சமூக வலைதளத்தை விட்டு வெளியேறலாம் என்று நினைக்கிறேன்! மோடி திடீர் முடிவு..!!

0
243

சமூக வலைதளத்தை விட்டு வெளியேறலாம் என்று நினைக்கிறேன்! மோடி திடீர் முடிவு..!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளங்களில் இருந்து வெளியேற நினைக்கிறேன் என்று தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

உலக நடப்புகளை கையில் வைத்திருக்கும் ஒரே சாதனம் சமூக வலைதளங்கள் மட்டுமே என்பதை நன்கு அறிந்த பிரதமர் மோடி திடீரென இப்படி அறிவித்திருப்பது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

தினசரி சமூகவலைதளத்தை ஆர்வமுடன் அணுகும் பிரதமர்மோடி அடிக்கடி அரசியல் மற்றும் பல்வேறு முக்கிய சம்பவங்களையும், நாட்டிற்கான கருத்துகளையும் முக்கிய வாழ்த்துகளையும் தனது டுவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூ டியூப் களில் வெளியிடுவதில் மிக ஆர்வமானவர்.

இவரை டுவிட்டரில் மட்டும் 5 கோடிக்கு மேலானவர்களும், முகநூலில் 4 கோடிக்கு மேலானவர்களும், இன்ஸ்டாகிராமில் 3 கோடிக்கும் மேலானவர்களும் மற்றும்
யூடியூப்-ல் பல லட்சக்கணக்கானோர் பின்பற்றி வரும் நிலையில் மோடியின் அறிவிப்பு அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.

முகநூல், டுவிட்டர், யூ டியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் பல்வேறு சமூக இணையதள பக்கங்கள்தான் இன்று சிறிய விசயங்களை கூட டிரெண்டிங் லெவலுக்கு மாற்றியிருக்கிறது. சமூகவலைதளங்கள் இல்லாமல் இன்றைய உலகமே என்கிற நிலை உருவாகியுள்ளது. மோடி எல்லோரது கவனத்தையும் ஈர்ப்பதற்காக இப்படி செய்கிறாரா என்றும் சில கேள்விகள் எழுகிறது.

Previous articleமாதம் 1 லட்சம் சம்பளம் வாங்கியும் நிம்மதி இல்லாததால் குடும்பத்தை கொன்று தானும் தற்கொலை செய்த இன்ஜினியர்!!
Next articleடிக்-டாக் செய்வதற்காக தண்ணீரில் குதித்த இளைஞர் திரும்பி வரவேயில்லை! பரிதாபமான வீடியோ!! ராமதாஸ் எச்சரித்த காரணம்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here