இளநரையை ஒரே வாரத்தில் கருமையாக மாற்ற உதவும் மூலிகை எண்ணெய்!!

0
30
#image_title

இளநரையை ஒரே வாரத்தில் கருமையாக மாற்ற உதவும் மூலிகை எண்ணெய்!!

இன்றைய சூழலில் இளநரை வருவது என்பது எளிதான பாதிப்புகளில் ஒன்றாகி விட்டது.
இதற்கு வாழ்க்கை முறையும், உணவு முறை மாற்றமுமே முக்கிய காரணம் ஆகும்.

இளநரை உருவாகக் காரணங்கள்:-

ஊட்டச்சத்து இல்ல உணவு, இரசாயனம் கலந்த ஷாம்பு உபயோகித்தல், தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருத்தல், முறையற்ற தூக்கம், மன அழுத்தம்.

நரை முடியை கருப்பாக மாற்ற எளிய வழி:-

தேவையான பொருட்கள்:-

*தேங்காய் எண்ணெய்

*கருஞ்சீரகம்

*கறிவேப்பிலை

*கரிசலாங்கண்ணி பொடி

மூலிகை எண்ணெய் தயாரிக்கும் முறை…

அடுப்பில் ஒரு இரும்பு கடாய் வைத்து அதில் 1 கப் தேங்காய் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து சூடுபடுத்தவும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் 2 தேக்கரண்டி அளவு கருஞ்சீரகத்தை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து சூடாகி கொண்டிருக்கும் எண்ணெயில் சேர்க்கவும்.

அடுத்து மிக்ஸி ஜாரில் 1 கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்து மைய்ய அரைத்து சூடாகி கொண்டிருக்கும் எண்ணெய் கலவையில் சேர்த்து கிளறவும்.

தேங்காய் எண்ணெயின் நிறம் மாறி வந்ததும் எடுத்து வைத்துள்ள 1 தேக்கரண்டி கரிசலாங்கண்ணி பொடியை அதில் சேர்த்து காய்ச்சி அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலில் வடிகட்டி சேமித்து வைக்கவும். இந்த மூலிகை எண்ணெயை தினமும் தலைக்கு தேய்த்து வந்தோம் என்றால் இளநரை அனைத்தும் அடர் கருமையாக மாறிவிடும்.