தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

Photo of author

By Vijay

தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

Vijay

சென்னையில் பெட்ரோல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக, தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியுள்ளது.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மாற்றமின்றி இருந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த இரண்டு நாட்களாக உயர்ந்து வருகிறது. இதனால் பெட்ரோல் விலை தமிழகத்தில் மீண்டும் ரூ. 100-ஐ தாண்டியுள்ளது. நேற்றைய தினம் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 21 காசுகள் அதிகரித்து ரூ.100.01-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து ரூ.95.59-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்றும் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் 22 காசுகள் உயர்ந்து ரூ.100.23-க்கு விற்பனையாகிறது. அதேபோல், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து ரூ.95.59-க்கு விற்பனையாகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.