ஐந்து வாரத்தில் திருமண யோகம் கூடி வர ஆண் மற்றும் பெண் செய்ய வேண்டிய பரிகாரம்!!

0
111
#image_title

ஐந்து வாரத்தில் திருமண யோகம் கூடி வர ஆண் மற்றும் பெண் செய்ய வேண்டிய பரிகாரம்!!

மாப்பிள்ளை தேடும் பெண் செய்ய வேண்டிய பரிகாரகம்:-

வியாழக் கிழமை வீட்டை துடைத்து விட்டு வெள்ளிக்கிழமை அதிகாலையில் தலைக்கு குளித்து கொள்ளவும். பின்னர் புதிதாக வாங்கிய 2 அகல் விளக்கை எடுத்து கொண்டு அருகில் இருக்கும் அம்மன் கோயிலுக்கு செல்லவும். அடுத்து அந்த அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி கொள்ளவும்.

அடுத்து ஒவ்வொரு அகல் விளக்கிலும் 2 மருதாணி இலைகளை போட்டு அதனுடன் மஞ்சள் திரி போட்டு விளக்கேற்றவும். பின்னர் சன்னதியில் உள்ள அம்மனிடத்தில் வரன் சீக்கிரம் அமைந்தால் திருமணத்தை மண்டபத்தில் நடத்தாமல் எதாவது பெரிய கோயிலில் நடத்துகிறேன் என்று வேண்டிக் கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து 5 வாரத்திற்கு வெள்ளிக்கிழமை அன்று செய்யவும். விரும்புபவர்கள் வரவேற்பை மண்டபத்தில் வைத்துக் கொள்ளலாம்.

பெண் தேடும் மாப்பிள்ளை செய்ய வேண்டிய பரிகாரம்:-

ஞாயிறு அல்லது புதன் கிழமை அதிகாலையில் தலைக்கு குளித்து விட்டு புதிதாக வாங்கிய அகல் விளக்கு இரண்டை எடுத்துக் கொண்டு உங்கள் வீட்டருகில் இருக்கும் பிள்ளையார் கோயிலுக்கு செல்லவும்.

பின்னர் அந்த விளக்குகளில் தேங்காய் எண்ணெய் ஊற்றி ஒவ்வொன்றிலும் 2 மருதாணி இலைகளை போட்டுக் கொள்ளவும். அடுத்து மஞ்சள் திரி போட்டு விளக்கேற்றவும். பின்னர் பிள்ளையார் இடத்தில் வரன் சீக்கிரம் அமைந்தால் திருமணத்தை மண்டபத்தில் நடத்தாமல் எதாவது பெரிய கோயிலில் நடத்துகிறேன் என்று வேண்டிக் கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து 5 வாரத்திற்கு ஞாயிறு அல்லது புதன் அன்று செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் விரைவில் திருமண யோகம் கூடி வரும். விரும்புபவர்கள் திருமண வரவேற்பை மண்டபத்தில் வைத்துக் கொள்ளலாம்.