கிணற்றில் சடலமாக மீக்கப்பட்ட  பிளஸ் 2 பள்ளி மாணவன் !!நடந்தது என்ன ?பரபரப்பி அப்பகுதி மக்கள் ?.

0
95
Plus 2 school student found dead in the well !! What happened ? Paraparappi people of the area ?.
Plus 2 school student found dead in the well !! What happened ? Paraparappi people of the area ?.

கிணற்றில் சடலமாக மீக்கப்பட்ட  பிளஸ் 2 பள்ளி மாணவன் !!நடந்தது என்ன ?பரபரப்பி அப்பகுதி மக்கள் ?.

திருத்தணி நகராட்சியில் ஏரிக்கரை தெருவில் பாழடைந்த விவசாய கிணறு ஒன்றுள்ளது.அந்த கிணற்றில் இறந்து கிடந்த சடலம் தெரிவதாக அப்பகுதி மக்கள் திருத்தணி தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.பல மணி நேரமாக தீயணைப்பு துறை அதிகாரிகள் கொட்டும் மழையிலும் இறந்த மாணவன் சடலத்தை மூன்று  மணி நேரம் போராடினார்கள்.

பின்னர் அந்த சடலத்தை  மீட்டெடுத்து  திருத்தணி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.காவல்துறையினர் அந்த மாணவன் உடலை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கையில் இறந்த மாணவன் சூரிய பிரகாஷ் என்பதும் இவருடைய வயது பதினேழு என்பதும் தெரிய வந்தது.

இந்த மாணவன்  பிளஸ் 2 படித்து வந்துள்ளான்.இவன் விவசாய கிணற்றில் மாணவர்களுடன் குளிக்க வந்ததாக தெரிகிறது.இவருடன் குளித்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இறந்த சூரியபிரகாஷ் திருத்தணி காந்தி சாலைலுள்ள  டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 கணினி பாடப்பிரிவில் படித்துவந்தான்.

இவருடைய சொந்த ஊர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா தணிகை போளூர் கிராமம் ஆகும்.இதை தொடர்ந்து  சூரியபிரகாஷ் தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாணவன் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்கு திருத்தணி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.இதனால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

author avatar
Parthipan K