மூட்டு வலியை போக்கும் கடுகு! இதைவிட சிறந்த மருந்து இல்லை!!

0
146

மூட்டு வலியை போக்கும் கடுகு! இதைவிட சிறந்த மருந்து இல்லை!!

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழமொழி உண்டு. ஏனென்றால் கடுகு சிறிதளவு இருந்தாலும் அதன் மருத்துவ பயன்கள் அதிகம். கடுகானது மூட்டு வலிக்கு மட்டுமின்றி, திடிரென்று ஏற்படும் மயக்கம், செரிமான கோளாறு, இளைப்பு, இருமல், மந்தத்தன்மை என அனைத்திற்கும் கடுகு அருமருந்தாக பயன்படும். அந்த வகையில் மூட்டு வலி மூட்டு வீக்கம் ஆகியவற்றிற்கும் கடுகு ஓர் நல்ல மருந்து. சிறிதளவு கடுகையை எடுத்து அதன் மேல் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பேஸ்ட் ஆக அரைத்த கடுகை ஒரு காகிதத்தின் மேல் வைத்து மூட்டு அல்லது மூட்டு வீக்கம் உள்ள பகுதியில் கட்டி விட வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து அதனை அவிழ்த்து விட வேண்டும். சிறிது நேரத்திலேயே மூட்டு வீக்கம் மற்றும் மூட்டு வலி இல்லாமல் போய்விடும்.