இணையதளம் மூலம் 12 ம் வகுப்பு மாணவிக்கு ஆபாச ஆசை! காவல்துறை செய்த செயல்!
நவீன கம்ப்யூட்டர் யுகத்தில் பெண் பிள்ளைகள் வீட்டில் இருந்தால் அவர்களை கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கு இந்த விசயமே எடுத்துக்காட்டாக உள்ளது. பெண்கள் வீட்டில் இருந்தால் அவர்களின் மீது ஒரு கண் இருக்க வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியைச் சேர்ந்த சந்தியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார் இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த இளங்கோ என்னும் இளைஞர் ஒருவர் சமூக வலைதளம் மூலமாக அறிமுகமாகி உள்ளார். அவர்கள் இருவரும் தொடர்ந்து சமூகவலைதளத்தில் நீண்ட நேரம் அடிக்கடி பேசி வந்துள்ளனர்.
அதனை தொடர்ந்து ஒருகட்டத்தில் அந்த இளைஞர் மாணவியிடம் ஆபாசமாக பேச தொடங்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் பெண்ணிற்க்கு ஆபாச ஆசையை தூண்டும் வகையில் பல்வேறு புகைப்படம் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதை உணர்ந்த பெற்றோர்கள் மாணவியிடம் விசாரணை செய்ததில் அவருக்கு ஃபேஸ்புக் மூலம் பழகிய இளங்கோ என்ற இளைஞர் ஆபாசமான படங்களை அனுப்பியும் பேசியும் பெண்ணை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக பதறிப்போன பெற்றோர்கள் உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் இடம் புகார் அளித்தனர்.
அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் திருத்தணி காவல் ஆய்வாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இளங்கோ என்கின்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் டிப்ளமோ படித்துவிட்டு ஆந்திராவில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அவரை கைது செய்துள்ளனர்.