கே.ஹெச் 234 திரைப்படத்தில் நயன்தாரா! சம்பளம் எவ்வளவு வாங்குகிறார் தெரியுமா!!

0
33
#image_title

கே.ஹெச் 234 திரைப்படத்தில் நயன்தாரா! சம்பளம் எவ்வளவு வாங்குகிறார் தெரியுமா!!

நடிகர் கமல்ஹாசன் அவர்கள் அடுத்ததாக நடிக்கவுள்ள கே.ஹெச் 234 திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அவர்கள் நடிக்கவுள்ளதாகவும் இந்த திரைப்படத்தில் நடிக்க அதிகம் சம்பளம் கேட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் அடுத்ததாக இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் கே.ஹெச் 233 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகவுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் முதல் தொடங்கவுள்ளது.

இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் அவர்கள் அவருடைய 234வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். கமல்ஹாசன் அவர்கள் நடிக்கும் 234வது திரைப்படமான கே.ஹெச் 234 திரைப்படத்தை இயக்குநர் மணிரத்னம் அவர்கள் இயக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் சமீபத்தில் கே.ஹெச் 234 திரைப்படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில் அந்த பூஜை வீடியோவை படக்குழு நேற்று(அக்டோபர்27) வெளியிட்டது. மேலும் கே.ஹெச் 234 திரைப்படத்தில் வேலை செய்யும் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஆனால் கே.ஹெச் 234 திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் பற்றிய தகவல்களை படக்குழு வெளியிடவில்லை. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அவர்கள் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

தற்பொழுது கிடைத்துள்ள தகவல்படி நடிகை நயன்தாரா அவர்கள் கே.ஹெச் 234 திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்காக நடிகை நயன்தாரா அவர்கள் 12 கோடி ரூபாய் சம்பளம் கேட்டநிலையில் படக்குழுவும் ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

நடிகை நயன்தாரா அவர்கள் செப்டம்பர் மாதம் வெளியான ஹிந்தி படமான ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் ஜவான் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்நிலையில் ஜவான் திரைப்படத்தின் வெற்றிக்கு நடிகை நயன்தாரா அவர்கள் தன்னுடைய சம்பளத் தொகையை 5 கோடி ரூபாயில் இருந்து இரண்டு மடங்காக அதிகரித்துள்ளார்.

இந்நிலையில் கே.ஹெச் 234 திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடிப்பது உறுதியாகி 12 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி விட்டால் தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் முதல் நடிகை என்ற பெருமையை நடிகை நயன்தாரா அவர்கள் பெறுவார்.