ரேவதியால் பிருத்வி வாழ்க்கை மாறிப்போன சம்பவம்.. – வெளியான தகவல்!

0
30
#image_title

ரேவதியால் பிருத்வி வாழ்க்கை மாறிப்போன சம்பவம்.. – வெளியான தகவல்!

பிருத்விராஜின் வாழ்க்கையையே மாற்றிய ரேவதி!.. இவ்வளவு நடந்திருக்கா?!.. அவர் மட்டும் இல்லனா!..

மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிருத்விராஜ். இவர் தமிழில் ‘மொழி’ படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் சென்னையில்தான் பிறந்தாராம். தி.நகரில் உள்ள ஒரு பள்ளியில்தான் படித்தாராம். இதன் பிறகு குன்னூரில் மேற்படிப்பை முடித்துள்ளார். இதன் பிறகு இவரது பெற்றோர் கேரளா சென்று செட்டிலாகியுள்ளனர்.

தமிழில் மொழி, காவிய தலைவன், வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட சில படங்களில் நடித்த பிருத்திவி மலையாளத்தில் பல அசத்தலான படங்களில் வடித்து வருகிறார். மலையாளம் மட்டுமல்ல தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் நந்தனம் என்ற மலையாள படத்தில் நடிக்கும்போது, இப்படத்தில் ரேவதி, நவ்யா நாயர், சித்திக், இன்னசன்ட் என பலரும் நடித்துள்ளார். ஆனால், பிருத்விக்கு இப்படத்தில் நடிக்க ஆர்வமே இல்லையாம். நடிப்பு நம் வாழ்க்கைக்கு செட் ஆகுமா? என்ற குழப்பத்தில் இருந்தாராம்.

பிருத்வி குழப்பத்தில் இருந்ததை ரேவதி கவனித்திருக்கிறார். உடனே பிருத்வியை அழைத்து, என்ன பிருத்வி ஒரே குழப்பத்தில் இருக்கிறாரா. முகமே வாடியதுபோல இருக்கிறதே என்று கேட்டுள்ளார். அதற்கு பிருத்வி எனக்கு சினிமா செட் ஆகுமா என்ற குழப்பம் இருக்கிறது என்று கூறினாராம். இதைக் கேட்ட ரேவதி, பிருத்வி உனக்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கு… உனக்கு நிறைய திறமைகள் இருக்கிறது. உன் ஆர்வத்தை மட்டும் குறைத்துக்கொள்ளாதே என்று அறிவுரை கூறியுள்ளாராம். ரேவதி சொன்ன இந்த உற்சாகத்தை கேட்டு பிருத்வி மனதில் இருந்த குழப்பம் அடியோடு மறைந்துவிட்டதாம். களத்தில் இறங்கி ஒரு கலக்கு கலக்கி அசத்தினாராம்.

author avatar
Gayathri