RTI வளையத்துக்குள் வந்தது உச்சநீதிமன்றம்! மர்மமான வழக்குகளை பற்றி தகவல் வெளி கொண்டுவரப்படுமா?

Photo of author

By Parthipan K

RTI வளையத்துக்குள் வந்தது உச்சநீதிமன்றம்! மர்மமான வழக்குகளை பற்றி தகவல் வெளி கொண்டுவரப்படுமா?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உச்சநீதிமன்ற அலுவலகமும் கொண்டு வரவேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்,. கடந்த 2010ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற அலுவலகமும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது,.

இதனைத்தொடர்ந்து உச்சநீதிமன்ற பதிவாளர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது,. சுமார் 10 ஆண்டுகளாக நடைபெறும் இந்த வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியது,.

தீர்ப்பில், உச்சநீதிமன்றத்தின் அலுவல் சார்ந்த விஷயங்களில் உள்ள வெளிப்படைத்தன்மையை நாட்டு மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இனி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உச்சநீதிமன்ற அலுவலகமும் உடனடியாக கொண்டுவர வேண்டும் என்று உத்தரவிட்டனர் நீதிபதிகள்,.

இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற அலுவலகத்தில் உள்ள வழக்கு விபரங்களையும் காலகட்டங்களையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தனிநபர்கள் கேட்டுப் பெறலாம்,. இதன் மூலம் நீதிமன்றமும் தனது வெளிப்படைத் தன்மையை மக்கள் முன் கொண்டு வர ஒத்துழைத்துள்ளது பாராட்டுக்குரியது. தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் இந்த சட்டத்தின் மூலம் நீதிமன்றத்தில் நடைபெறும் பல மர்மமான வழக்குகள் பற்றிய தகவல்களை கொண்டுவருவார்கள் என்று ஆவலாக சட்ட ஆர்வலர்கள் உள்ளனர்.