ஆறாம் வகுப்பு மாணவி திடீரென தூக்கிட்டு தற்கொலை! 

ஆறாம் வகுப்பு மாணவி திடீரென தூக்கிட்டு தற்கொலை!

மதுரை மாவட்டம் மேலூர் திருவள்ளூர் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலஸ்ரீ 35. இவருக்கு 9 வயதுள்ள மகள் ஒன்று உள்ளது. அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்து படிக்க வைத்தனர். இந்நிலையில் பள்ளிக்கு செல்ல பிடிக்காமல் மன வேதனையில் பல நாட்களாக இருப்பதாக கூறியிருந்தார். சில நாட்கள் இப்படியே பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தால்.

இதனால் பெற்றோர்கள் அவளை தினந்தோறும் திட்டி மிரட்டினர். இதனலேயே தினந்தோறும் திட்டுவதால் துக்கம் தாங்காமல் வீட்டிலேயே இருந்தால். இதனால் என்ன செய்வது என்று அறியாமல் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இந்த மாணவி தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்ட பெற்றோர் துக்கம் தாங்காமல் கதறி அழுந்தனர்.

உடனடியாக அவளை மீட்ட பெற்றோர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காமல் அச்சிறுமி பரிகாரமாக உயிர் இழந்தார். சிறுமியின் இறப்பை குறித்து மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரியாக படிக்கவில்லை என தாய் கண்டித்ததால் விபரீத முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலூர் பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Comment