2024 ஆம் ஆண்டில் தான் இயல்பு நிலைக்குத் திரும்பும்

Photo of author

By Parthipan K

2024 ஆம் ஆண்டில் தான் இயல்பு நிலைக்குத் திரும்பும்

Parthipan K

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் விமான போக்குவரத்து குறைந்த அளவில் செயல்படுகிறது.  இந்த நிலையில் கனடாவில் உள்ள சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம், உலக அளவில் 2024 ஆம் ஆண்டில் தான் விமானப் போக்குவரத்தானது  இயல்பு நிலைக்குத் திரும்பும் எனத் தெரிவித்துள்ளது. தற்போதைக்கு  ஊரடங்கால் 2020ஆம் ஆண்டில் 55 சதவிகிதத்திலான விமானப் போக்குவரத்து சேவை பாதிப்படையும் என இந்த அமைப்பு கணித்துள்ளது. ஏப்ரல் மாதக் கணிப்பில் 46% மட்டுமே நடப்பாண்டு விமானப் போக்குவரத்து சேவை பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.