இன்ஸ்டாகிராமில் ஆபாச வீடியோ! சிக்கிய பிளஸ் 1 மாணவி!

0
75
Suddenly the magical girl!! Instagram that gave clues to the police!!
Suddenly the magical girl!! Instagram that gave clues to the police!!

இன்ஸ்டாகிராமில் ஆபாச வீடியோ! சிக்கிய பிளஸ் 1 மாணவி!

தற்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் இல்லாமல் எவரும் இருப்பதில்லை. சிறு குழந்தை முதல் பெரியவர்கள் என அனைவரும் தற்பொழுது ஸ்மார்ட்போன் உபயோகம் செய்ய ஆரம்பித்து விட்டனர். இந்த ஸ்மார்ட்போன் பல நல்ல காரியங்களுக்கு எவ்வளவு தூரம் பயன்படுகிறதோ அதே போல தீய காரியங்கள் செய்யவும் உதவுகிறது. குறிப்பாக இந்தக் கொரோனா கால கட்டத்தில் மாணவர்களால் பள்ளிக்கு சென்று பையில முடியவில்லை. மாணவர்களுக்கு ஆன்லைன் முறையிலேயே பாடங்களைக் கற்பித்தனர். இதனால் மாணவர்கள் கையில் ஸ்மார்ட்போன் இருப்பது கட்டாயமாகும் நிலைக்கு தள்ளப்பட்டது.

பெற்றோர்கள் அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து ஸ்மார்ட்போன் வாங்கி தந்தால் பலர் இதனை தவறான வழியிலேயே பயன்படுத்துகின்றனர். தகாத நட்பு உறவு கொண்டு பல விபரீதங்களை சந்தித்துக் கொள்கின்றனர். தற்பொழுது அவ்வாறு ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. வேலூர் மாவட்டத்தில் விரிஞ்சிபுரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் மார்க்கபந்து. எனது மகன் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் பல பெண்களுடன் பேசி வந்துள்ளார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர் ஜனனி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). ஜனனி திருச்சி மாவட்டத்தில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

ஆன்லைன் மூலம் பாடங்களை கற்பிக்க ஜனனியின் பெற்றோர் ஸ்மார்ட் போன் வாங்கித் தந்து உள்ளனர். ஜனனி இன்ஸ்டாகிராம் உபயோகம் செய்து வந்து உள்ளார். பதிலடியாக வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கோகுல் பழக்கம் ஆகியுள்ளார். முதலில் நட்புறவாக பழக தொடங்கியது, நாளடைவில் அவர்களது நட்பு காதலில் வந்தடைந்தது. கூகுள் திடீரென்று ஒரு நாள் அந்த மாணவியிடம் எனக்கு வீட்டில் திருமண ஏற்பாடு நடக்க உள்ளதாக கூறியுள்ளார். இதைக் கேட்ட அந்தப் பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். பிறகு கோகுல் அந்தப் பெண்ணை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதிக்கு வருமாறு கூறியுள்ளார். இந்த மாணவியும் கோகுல் கூறியதை நம்பி சென்றுள்ளார்.

மேலும் கோகுல் அந்த மாணவியை திருமணம் செய்து கொண்டு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். மேலும் அந்த மாணவியை நிர்வாணமாக வீடியோவை எடுத்துள்ளார். பிறகு அந்த மாணவியிடம் நீ பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டு மிரட்டியுள்ளார். பயந்து போன மாணவி தனது தாயிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். பிறகு மாணவியின் பெற்றோர் கோகுளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கோகுல் அவர்களிடமும் ஒரு பத்தாயிரம் தரும்படி கேட்டு மிரட்டியுள்ளார். பொறுமை இழந்த ஜனனியின் பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் கோகுல் மீது புகார் கொடுத்துள்ளனர். போலீசார் கோகுல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.