டிக் டாக் மூலம் பிரபலமான ரவுடி பேபி சூர்யா மீண்டும் சிறை பயணம்!! மதுபோதையில் தீக்குளிப்பு நாடகத்தால் நேர்ந்த சம்பவம்!!

0
159
Rowdy baby Surya made famous by Tik Tok goes to jail again!! The incident happened due to drunken arson!!
Rowdy baby Surya made famous by Tik Tok goes to jail again!! The incident happened due to drunken arson!!

டிக் டாக் மூலம் பிரபலமான ரவுடி பேபி சூர்யா மீண்டும் சிறை பயணம்!! மதுபோதையில் தீக்குளிப்பு நாடகத்தால் நேர்ந்த சம்பவம்!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் சூர்யாதேவி. இவர் டிக் டாக்கில்  தனது பெயரை மாற்றி ரவுடி பேபி சூர்யா என்று வைத்து சினிமா நடிகைகள், அரசியல் பிரமுகர்களை திட்டி அதன் மூலம் பிரபலமானவர். இவருக்கு ஒரு மகன்,  மகள் உள்ளனர். இவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இவர் அடிக்கடி சிறைக்கு செல்லுவது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில் ஜூன் 21  ஆம் தேதி மணப்பாறை காவல் நிலையத்தில் எனது கணவர் மற்றும் எனது சசோதரர் தன்னை அடித்து கொடுமை பண்ணுவதாக கூறி  போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.  அதேபோல அவரின் சகோதரர் மனைவியும்  சூர்யா மீது புகார் அளித்துள்ளார்.

அதனையடுத்து ஜூன் 23 ஆம் தேதி இரு தரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்கள். ஆனால் இதற்கு சூர்யா ஒத்துழைக்காமல் சென்றுவிட்டதாக  கூறப்படுகிறது .

இன்று  தனது  புகார் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள் என்று  மதுபோதையில் சூர்யா காவல் நிலையத்திற்குள் சென்றுள்ளார்.  அங்கு சென்று காவலர்களை தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். அதன்பின் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். அதனை தடுத்த காவலர்கள் அவர் மீது  தண்ணீர் ஊற்றினார்கள் .

தலைமைக் காவலர் அளித்த புகாரினால் சூர்யா மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர் மீது காவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது மற்றும் தகாத வார்த்தையால் திட்டியது போன்ற வழக்குகளை பதிவு செய்து கைது செய்துள்ளார்கள். அதன்பின்னர் அவர் மணப்பாறை குற்றவியல் நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தினர். மேலும் நீதிபதிகள்  அவரை  அடுத்த மாதம் ஜூலை 6 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டனர். தற்போது அவர் திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

author avatar
Jeevitha