் மீண்டும் அணியில் சேர்வாரா அல்லது மாற்று வீரர் அறிவிக்கப்படுமா என்பது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அறிவிக்கும். ஏற்கனவே மேக்ஸ்வெல் காயம் காரணமாக அவதிப்படும் நிலையில் மிட்செல் மார்ஷ் ஆஸ்திரேலியா சென்றுள்ளது ஆஸ்திரேலிய அணிக்கு மேலும் பின்னடைவை கொடுத்துள்ளது.