சிவபெருமானை லிங்க வடிவில் வழிபட இது தான் காரணமா?!! மறைந்த ரகசியம்!!

0
158

சிவலிங்கம் என்றால் உருவமற்ற ஒரு அறுவை வடிவிலான பொருளின் அடையாளம் என்று பொருள். கை மற்றும் கால் போன்ற எந்த ஒரு உருவ அமைப்பும் இல்லாமல், அருவ வடிவில் பிரகாசிக்கும் சிவபெருமானின் அடையாளம் லிங்க வடிவமாகும்.

இந்த உலகில் பெயர் மற்றும் உருவத்துடன் தோன்றும் அனைத்தும் இறுதியில் அதன் உருவம் மறைந்து, அருவமாக இறைவனிடத்தில் வந்து சேரும் என்னும் சிறப்பு லிங்கத்திடம் உண்டு. ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு முதல் நாள் கிருஷ்ணபட்ச சதுர்த்தி அன்று சிவராத்திரி ஏற்படும்.

ஜோதி ஸ்வரூபமாக பரமேஸ்வரன் நிற்கும்பொழுது, விஷ்ணு அவரது பாதத்தை பார்க்க பாதாளத்துக்கு போனார். வராகத்தை எடுத்து கொண்டு சென்றார். பூமியை கொடையும் ஆற்றல் அதற்கு உண்டு.. பிரம்மம் பறந்து ஜோதி லிங்கத்தின் முடிவை தேடி போனார்.

இரண்டு பேருக்கும் தேடிப் போன முடிவு அகப்படவில்லை. ஹம்சம் வந்தது ‘நான் கண்டு விட்டேன்’ என்று அவர் பொய் கூறினார். அதனால் பிரம்மாவுக்கு பிரத்தியேகமாக பூஜை இல்லாமல் போய்விட்டது. மாசி மாதத்தில் நிகழும் இந்த நாள் மகாசிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.

இந்த மகா சிவராத்திரி அன்று நள்ளிரவு நேரத்தில் சிவலிங்கத்தின் வடிவத்தில் சிவன் தோன்றினார் என்கிற ஆன்கம சாஸ்திரங்கள் கூறுகிறது. இவரே லிங்கோத்பவ மூர்த்தி என அழைக்கப்படுகிறார். அந்த நாள் முதல் சிவனை பக்தர்கள் லிங்க வடிவில் பூஜிக்க ஆரம்பித்துவிட்டார்கள் தொடங்கிவிட்டார்கள்.

author avatar
Jayachithra