கர்நாடகத்தில் ஏற்பட்ட புதிய மாற்றம்! மகிழ்ச்சியில் சசிகலா!

கர்நாடகத்தில் ஏற்பட்ட புதிய மாற்றம்! மகிழ்ச்சியில் சசிகலா!

தண்டனை காலம் நிறைவடைய இருக்கும் நேரத்தில் அபராதத் தொகை கட்டி விட்ட காரணத்தால், இந்த மாதம் வெளிவர இருக்கின்றார் சசிகலா, சசிகலா விடுதலை ஆகும் நாளில் சிறைத்துறையும் மாநில அரசும், கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக உள்துறை அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. ஆனாலும் சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆக இயலாது என்று தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தார் கர்நாடக மாநிலத்தின் உள்துறைச் செயலாளர் ரூபா. வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில், சென்ற 2017ம் வருடத்தில் 4 … Read more

கொரோனா தடுப்பூசி இந்தியாவிற்கு வரும் – ரன்தீப் குலேரியா நம்பிக்கை!

கொரோனா தடுப்பூசி இந்தியாவிற்கு வரும் - ரன்தீப் குலேரியா நம்பிக்கை!

டெல்லி  எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா அவர்கள் இன்னும் சில நாட்களில் கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவின் பயன்பாட்டிற்கும் விரைவில் கொண்டு வரப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போது பிரிட்டனிலும் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ராஜெனேக்கா ஆகியன இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி நம் நாட்டிலும் கொண்டு வரப்பட உள்ளது. இதை தயாரிக்கும் சீரம் நிறுவனம் இந்தியாவிலும் போர்க்கால அடிப்படையில் இந்த தடுப்பு மருந்தை பயன்படுத்துவதற்கு … Read more

புதிதாக திட்டத்தை கொண்டு வந்து அசத்தும் அமேசான் நிறுவனம்!

புதிதாக திட்டத்தை கொண்டு வந்து அசத்தும் அமேசான் நிறுவனம்!

அமேசான் தனது ஆரம்பக் கட்ட தொழில் திட்டமான ஃப்யூச்சர் இன்ஜினியர் என்ற திட்டத்தை இந்தியாவில் தொடங்க திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் அமெரிக்காவில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.   அதில் மாணவர்கள் கணினி மற்றும் கணினி குறியீடுகளை கற்க உதவும் கணினி அறிவியல் வகுப்புகளுக்கு நிதி அளித்து மாணவர்களின் திறனை மேம்படுத்துகிறது. அமேசான் நிறுவனம் இந்தியாவில் ஃப்யூச்சர் இன்ஜினியர் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த ஒரு மேலாளரை நியமித்தது. அந்த தலைமை நிர்வாகி பெயர் பெசோஸ். ஜெப் … Read more

புதிய வகை தொற்று பரவல்! புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கடிவாளம் போட்டது மத்திய அரசு!

புதிய வகை தொற்று பரவல்! புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கடிவாளம் போட்டது மத்திய அரசு!

இங்கிலாந்திலிருந்து பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டு இருக்கின்ற நிலையில், உள்ளூர் நிலைமைக்கு ஏற்றவாறு தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மாநில அரசுகளுக்கு அவசர கடிதம் அனுப்பி இருக்கின்றார். உலகம் முழுவதும் நாளை மறுநாள் புத்தாண்டு தினம் கொண்டாடப்பட இருக்கின்றது. வழக்கமாக டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி அன்று இரவு கடற்கரை, தேவாலயங்கள், போன்ற பொதுவான இடங்களில் மக்கள் கூடி கொண்டாட்டத்துடன் புத்தாண்டை வரவேற்பது வழக்கம். … Read more

புத்தாண்டில் வாகனங்களின் விலை உயர்த்தப்படுகிறதா?

புத்தாண்டில் வாகனங்களின் விலை உயர்த்தப்படுகிறதா?

  வாகனங்கள் தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாகனத்தின் விலையையும் உயர்த்தி விற்கலாம் என்று வாகன உற்பத்தியாளர்கள் ஆலோசித்து வருகின்றனராம். வாகனம் உற்பத்தி செய்வதற்கு தேவையான மூலப்பொருட்களின் விலை அதிகரித்து உள்ளதால் உற்பத்தி செலவினம் ஆனது அதிகரித்துள்ளது. இதன் காரணத்தினால் வாகனம் தயாரிப்பதில் முன்னணி நிறுவனங்களான சுஸுகி, மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் ஹீரோ போன்ற நிறுவனங்கள் வருகின்ற புத்தாண்டு முதல் வாகன விலையை உயர்த்த உள்ளதாக கூறியுள்ளனர். மேலும் பஜாஜ், ராயல் என்ஃபீல்டு … Read more

இன்று முதல் இரவுநேர முழு ஊரடங்கு:! அரசின் புதிய உத்தரவு!!

இன்று முதல் இரவுநேர முழு ஊரடங்கு:! அரசின் புதிய உத்தரவு!!

இன்று முதல் இரவுநேர முழு ஊரடங்கு:! அரசின் புதிய உத்தரவு!! இந்தியாவில் மகாராஷ்டிரா, கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக கருதப்படுகின்றது. இதுமட்டுமின்றி அம்மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரையில் சுமார் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகளும் 49 ஆயிரம் இறப்புகளும் பதிவாகியுள்ளது. இதுமட்டுமின்றி கொரோனாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நகரங்களில் மும்பை முதலிடத்தை பெற்றிருந்தது.இருப்பினும் கடுமையான ஊரடங்கு காரணமாக தொற்றுகளின் வீரியம் கணிசமாக குறைந்தது.மேலும் தோற்று பரவுதல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையே தற்போது … Read more

நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்:! பதறவைக்கும் காரணம்!!

நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்:! பதறவைக்கும் காரணம்!!

நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்:! பதறவைக்கும் காரணம்!! காதலிக்க மறுத்த பெண்ணை நடுரோட்டில் வைத்து வெட்டிய சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹூப்ளி நகரிலுள்ள தேஷ்பாண்டி பகுதியைச் சேர்ந்த ஆஷா என்னும் இளம்பெண் இஸ்மாயில் என்னும் இளைஞருடன் நட்பாக பழகி வந்துள்ளார்.இவர்கள் இருவருக்கும் இடையே சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இஸ்மாயிலிடம் பேசுவதை ஆஷா நிறுத்திவிட்டார். இதனால் ஆஷாவின் மீது மிகுந்த கோபத்தில் இருந்த இஸ்மாயில், ஆசா அப்பகுதியில் உள்ள … Read more

திருமண வாக்குறுதி கொடுத்துவிட்டு உடலுறவில் ஈடுபட்டால் குற்றமில்லை :! நீதிமன்றம் வழங்கிய புதிய தீர்ப்பு

திருமண வாக்குறுதி கொடுத்துவிட்டு உடலுறவில் ஈடுபட்டால் குற்றமில்லை :! நீதிமன்றம் வழங்கிய புதிய தீர்ப்பு

டில்லி நீதிமன்றம் : திருமண வாக்குறுதி கொடுத்துவிட்டு ஒரு பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொண்டபின் திருமணம் செய்ய மறுத்தால் , அது பாலியல் பலாத்கார குற்றமாகாது என்ற அதிர்ச்சி தரும் தீர்ப்பை தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு இளைஞர் , ஒரு பெண்ணை காதலித்து , பின்னர் திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார் . பின்னர் அந்த இளைஞர் திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் மன வேதனையடைந்த அந்த பெண் … Read more

ஜனவரி 4 முதல் பள்ளிகள் திறப்பு:! பள்ளி கல்வித்துறை அதிகாரபூர்வ அறிவிப்பு!

ஜனவரி 4 முதல் பள்ளிகள் திறப்பு:! பள்ளி கல்வித்துறை அதிகாரபூர்வ அறிவிப்பு!

ஜனவரி 4 முதல் பள்ளிகள் திறப்பு:! பள்ளி கல்வித்துறை அதிகாரபூர்வ அறிவிப்பு! கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் அனைத்து கல்வி நிறுவனங்களும் முடக்கப்பட்ட நிலையில்,அனைத்து பொது தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்றும் அறிவிக்கப்பட்டது.ஆனால் நடப்பாண்டிற்கான வகுப்புகள் பள்ளிகளில் நடத்தப்பட முடியாத சூழல் ஏற்பட்டதன் காரணமாக,மாணவர்களின் கல்விதிறனை கருத்தில் கொண்டு,ஆன்லைன் வாயிலாகவும் தொலைக்காட்சி வாயிலாகவும் வகுப்புகள் நடைபெற்று வந்தன. கடந்த அக்டோபர் மாதம் மாணவர்களின் … Read more

நாளை முதல் கல்லூரிகள் திறக்க அனுமதி:! உயர் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!

நாளை முதல் கல்லூரிகள் திறக்க அனுமதி:! உயர் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!

நாளை முதல் கல்லூரிகள் திறக்க அனுமதி:! உயர் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு! கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் பொதுப் போக்குவரத்து உட்பட அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் முடக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள்,நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு சில மாநிலங்களில் கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் நாளை முதல் அனைத்து கல்லூரிகளும் இயங்க உயர்கல்வித்துறை அனுமதியளித்துள்ளது. மேலும் … Read more