விஜய் டிவியை ஓரங்கட்டி விட்டு பிரபல டிவி சீரியலில் களமிறங்கிய செந்தில்- ராஜலட்சுமி.!!

0
91

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான செந்தில்-ராஜலட்சுமி தம்பதியினர், வேறு ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் செந்தில் ராஜலட்சுமி தம்பதியினர். மனம் மயக்கும் கிராமிய பாடலை பாடி பட்டிதொட்டியெங்கும் பிரபலமான தம்பதிகளாக மாறினர்.

அதனைத் தொடர்ந்து, விஜய் டிவியின் பல்வேறு ரியாலிட்டி ஷோக்களிலும் இவர்கள் பங்கேற்று வந்தனர். இந்நிலையில் பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும், பிரபல தொடரில் நடித்துள்ளனர். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கலர்ஸ் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் ‘இதயத்தை திருடாதே’ என்ற சீரியலில் செந்தில்-ராஜலட்சுமி தம்பதியினர் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர். தற்போது, அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சியாக அவர்கள் இருவரும் நடித்த சீரியல் எபிசோட் ஒளிபரப்பாகவுள்ளது. நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சியாக இவர்கள் பாடல் பாட வந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

https://www.instagram.com/p/CUylbX7hkB6/?utm_source=ig_web_copy_link