அதிர்ச்சி நியூஸ்! சோற்றில் உப்பு அதிகமாக போனதால் மருமகளை சுட்டு கொன்ற மாமனார்! 

0
154

அதிர்ச்சி நியூஸ்! சோற்றில் உப்பு அதிகமாக போனதால் மருமகளை சுட்டு கொன்ற மாமனார்

இந்த காலத்திலும் மருமகள் கொடுமை நடக்கிறது. வீட்டிருக்கு வந்த மருமகளை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துகிறார்கள். இந்த சம்பவம் நீண்ட காலமாக தொடர்கிறது.இதை தொடர்பாக உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் கபூர் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு வயது எண்பது.இவர் அனைவர் மீது அதிகமாக கோபம் கொள்பவர். அனைவருக்கும் தினம்தோறும் மருமகள் தான் சமையல் அறைக்கு சென்று  சமைப்பர். சமைக்கும் போது தனது கவன குறைவின் காரணமாக சோற்றில் உப்பு கொஞ்சம் அதிகமாக சேர்த்துவிட்டார்.கடந்த 2 நாட்களுக்கு முன்பு, சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, சோற்றில் உப்பு கொஞ்சம் அதிகமாக உள்ளதாக மருமகளிடம் சண்டையிட்டுள்ளார். தகாத வார்த்தையால்  பேசினர்.கோபம் தாங்காமல் மருமகளும் எதிர்த்து பேசினால். என்னையே எதிர்த்து பேசி விட்டாயா என்று கோபம்  தலைக்கேறிய அவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து மருமகளை சுட்டுகொன்றார். தகவலை அறிந்த போலீசார் உடனே அவ்விடத்திர்க்கு சென்று விசாரணை நடத்தினார்கள். ஆனால் போலீசார் விசாரணையில், தனது வீட்டில் திருடர்கள் புகுந்ததால், நான் அவர்களை சுட முயன்ற போது எதிர்பாராத விதமாக மருமகள் மீது குண்டு பாய்ந்ததாக கண்ணீருடன் கூறினார். இருப்பினும் அவரை நம்பாத காவல்துறையினர் தீவிரமாக விசாரித்தனர். விசாரணையின் போது இவர் அதிகமாக கோபம் கொண்டவர் என்று தெரிய வந்தது இதையடுத்து அவர் மீது எழுந்த சந்தேகத்தால் தீவிரமாக விசாரித்ததில்,அதன் பின்னர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

Previous articleKanavu Palangal in Tamil : இப்படி கனவு கண்டால் இவள்ளவு பயன்களா?
Next articleஅட்ரா சக்க..!போட்டோ எடுத்தால் 500 ரூபாய் ரொக்கப் பரிசு!!