ஸ்டாலின் காரை வழிமறித்து முரசொலி மூல பத்திரத்தை கேட்ட பாஜக! பதற்றத்தில் உறைந்த திமுக உபிக்கள்

ஸ்டாலின் காரை வழிமறித்து முரசொலி மூல பத்திரத்தை கேட்ட பாஜக! பதற்றத்தில் உறைந்த திமுக உபிக்கள்

மதுரையில் திமுக ஆதரவு பெற்ற கிறிஸ்தவ அமைப்புகள் சார்பாக நடைபெறும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொள்வதற்காக மு.க.ஸ்டாலின் இன்று மதுரை சென்றடைந்தார்.

விழா நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு செல்லும்போது மதுரை பாஜகவினர் கட்சி கொடியுடன் பத்திற்கும் மேற்பட்டோர் மு.க.ஸ்டாலின் சென்ற காரை திடீரென வழிமறித்து முரசொலி அலுவலக மூலப் பத்திரத்தை கேட்டனர். இதனையடுத்து ஸ்டாலின் சென்ற காரும் சில நொடிகள் நின்றது.

இதனை சற்றும் எதிர்பாராத அவரது பாதுகாவலர்கள் பதற்றம் அடைந்தனர். இந்நிலையில் சூழ்நிலையை புரிந்து கொண்ட பாதுகாவலர்கள் பாஜகவினரை உடனடியாக அப்புறப்படுத்தினர்.

இதனால் அதிர்ச்சியில் உறைந்த திமுகவினர், பாஜகவினரை தாக்க முற்பட்ட பிறகு கலைந்து சென்றனர். மதுரையில் நடைபெற்ற இந்நிகழ்வு திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Comment