கொரோனா நோயாளிகளுக்கு உதவும் ரோபோக்களை வடிவமைத்த சென்னை இளைஞர்

0
195

கொரோனா நோயாளிகளுக்கு உதவும் ரோபோக்களை வடிவமைத்த சென்னை இளைஞர்

உலகெங்கும் கொரோனா வைரஸ் தாக்குதலினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை லட்சத்தை எட்டியுள்ளது. இதில் நோய் பாதித்தவர்களுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.

இது போன்ற உயிரிழப்புகளைத் தடுப்பதற்காக ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளார் சென்னையைச் சேர்ந்த ஹேம்நாத்.

இவர் தயாரித்த ரோபோவை வயர்லெஸ் ஆப் பின் வசதியைக் கொண்டு இயங்க வைக் முடியும். இந்த ரோபோ கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு உணவும் மருந்தும் கொண்டு தர உதவுகிறது.

அது மட்டுமின்றி அவர்களுக்குக் காய்ச்சல் இருக்கிறதா என்பதை அந்த ரோபோவே ஆராய்ந்துக் கூறி விடும். மேலும் தனிமையில் வாடும் கொரோனா நோயாளிகளுக்கு அதிகளவில் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

கொரோனா நோயாளிகளுக்கு உதவும் ரோபோக்களை வடிவமைத்த சென்னை இளைஞர்

அவர்களின் தனிமையைப் போக்கி அவர்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்கிறது இந்த ரோபோ. இந்த ரோபோ மிகக் குறைந்தச் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதனால் நோய் பாதித்தவர்களிடமிருந்து மருத்துவர்களும் செவிலியர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். இந்த அரிய கண்டுபிடிப்பை அரசாங்கத்தின் அனுமதிப் பெற்று அதைப் பயன்படுத்த வேண்டும் என்பதே அவருடைய ஆசை.

Previous articleஇஎம்ஐ கட்டச்சொல்லி செல்போனுக்கு குறுஞ்செய்தி வருகிறதா.? நீங்கள் இதை செய்யுங்கள் போதும்.!!
Next articleஊரடங்கு உத்தரவை மீறினால் கட்டாய சிறை! வெளிமாநிலத்தவரை விரட்டினால் கடும் நடவடிக்கை! -அமைச்சர் அதிரடி பேச்சு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here