ஓய்விற்கு பிறகு சைலேந்திர பாபுவின் பதிவு!! மாணவர்களுடன் பயணம்!!

0
61
Shailendra Babu's Post After Retirement!! Traveling with students!!
Shailendra Babu's Post After Retirement!! Traveling with students!!

ஓய்விற்கு பிறகு சைலேந்திர பாபுவின் பதிவு!! மாணவர்களுடன் பயணம்!!

தமிழகத்தில் காவல்துறையின் தலைவராக இருந்தவர் டிஜிபி சைலேந்திர பாபு. இவர் வெள்ளிக்கிழமையான நேற்று தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இவர் ஓய்வு பெறுவதற்கு முன்பாக மக்களுக்கு நிறைய விழிப்புணர்வு செய்திகளையும், அறிவுறுத்தல்களையும் வழங்கி வந்தார். மேலும் தமிழகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட டிரோன் காவல் பிரிவை துவங்கி வைத்தார்.

இவரின் பணி ஓய்விற்கு பிரிவு உபசார விழா எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடந்து முடிந்தது. இந்த விழாவில் டிஜிபி சங்கர் ஜிவால் அவர்கள் சைலேந்திர பாபுவிற்கு தனது நினைவுப் பரிசினை அளித்தார்.

அந்த வகையில் தற்போது ஓய்வுப் பெற்ற சைலேந்திர பாபு இனி மாணவர்களுடன் என்னுடைய பயணம் தொடரும் என்று கூறி உள்ளார். இது குறித்து சமூக வலைதளங்களில் ஒரு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில், நான் காவல்துறை பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். இனி மானவர்களுடன் நமது பயணம் தொடரும் என்று அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரின் பணி ஓய்விற்கும் சிலர் வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர்.