சுண்டைக்காய் போது! உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!

0
81

சுண்டைக்காய் போது! உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!

நாம் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் சுண்டைக்காய் வற்றல் அதில் உள்ள நன்மைகளை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம்.

முதலில் சுண்டைக்காய் வற்றலை நன்றாக வெயிலில் காயவைத்து அதனை சிறிதளவு நெய்யுடன் கலந்து வறுத்து பொடியாக்கி உணவுடன் கலந்து கலந்து சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம் மற்றும் மயக்கம், உடல் சோர்வு வயிற்று பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.

சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சீரகம், வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அதனை குடித்து வந்தால் இருமல் குணமடையும்.மேலும் ரத்தத்தை சுத்தப்படுத்தி உடல் சோர்வை நீக்கும். தலைசுற்றல் வாந்தி, மயக்கம் ஆகியவற்றை குணப்படுத்துகிறது.

சுண்டைக்காயை உப்புடன் கலந்து புளித்த மோரில் இரண்டு முறை ஊறவைத்து காயவைத்து நெய்யில் வறுத்து உணவில் கலந்து சாப்பிடுவதன் மூலம் மார்பு சளி, இருமல், காசநோய் ஆகியவற்றை குணப்படுத்துகிறது.

author avatar
Parthipan K