மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை!! இன்றைய விலை நிலவரம்.??

0
127

சென்னையில் தொடர்ந்து கடந்த சில நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயந்துள்ளது.

உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து பெட்ரோல் லிட்டருக்கு 21 காசுகள் உயர்ந்து ரூ.99.36 க்கும், டீசல் லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து ரூ.94.45க்கும் விற்பனையானது.

அதன்படி, நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ 103.01 ஆகவும், டீசல் லிட்டர் ரூ 98.92 ஆகவும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனையான நிலையில், இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 30 காசுகள் அதிகரித்து ரூ.103.31- க்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை 34 காசு அதிகரித்து ரூ.99.26- க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleவளர்ச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! முதல்வர் அதிரடி உத்தரவு!
Next articleவாகா எல்லையில் தல அஜித் குமார்! தேசிய கொடி மற்றும் பாதுகாப்பு படையினருடன் புகைப்படம்!