பள்ளிப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அறிவிப்பு! விடைத்தாள்கள் திருத்தும் பணி தீவிரம்! 

0
183
#image_title

பள்ளிப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அறிவிப்பு! விடைத்தாள்கள் திருத்தும் பணி தீவிரம்!

தமிழகமெங்கும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வும் முடிவடையும் நிலையில், தேர்வு முடிவுக்கான தேதியை அரசு அறிவித்துள்ளது.

பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு, கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 3ம் தேதி முடிவடைந்தது, +1 பொது தேர்வு ஏப்ரல் 5ம் தேதி முடிவடைந்தது.

தற்போது 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களின் வினாத்தாள் திருத்தும் பணி நடந்து கொண்டிருக்கிறது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வும் நாளை மறுநாள் முடிவடைகிறது.

இந்நிலையில் தேர்வுகள் முடிவடைய உள்ளதால் விடைத்தாள்களை திருத்தும் பணியை மே-3 க்குள் முடிந்துவிடும். எனவும் அரசு தெரிவித்துள்ளது.

இதை தொடர்ந்து மே 5ம் தேதி +2 தேர்வு முடிவும்,

மே 10-ம் தேதி +1 தேர்வு முடிவும்,

மே 19-ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.

author avatar
Jayachithra