காணாமல் போன மகள்களை கண்டுபிடித்து தரக்கோரி கலெக்டரிடம் கதறிய தாய்மார்கள்!!

0
129
#image_title

காணாமல் போன மகள்களை கண்டுபிடித்து தரக்கோரி கலெக்டரிடம் மனு வழங்கிய தாய்மார்கள்.

கதறி அழுது மயங்கி விழுந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காலி மேடு சாலியர் தெரு பகுதியை சேர்ந்தவர் சித்ரா.

கணவனால் கைவிடப்பட்ட இவருக்கு பிரியா (வயது 17) என்ற மகள் உள்ளார்.
பிரியா 11ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில் கடந்த ஆறாம் தேதி மாலையில் இருந்து பிரியா திடீரென காணாமல் போய் உள்ளார்.

அவருடன் அவருடைய சித்தி மகள் மோனிகா (வயது 14) என்பவரும் காணாமல் போய் உள்ளார்.இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ள நிலையில், வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில் சித்ராவும், அவருடைய தங்கை இருவரும் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட கலெக்டர் ஆர்த்தியிடம் காணாமல் போன தங்கள் மகள்களை விரைவாக கண்டுபிடித்து தர வேண்டும் என கதறி அழுதவாறு மனுவை வழங்கினார்கள்.

கதறி அழுதபடி இருந்த சித்ரா திடீரென மயங்கி விழுந்ததால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.மயங்கி விழுந்த சித்ராவை காவல்துறையினர் தண்ணீர் தெளித்து எழுப்பி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்