ராகுல் காந்தி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!! தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது!!

0
38
Sensational verdict in Rahul Gandhi case!! Punishment cannot be suspended!!
Sensational verdict in Rahul Gandhi case!! Punishment cannot be suspended!!

ராகுல் காந்தி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!! தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது!!

முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்கு குறித்து குஜராத் மாநில உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழந்கியுள்ளது.

இந்த வழக்கில் இருக்கும் பின்னணியாக, 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துக்கொண்ட ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் விதமாக பேசினார்.

அதாவது, “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப்பெயர் இருப்பது எப்படி” என்று கூறி இருந்தார். இவருடைய இந்த பேச்சால் சமூக மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இவ்வாறு ராகுல் பேசியதற்காக குஜராத் முன்னாள் அமைச்சரும், பாஜக எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோடி இவர் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம் கடந்த மார்ச் 23 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.

அந்த தீர்ப்பில் ராகுல் காந்தி குற்றவாளி என்றும், இவருக்கு இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 499 மற்றும் 500 யின் கீழ் அதிகபட்ச தண்டனையாக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், மேலும் 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

எனவே இந்த வழக்கை குஜராத் உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். தற்போது இந்த வழக்கிற்கு தீர்ப்பு வந்துள்ளது. இந்த தீர்ப்பில் “சூரத் நீதிமன்றம் வழங்கிய இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க முடியாது. அது சரியானது தான் என்றும் இதற்கு எந்த வகையிலும் தடை கோர முடியாது என்று கூறி உள்ளனர்.

இது குறித்து பேசிய காங்கிரசின் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நாங்கள் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்றும் ராகுல் காந்தியை முடக்கி விட முடியாது என்றும் கூறி வருகிறார்.

author avatar
CineDesk