திமுக ஆட்சியில் வெறும் பேச்சு மட்டும் தான்… எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்!

0
189
#image_title

திமுக ஆட்சியில் வெறும் பேச்சு மட்டும் தான்… எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்!

அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த நல்ல திட்டங்களை ஒழிப்பதே திமுகவின் நோக்கமாகும் என எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற பிற கட்சியிலிருந்து அதிமுகவில் தொண்டர்கள் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற எடப்பாடி பழனிச்சாமி, ” அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நல்ல திட்டங்களை ஒழிப்பதே திமுக நோக்கமாகக் கொண்டுள்ளது. நீட் தேர்வு ஒழிப்பு எனக் கூறி மக்களை ஏமாற்றுகிறது திமுக. ஆனால் அதிமுக ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. திமுகவால் நிறைவேற்றப்படாத சிறுபான்மையினரின் கோரிக்கைகள் அதிமுகவால் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்ட பின்னரே மூன்று ஆண்டுகளில் கண்டுகொள்ளாத முதல்வர் சிறுபான்மையினரை அழைத்து பேசுகிறார். திமுக ஒப்பந்தமிட்ட மீத்தேன் திட்டத்தை தடுத்து நிறுத்தியது அதிமுக. மக்களின் நலன் கருதி அதிமுக ஆட்சியில் தான் மயிலாடுதுறை உட்பட 6 புதிய மாவட்டங்கள் கொண்டுவரப்பட்டன. பிரதமரின் வீடு கட்டும் திட்டம் அதிமுகவின் மடிக்கணினி திட்டம் உள்ளிட்ட நல்ல திட்டங்களை திமுக கைவிட்டப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் மக்களை கவரும் வகையில் பேச்சு மட்டும் தான் உள்ளது. செயல்பாடுகள் ஏதுமில்லை.” என பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

author avatar
Savitha