கடன் தீர்ந்து பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்..!!

0
79
#image_title

கடன் தீர்ந்து பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்..!!

கடன் இல்லாத வாழக்கையை வாழ அனைவரும் விரும்புவோம். ஆனால் ஏதோ ஒரு இக்கட்டான சூழலில் பணத் தேவை ஏற்பட்டு கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம்.

வாங்கியது சிறியத் தொகையாக இருந்தாலும் அதற்கு வரும் வட்டியால் அசலையும் கட்ட முடியாமல், வட்டியையும் கட்ட முடியாமல் திண்றும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம். இப்படி நம் வாழ்வில் தீராத பிரச்சனையாக இருக்கும் கடனை விரைவில் அடைக்க சில பரிகாரத்தை செய்வது நல்லது. இதனால் வாங்கிய கடனை அடைத்து வீட்டில் பண சேர ஆரம்பிக்கும்.

கடன் தீர்ந்து பண வரவு அதிகரிக்க பரிகாரம்:-

ஒவ்வொரு வாரமும் வியாழக் கிழமை அன்று 1 பாக்கெட் குங்குமம் மற்றும் 1 பாக்கெட் மஞ்சள் தூள் வாங்கி வீட்டு பூஜை அறையில் வைக்கவும்.

மறுநாள் வெள்ளிக்கிழமை காலையில் அருகில் உள்ள எதாவது ஒரு அம்மன் கோயிலுக்கு சென்று அந்த மஞ்சள், குங்குமத்தை கொடுத்து விடுங்கள்.

கொடுப்பதற்கு முன் எங்கள் கடன்கள் விரைவில் அடைய வேண்டுமென்று மனதில் நன்றாக வேண்டிக் கொள்ளுங்கள்.

இதை தொடர்ந்து 9 வாரங்கள் செய்து வரவும். அதற்குள் கடன் தீர வழி பிறந்து விடும்.

கடைசி வாரம் போகும் போது கடன் அடைந்தவுடன் 1 கிலோ மஞ்சள் தூள் மற்றும் 1 கிலோ குங்குமம் வாங்கிக் கோயிலுக்குக் கொடுக்கிறேன் என்று வேண்டிக் கொள்ளவும்.

மற்றொரு எளிய பரிகாரம்…

ஒரு சிறிய மஞ்சள் துணி எடுத்துக் கொண்டு அதில் 27 மிளகு எண்ணி வைத்து முடுச்சிப் போடவும்.

ஒரு சிறிய அகல் விளக்கில் மஞ்சள், குங்குமம் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி கொள்ளவும். திரிக்கு பதிலாக அந்த முடிச்சை விளக்கில் வைத்து தினமும் காலை வேளையில் தீபம் ஏற்றவும்.

அது தானாக முழுமையாக எரிந்து நிற்க வேண்டும். மறுநாள் விளக்கை சுத்தம் செய்து இதே போல் புது முடிச்சில் தீபம் போடா வேண்டும்.

இதேபோல் தொடர்ந்து 48 நாட்கள் செய்து வர கடன் தீர வழி பிறக்கும். பழைய மிளகை ஒன்றாக சேர்த்து வைத்து 48 நாட்கள் கழித்து கால் படாத இடத்தில் போடவும்.