திருப்பதியில் இன்று தொடங்குகிறது பிரமோற்சவ விழா!
திருப்பதி ஏழுமலையான் சன்னதியில் இன்றைய தினம் பிரம்மோற்சவ விழா ஆரம்பமாகி வரும் 5ம் தேதி வரையிலும் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கோவில் ஊர்கள் மற்றும் வெளிப்புறங்களில் பல வண்ண மலர்களாலும், விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது. வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதால் திருமலை முழுவதும் வண்ணமயமாக ஜொலிக்கிறது. பிரம்மோற்சவ விழா நடைபெறுவதை முன்னிட்டு நேற்று மாலை அங்குரார்பணம் நடைபெற்றது. பிரமோற்சவத்திற்கு முந்தைய நாள் அங்குரார் பணம் நடைபெறுவது வழக்கம். நேற்று மாலை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விஸ்வேஸ்வரர் மாடவீதியில் திருவீதி … Read more