சி.ஐ.எஸ் உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டத்தில் ராஜ்நாத் சிங்

0
196
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ரஷியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று அவர் ரஷியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ரஷிய ஆயுதப்படைகளின் பிரதான கதீட்ரல் மற்றும் மாஸ்கோவில் உள்ள அருங்காட்சியக வளாகத்தை பார்வையிட்டார். உயிர்நீத்த வீரர்களின் நினைவிடத்தில் மலர் வைத்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் பாதுகாப்புத்துறை மந்திரிகள், கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு (சி.எஸ்.டி.ஓ) மற்றும் சி.ஐ.எஸ் உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டத்தில்  ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.
Previous articleரயில்வே துறையில் வேலை! மாத சம்பளம் 95,000 !
Next articleதடுப்பூசி குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here