நாளை முதல் அமலாகும் 144 தடை உத்தரவு! இதுதான் காரணமா மக்கள் அவதி!

Photo of author

By Parthipan K

நாளை முதல் அமலாகும் 144 தடை உத்தரவு! இதுதான் காரணமா மக்கள் அவதி!

Parthipan K

Prohibition order 144 will come into effect from tomorrow! This is the reason people suffer!

நாளை முதல் அமலாகும் 144 தடை உத்தரவு! இதுதான் காரணமா மக்கள் அவதி!

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் சென்னை, திருச்சி, தஞ்சை மற்றும் கோவை ஆகிய இடங்களில் ஜி 20 க்கான நிகழ்வுகள் நடத்தப்பட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.இதன் மூலம் கடந்த டிசம்பர் மாதம் முதல் வரும் நவம்பர் மாதம் வரை 200 க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் கருத்தரங்குகள் இந்தியாவில் உள்ள 56 நகரங்களில் நடைபெறுகின்றது.

மேலும் புதுச்சேரியில் ஜி 20 மாநாடு நடக்கும் இடம்,பிரதிநிதிகள் தங்கும் விடுதி உள்ளிட்ட ஐந்து இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.அதனை தொடர்ந்து நாளை காலை முதல் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலாகும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

மேலும் இந்தியாவில் சென்னை,கோவை,திருச்சி,தஞ்சை உள்ளிட்ட நகரங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இந்த மாநாட்டில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய 20 நாடுகளை கொண்டு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.