திமுகவில் நடக்கும் உச்சக்கட்ட பனிப்போர்! குழப்பத்தில் தலைமை

திமுகவில் நடக்கும் உச்சக்கட்ட பனிப்போர்! குழப்பத்தில் தலைமை

சன் குழுமம் நடத்தும் செய்தி தாள்கள் மற்றும் தொலைக்காட்சியில் திமுக எம்.பி செந்தில் குமார் பற்றி செய்தி வெளியிட தடை, திமுகவில் நடக்கும் உச்சக்கட்ட போர். 2021 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் திமுக அதிமுக கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு ஊர் ஊராக சென்று தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்கள். அதேபோல் செய்திதாள்களிலும் மற்றும் தொலைக்காட்சியிலும் விளம்பரங்கள் செய்கிறார்கள். சில நாள்களுக்கு முன்பு ஆளும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அரசு பற்றி தேர்தல் விளம்பரங்கள் தயாநிதி மாறன் நடந்தும் சன்‌டிவி … Read more

எடப்பாடியின் சவாலை ஏற்ற எதிர்க்கட்சித்தலைவர்!

எடப்பாடியின் சவாலை ஏற்ற எதிர்க்கட்சித்தலைவர்!

முதல்வருடன் விவாதம் செய்வதற்கு தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பிரச்சாரம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தன் மீதும் ,அமைச்சர்கள் மீதும், ஆளுநரிடம் ஸ்டாலின் கொடுத்திருக்கின்ற ஊழல் புகார்கள் தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கிறார். இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சிதான் என்று குற்றம்சாட்டிய முதலமைச்சர், அதிமுக ஆட்சியில் ஊழல் எங்கே நடந்திருக்கின்றது. ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விவாதத்திற்கு நான் தயாராக இருக்கின்றேன் என்று தெரிவித்த முதலமைச்சர், ஸ்டாலின் துண்டு … Read more

வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பா? பன்னீர்செல்வம் பதில்!

வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பா? பன்னீர்செல்வம் பதில்!

வன்னியர் சமுதாயத்தினரையும் இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக வெளியான தகவலை மறுத்திருக்கிறார் தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம். வன்னியர் சமுதாயத்திற்கு கல்வி, மற்றும் வேலைவாய்ப்பில், 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. அன்புமணி ராமதாஸ் முதலமைச்சரிடம் இது தொடர்பாக மனு அளித்த நிலையில், அதனை ஏற்று முதல் கட்டமாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஆணையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி … Read more

தொடர்ந்து கூட்டணி கட்சிகளை வெறுப்பேற்றும் துரைமுருகன்! காரணம் இதுதான்!

தொடர்ந்து கூட்டணி கட்சிகளை வெறுப்பேற்றும் துரைமுருகன்! காரணம் இதுதான்!

கருணாநிதியின் வலதுகரமாக இருந்து அனைத்து சூழ்நிலைகளிலும், கருணாநிதியை புகழ்ந்து பேசி வந்த துரைமுருகன் இப்பொழுது பொதுச் செயலாளர் பதவியில் இருந்து வருகின்றார். தான் ஒரு சீனியர் என்பதையும் கடந்து ஸ்டாலினை புகழ்ந்து பேச வேண்டிய கட்டாயத்திலும் அவர் இருந்து வருகின்றார். இந்த நிலையிலே, திமுகவிற்கு துரைமுருகன் ஒரு புது வழியை காட்டி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது நம்மை மதிக்காத எந்த கட்சியுடனும் கூட்டணி தேவையில்லை. தனித்து நிற்கலாம் என்று துரைமுருகன் ஸ்டாலினுக்கு ஆலோசனை தெரிவித்து வருவதாக … Read more

பொள்ளாச்சி விவகாரம்! சிபிஐ அதிரடி நடவடிக்கையின் காரணம் என்ன தெரியுமா?

பொள்ளாச்சி விவகாரம்! சிபிஐ அதிரடி நடவடிக்கையின் காரணம் என்ன தெரியுமா?

அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே இருக்கின்ற இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இது தொடர்பாக தொடர்ச்சியான நிகழ்வுகளும் நடந்து வருகிறது. அக்டோபர் மாதம் 7ஆம் தேதி அதிமுக அதிக முதலமைச்சர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டு ஜனவரி மாதம் 7 ஆம் தேதியோடு மூன்று மாதங்கள் முடிந்திருக்கின்றன. ஆனாலும் பாஜக இன்னமும்கூட அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளரை அங்கீகரிக்கவோ, அல்லது ஆதரிக்கவும் இல்லை. அதற்கு மாறாக தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் … Read more

அமைச்சர் காமராஜ் உடல்நிலை! மியாட் மருத்துவமனை பரபரப்பு அறிக்கை!

அமைச்சர் காமராஜ் உடல்நிலை! மியாட் மருத்துவமனை பரபரப்பு அறிக்கை!

தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உடல் நிலை தொடர்பாக மியாட் மருத்துவமனை அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாட்டிலே கொரோனா தொற்றிற்கு சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் என பல தரப்பினரும் பாதிப்படைந்து வருகிறார்கள். அதிலிருந்து மீண்டும் வந்திருக்கிறார்கள். இப்பொழுது அனைத்து மாவட்டங்களிலும் தொற்றின் அளவு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதே நேரத்தில் பிரிட்டனில் ஆரம்பித்து இருக்கின்ற உருமாறிய கொரோனாவும், தமிழ்நாட்டில் இப்போது பரவ ஆரம்பித்திருக்கிறது. இந்த நிலையிலே, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சில தினங்களுக்கு முன்பு … Read more

பெண்களைப் பற்றிய உதயநிதியின் அந்த வார்த்தை! அதிகரிக்கிறது கண்டனம்!

பெண்களைப் பற்றிய உதயநிதியின் அந்த வார்த்தை! அதிகரிக்கிறது கண்டனம்!

பெண்களை இழிவுபடுத்தும் விதமாக உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன. எதிர்க்கட்சியான திமுகவின் இளைஞர் அணிச் செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ஒரு நிகழ்ச்சியில் மோடிக்கு எடுபிடியாக ஆட்சி செய்து வருவதால் எடப்பாடி ஆட்சியை எடுபிடி ஆட்சி என தெரிவிக்கின்றோம். டெட்பாடி ஆட்சி என்று சொல்கிறார்கள். சசிகலாவின் காலில் விழுந்து தானே முதல்வரானார் நாற்காலி,மற்றும் மேஜைகளுக்கு இடையில் புகுந்து தானே விழுந்து கிடந்தார் என்று தெரிவித்ததோடு, மோசமான வார்த்தை ஒன்றையும் பிரயோகம் செய்து இருக்கிறார். அவரின் … Read more

திமுகவில் இருப்பவர்கள் அனைவருமே ரவுடிகள் தான்! முதல்வர் கடும் தாக்கு!

திமுகவில் இருப்பவர்கள் அனைவருமே ரவுடிகள் தான்! முதல்வர் கடும் தாக்கு!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்றைய தினம் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்தார். அந்த சமயத்திலே, அவர் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து பேசி இருக்கின்றார். ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் தான் ஸ்டாலினும், அழகிரியும், ஆனாலும் கூட அழகிரிக்கு கட்சியில் வாய்ப்பு கொடுக்காமல் இருப்பவர்கள் நாட்டு மக்களுக்கு என்ன செய்துவிடுவார்கள்? திமுக என்பது கட்சி இல்லை அது ஒரு கார்ப்பரேட் நிறுவனம் அதன் சேர்மனாக இப்பொழுது ஸ்டாலின் இருக்கிறார். பின்னாளில் உதயநிதி … Read more

குள்ளநரித்தனம்! தமிழக அரசை விமர்சித்த கமல்ஹாசன்!

நியாயவிலை கடைகளில் கொடுப்பது மாமனார் இல்லத்து பொங்கல் சீதனம் இல்லை என கமல்ஹாசன் விமர்சனம் செய்திருக்கின்றார். தமிழ்நாட்டிலே நியாய விலை கார்டு தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக 2,500 ரூபாய் ரொக்கம், அரிசி, கரும்பு ,முந்திரி, திராட்சை, போன்றவை வழங்கப்பட்டு வருகிறது .இந்த நிலையில் தமிழக அரசு சார்பாக கொடுக்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பை வாக்காக மாற்றுவதற்கு தமிழக அரசு முயற்சி செய்கிறது எனவும், அதன் காரணமாகவே நியாய விலை கடை வாசல்களில் அதிமுகவின் கட்சியின் விளம்பர … Read more

ஊழலைப் பற்றி விவாதிப்பதற்கு துண்டு சீட்டு இல்லாமல் கலந்து கொள்ள தயாரா? ஸ்டாலினுக்கு சவால் விட்ட முதல்வர்!

ஊழலைப் பற்றி விவாதிப்பதற்கு துண்டு சீட்டு இல்லாமல் கலந்து கொள்ள தயாரா? ஸ்டாலினுக்கு சவால் விட்ட முதல்வர்!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக எந்த இடத்திலும் விவாதிக்க தயாராக இருக்கிறேன் என்று ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சவால் விடுத்து இருக்கிறார். சட்டசபை தேர்தலை ஒட்டி வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தலைப்பில், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சார பயணம் செய்து வருகின்றார். அந்த முறையிலே நேற்றைய தினம் ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். திமுக சார்பாக நடத்தப்படும் கிராமசபை கூட்டங்கள் மூலமாக மக்களுக்கு எந்த ஒரு பயனும் கிடையாது என்று அவர் குற்றம் … Read more