எந்தவித மருந்து மற்றும் பக்க விளைவுகள் இல்லாமல் மூலத்தை ஏழே நாட்களில் வேரோடு அழிக்க வேண்டுமா?? 

0
181
#image_title

எந்தவித மருந்து மற்றும் பக்க விளைவுகள் இல்லாமல் மூலத்தை ஏழே நாட்களில் வேரோடு அழிக்க வேண்டுமா?? 

பிரிஷ்கிரிப்ஷன் இல்லாமல் மூலத்தை ஏழு நாட்களில் வேரோடு அழிக்கக்கூடிய ஒரு வீட்டு வைத்திய முறையை பார்ப்போம். உள்மூலம், வெளிமூலம், ரத்தமூலம், மூலக்கடுப்பு, எதுவாக இருந்தாலும் இதை செய்து வந்தாலே சரியாகிவிடும்.

அதற்கு முதலில் ஒரு மண்பாத்திரத்தில் ஒரு கப் சாதத்தை சேர்க்க வேண்டும். சாதம் நன்கு ஆறி இருக்க வேண்டும் சூடாக இருக்கக் கூடாது. இதில் இரண்டு டம்ளர் தண்ணீர், ஊற்றவும். பிறகு அதில் ஐந்து சின்ன வெங்காயத்தை பொடிசாக நறுக்கி சேர்க்கவும். பிறகு கல் உப்பு சேர்க்கவும். உப்பு சற்று தாராளமாக சேர்க்க வேண்டும். லேசாக கரிக்கும் அளவு இருக்க வேண்டும்.

பிறகு அந்த பாத்திரத்தை மூடி வைக்கவும். இந்த மருத்துவ குறிப்பிற்கு மண்பானை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிறகு அது 8 முதல் 12 மணி நேரம் வரை நன்றாக ஊற வேண்டும். அதாவது இரவு தூங்குவதற்கு முன்பு இதை தயார் செய்து விட்டு படுக்க வேண்டும். இது இவ்வாறு ஊறும் பொழுது அதில் சில வகை நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உருவாகி இருக்கும். இதுதான் மூலம் சம்பந்தமான பிரச்சினைகளை அழிக்கக்கூடியது.

காலையில் பல் துலக்கியதும் மண் பாத்திரத்தில் ஊறவைத்த சாதத்தை கைகளால் நன்கு கரைத்து கஞ்சி பதம் ஆனதும் அப்படியே குடிக்க வேண்டும். குடித்த அரை மணி நேரத்தில் உங்கள் மலக்குடலில் தங்கி இருந்த நாள்பட்ட கழிவுகள் எல்லாமே வெளிவர ஆரம்பிக்கும். இதை ஒரு 15 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.

இவ்வாறு இதை சாப்பிடும் பொழுது உணவில் உப்பு, புளி, காரம்,  மிகவும் குறைவாக சாப்பிட வேண்டும். மேலும் இதனுடன் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் துத்திக் கீரை பொடியை வாங்கி மோரில் கலந்து குடித்து வர வேண்டும். அல்லது துத்திக் கீரை கிடைத்தாலும் பருப்புடன் கரைந்து சாப்பிடலாம். நல்லதொரு அருமையான தீர்வை கொடுக்கக்கூடிய மருத்துவ குறிப்பு இது. இதை பயன்படுத்தி வந்தால் கட்டாயம் 15 நாட்களில் மூலத்தை வேரோடு அழிக்கலாம்.